இறந்தவர்களின் ஓட்டுகள் மட்டுமே எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கப்படுகிறது: காங்., - எம்.பி., கார்த்தி கருத்து
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை : ''எஸ்.ஐ.ஆர்., பணிகளில், இறந்தவர்கள் ஓட்டு மட்டுமே நீக்கப்படுகிறது,'' என காங்., -எம்.பி., கார்த்தி தெரிவித்தார். சிவகங்கையில் அவர் அளித்த பேட்டி: தமிழக வெற்றி கழகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் த.வெ.க., சென்றது அந்த கட்சிக்கு பலம்; அ.தி.மு.க.,விற்கு பலவீனம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், இந்த பணிகளை முன்னதாகவே ஆரம்பித்து இருந்தால், ஊழியர்களுக்கு பணிச்சுமை இருந்திருக்காது. இப்பணியால் ஓட்டுகள் குறைய வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள் ஓட்டுகள் மட்டுமே நீக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், என் கருத்து, தி.மு.க.,விற்கு எதிரான கருத்து இல்லை. இது சிந்தித்து கூறக்கூடிய கருத்து. தமிழக சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது. தமிழக மக்கள் பா.ஜ.,வை முழுமையாக ஏற்கவில்லை. இந்த தேர்தலிலும் பா.ஜ.,விற்கு வரவேற்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே,சென்னை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை' என காங்., - எம்.பி., கார்த்தி கூறிய கருத்தால், தி.மு.க., மற்றும் காங்., தரப்பு எரிச்சல் அடைந்துள்ளன.