உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அரசு, போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை இழப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை: ''பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர், '' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் அரசுக்கு கண்டனம். இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வருவது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் இப்படி ஒரு நிலை வந்ததற்கு வருந்துகிறேன். காவல்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tlnt2res&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு அரசும், போலீசாரும் பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். பெண்கள் வெளியில் செல்லும் போது, தங்களை காத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 22:16

தூத்துக்குடி யில் 13 பேரை, அப்போதைய முதல்வரா இருந்த உங்களுக்கே தெரியாமல் உங்களைக் கேட்காமல் சுட்டுத் தள்ளிய போலீஸ் மட்டும் நம்பிக்கை இழந்து விட்டது. குற்றம் நடந்து 36 மணிநேரத்தில் குற்றவாளி யைக் கைது செய்து காலை உடைத்த போலீஸ் மீது நம்பிக்கை அதிகமா இருக்கு. ஆனால், அவனுக்கு ஜாமீன் கொடுத்து வெளியே விட்டிருவாங்களோ என்று நீதிமன்றம் மீது தான் நம்பிக்கை இல்லை.


இவன்
ஜன 03, 2025 04:59

கொத்தடிமை, 1 தடவ நடந்தது. இப்போ எல்லா நாளும் திருட்டு மாடல் அ இருக்கு


முக்கிய வீடியோ