உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

சென்னை: அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், ஆடித் திருவாதிரை விழா, ஜூலை 27ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக, பிரதமர் மோடி, ஜூலை 26ம் தேதி தமிழகம் வருகிறார். துாத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரயில்வே உட்பட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மதுரை - போடி இடையே, 90 கி.மீ., மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின், முன்னோட்டமாக ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது. இதேபோல், நாகர்கோவில் டவுன் - கன்னியாகுமரி 21; ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் 12; திருநெல்வேலி - மேலப்பாளையம் 4 கி.மீ., துாரம் என, மூன்று இரட்டை பாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட திட்டப் பணிகள், 1,000 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் திட்டங்களைபிரதமர் மோடி ஜூலை 26ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.n. Dhasarathan
ஜூலை 24, 2025 17:33

பிரதமர் அவர்களே கோவிட் நேரத்தில் ரத்து செய்யப்பட பல ரயில்கள் இன்னும் இயக்கப்படவிவில்லை தெரியுமா ? புதிய ரயில்கள் ஏதும் அறிவிக்க கூட இல்லை, கிராமப்புறங்களில் ரயில் சேவை மறுக்கப்பட்டதால் பல வேலை வாய்ப்புகள் தொலைந்தந வாழ்வாதாரம் தொலைந்த விவசாயிகள் எப்படி வரவேற்பார்கள் ? சும்மா திருக்குறள் சொல்லி ஏய்த்த காலம் எல்லாம் போய்விட்டது.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 11:19

1000 கோடி என்பது இன்றைய நிலையில் மிகமிகமிக சொற்பமான தொகை . காண்டிராக்டர்கள் பொறியாளர்கள் அரசியல் வாதிகள் சாப்பிட்டதுபோக மக்களுக்கு மீதி கிடைத்தாலும் கிடைக்கலாம்.


சமீபத்திய செய்தி