மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 23
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
7 hour(s) ago | 10
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago
மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று(ஜன.,16) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் கார் பரிசாக வென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zty86t75&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று (ஜன.,15) பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 900 மாடுகள் அவிழ்க்கப்பட்டன, 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.8 காளைகள்
10ம் சுற்றின் முடிவில் 840 மாடுகள் அவிழ்க்கப்பட்டது. இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்று கார் பரிசாக பெற்றார். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 10 காளைகளை அடக்கி 2ம் இடத்தையும் கொந்தகையை சேர்ந்த பாண்டீஸ்வரன் தலா 8 காளைகளை அடக்கி 3ம் இடத்தையும் பிடித்தனர்.கார், பைக் பரிசு
2வது இடம் பிடித்த தமிழரசனுக்கு அப்பாச்சி பைக் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. அதேபோல், சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னக்கருப்பு என்ற காளைக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது.40 பேர் காயம்
9 சுற்றுகள் முடிவில் மாடுபிடி வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் 3 பேர் என மொத்தம் 40 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 பேர் படுகாயமடைந்தனர்தகுதி நீக்கம்
ஜல்லிக்கட்டில் 15 காளைகளும், மது அருந்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 32 வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.டிஎஸ்பி காயம்
ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மதுரை குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயராஜன் காயமடைந்து முதலுதவி மையத்தில் சிகிச்சை பெற்றார்.
1 hour(s) ago | 23
7 hour(s) ago | 10
9 hour(s) ago