வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடந்த முறை கோவையில் ரெட் அலெர்ட் கொடுத்த சமயத்தில் நல்ல வெயில் அடித்தது . எதை நம்புவது
வானிலை மையம் சொல்வது ஒன்றும் பலிப்பதில்லை... தமிழகத்தில் வெயில் தான் அடித்துக் கொளுத்துகிறது
சென்னை: வரும் ஜூன் 13, 14, 15 ம் தேதிகளில் கோவை மலைப் பகுதிகள், நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0g9g3nro&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கிருஷ்ணகிரி* தர்மபுரி* திருப்பத்தூர்* வேலூர்* ராணிப்பேட்டை* திருவண்ணாமலை*விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* மயிலாடுதுறை* அரியலூர்நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* வேலூர்* திருவண்ணாமலை* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தர்மபுரி* ஈரோடுஜூன் 13, 14, 15 ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்* நீலகிரி* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்* திண்டுக்கல்* தேனி* தென்காசி* கன்னியாகுமரி* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த முறை கோவையில் ரெட் அலெர்ட் கொடுத்த சமயத்தில் நல்ல வெயில் அடித்தது . எதை நம்புவது
வானிலை மையம் சொல்வது ஒன்றும் பலிப்பதில்லை... தமிழகத்தில் வெயில் தான் அடித்துக் கொளுத்துகிறது