உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் புதிய ரயில் பாலம்; மார்ச்சில் மோடி திறந்து வைக்கிறார்!

பாம்பன் புதிய ரயில் பாலம்; மார்ச்சில் மோடி திறந்து வைக்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் மார்ச் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.பாம்பன் கடலில் 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஜன.,31ல் ரயில் இயக்கி ஒத்திகை சரி பார்க்கப்பட்டது ஒத்திகையின் போது, துாக்கு பாலங்களை மூடியதும் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட சென்னை போர்ட் மெயில் ரயில் 22 காலிப்பெட்டிகளுடன் பாலத்தை கடந்து ராமேஸ்வரம் சென்றது.இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மார்ச்சில் நடக்கும் என்றும், பிரதமர் மோடி திறந்து வைப்பதாகவும், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் திறப்பு விழா நடக்கவுள்ள இடத்தை ஆர்.என்.சிங் பார்வையிட்டார். திறப்பு விழாவின் போது பிரதமர் மோடி இந்திய ரோந்து கப்பலில் இருந்தபடி புதிய பாலத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலத்தின் சிறப்பம்சங்கள்!

* புதிய ரயில் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது.* 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.* பாலத்தின் மைய பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல 27 மீட்டர் உயரத்திற்கு, 600 டன் எடையில் செங்குத்து இரும்பு தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.*செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகிலேயே இரண்டு மாடி கட்டிடத்தில் ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக அறை கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
பிப் 14, 2025 21:51

இவர் ஆரம்பித்து வைத்த எதுவுமே விளங்காதே! இதுவும் அவ்வளவு தானா?


பாமரன்
பிப் 14, 2025 20:47

கட்டுமான உலகின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஹாங்காங் மக்காவு பாலத்தை கூட சத்தமில்லாமல் தொறந்து உட்டாய்ங்க... சீன அதிபர் அவர் பாட்டுக்கு தன் வேலையை செஞ்சிக்கிட்டு இருந்தாப்ல... இங்க தான் கொஞ்ச நாளாக வந்தே பார்த்துன்னு எதுவும் இல்லன்னு இதுக்காவது கொடியாட்டுவோம்னு விஷ்வ குரு கெளம்பிட்டாப்ல.. திறப்பு விழாவில் கடல் பக்கம் பார்த்து கையாட்டும் காமெடிக்காக ஐ ஆம் வெயிட்டிங்...


Subramaniyam N
பிப் 15, 2025 14:25

It is a marvellous job done by construction team. They did great construction spending 550 crores. Then why you are worried in the inauguration by our PM. Dont worry. They are not fixing sticker on others job like Dravidian stock


V Gopalan
பிப் 14, 2025 16:18

When some facility is made for the usage of public, why at all the delay for inaguration. The SMWIT Station was waiting for considerable time for inaguration.


Ramesh Sargam
பிப் 14, 2025 13:04

புதிய பாலத்தை மோடிஜி அவர்கள் திறந்து வைப்பார். பிறகு அவர் சென்றபின், மாநில முதலவர் ஸ்டாலின்ஜி அவர்கள் அந்த பாலத்தின்மீது ஸ்டிக்கர் ஒட்டுவார் .


saiprakash
பிப் 14, 2025 17:06

முதல்ல தரவேண்டிய நிதியை கொடுக்க சொல்லு


Ray
பிப் 14, 2025 12:33

பிப்ரவரி 28 இல் மோடி திறந்து வைக்க வருவதாக டிவி செய்தி வந்துள்ளதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை