உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்சோ குற்றங்கள் தொடர்ந்து உயர்வு: பெற்றோருக்கு வேண்டும் விழிப்புணர்வு

போக்சோ குற்றங்கள் தொடர்ந்து உயர்வு: பெற்றோருக்கு வேண்டும் விழிப்புணர்வு

கோவை: போக்சோ குற்றங்கள் அதிகரித்து வருவதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 421 ஆக கூடியுள்ளது. வழக்கை விரைந்து முடிக்க, துரித விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர் விழிப்புடன் இருந்தால், போக்சோ குற்றங்களை தடுக்கலாம்.பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளில் அதிகரிப்பு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 2019 முதல் 'போக்சோ' வழக்குகள் முதன்மை சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்குள் விசாரணை முடித்து, தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்கிறது சட்டம்.கோவையில், 2019 டிச.,ல், போக்சோ சிறப்பு கோர்ட் திறக்கப்பட்ட போது, மாவட்டம் முழுவதும், 120 வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது. ஆனால், 2020ல், 182 ஆகவும், 2021ல், 239 ஆகவும், 2022 ல், 308 ஆகவும், 2023 ல், 353 ஆகவும், 2024ல், 421 ஆகவும் நிலுவை வழக்கு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. 2022ல், 231 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில், 206 வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2023ல், 165 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 130 வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில், 303 புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், 234 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ல், புதிய வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

நிலுவை வழக்குகளும் அதிகம்

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டுகள் வரை நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 274 ஆகவும், 2-3 ஆண்டுகள் வரை, 177 வழக்கும், 4-5 ஆண்டுகள் வரை, 52 வழக்கும், 6-10 ஆண்டுகள் வரை, 10 வழக்கும் உள்ளது. ஆகவே, வழக்குகளை விரைந்து முடிக்க, துரித விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, விரைவான விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கப்படும் பட்சத்தில், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

'போலீசாருக்கு பயிற்சி தேவை'

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, வக்கீல் வி.பி.சாரதி கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான குடும்பங்களில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்காணிக்க, நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகள் மொபைல் போனை தவறாக பயன்படுத்துவது, முக்கியமாக, மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்தல் போன்றவற்றாலும், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற குற்ற செயல்களை குறைக்கலாம். மொபைல் போன் பயன்பாடு குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'சைல்டு லாக்' போட்டு கொடுத்து விட்டால் பிரச்னை இருக்காது. போக்சோ வழக்கில், புகார் கொடுத்தவுடன், காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., போடாமல் அலைக்கழிக்கின்றனர். போக்சோ வழக்கை கையாளும் முறை போலீசாருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அவ்வப்போது தனி பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, வக்கீல் சாரதி கூறினார்.

'போலீசாருக்கு பயிற்சி தேவை'

போக்சோ குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, வக்கீல் வி.பி.சாரதி கூறியதாவது: தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான குடும்பங்களில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்காணிக்க, நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகள் மொபைல் போனை தவறாக பயன்படுத்துவது, முக்கியமாக, மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்தல் போன்றவற்றாலும், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற குற்ற செயல்களை குறைக்கலாம். மொபைல் போன் பயன்பாடு குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'சைல்டு லாக்' போட்டு கொடுத்து விட்டால் பிரச்னை இருக்காது. போக்சோ வழக்கில், புகார் கொடுத்தவுடன், காவல்துறையினர் எப்.ஐ.ஆர்., போடாமல் அலைக்கழிக்கின்றனர். போக்சோ வழக்கை கையாளும் முறை போலீசாருக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு அவ்வப்போது தனி பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, வக்கீல் சாரதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 06, 2025 13:37

பெற்றோரில் தந்தையே தவறாக நடந்து கொண்டார் .... தாயும் அதற்கு உடந்தை என்கிற செய்திகளை படித்ததில்லையா ? தமிழ்நாடு பல விஷயங்களில் விதிவிலக்கானது ..... திராவிடம் பேசிய வந்தேறிகள் கற்காலத்துக்கு தமிழனை இட்டுச் சென்று விட்டார்கள் .....


Raa
பிப் 06, 2025 11:50

"பெற்றோர் விழிப்புடன் இருந்தால், போக்சோ குற்றங்களை தடுக்கலாம்." அதுசரி சட்டமும், காவல் துறையும் பிறகு எதற்கு? அதுக்கு என்ன, த்ரேதா யுகத்திலேயே சீதையை தூக்கி செல்லும் ராவணனை ஹீரோவாக காட்டும் கலியுகம் அல்லவா இது... .


Indian
பிப் 06, 2025 09:46

கேவலமான சட்டங்களை வைத்து விட்டு , பெற்றோர் விழிப்பிக்கணுமா ?? . இதுல வேற 2037 ல வளர்ந்த நாடாக போகுதாம் ?? ...


Padmasridharan
பிப் 06, 2025 09:13

லஞ்சம் வாங்குவதற்கு காவல்துறையில் எந்த தனி பயிற்சியும் கொடுக்கப்படவில்லையே அப்படி இருக்க அதை மட்டும் இந்த அதிகார பிச்சைக்காரர்கள் எப்படி வாங்குகிறார்கள். பெற்றோர் விழிப்புடன் இருந்தும் பிள்ளைகள் TASMAC ல வாங்கி குடிப்பதில்லையா. தன்னலமிக்க காவலர்களை Suspend / Transfer செய்யாமல் Dismiss செய்தால் பல குற்றங்களும் தடுக்கப்படும்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 08:59

மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே உள்ள பிரிவினர், சிறுமிகள் வன்புணர்வு நிகழ்வு என்றால் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் இருவரில் ஒருவராகவோ, மூவரில் ஒருவராகவோ இருப்பதன் காரணம் என்ன ??


Va.sri.nrusimaan Srinivasan
பிப் 06, 2025 08:49

பெற்றோர்கள் உஷாரா இருக்கணும்


karthik
பிப் 06, 2025 08:47

பள்ளிக்கூடம் படிக்கும் போதே பலருடன் sex வைத்துக்கொள்வது பெண்ணின் உரிமை என்று ஒரு முண்டை படம் எடுத்து இருக்கிறாள் அதற்கு ஒரு கேடுகெட்ட மனிதன் பணமும் குடுத்து இருக்கிறார்.. இந்த மாதிரி பிரச்சாரம் செய்யம் படங்கள் வரும் வரைக்கும் இந்த மாதிரி குற்றங்களையும் தடுப்பது கஷ்டம்.


Priyan Vadanad
பிப் 06, 2025 08:13

சாக்கடை நாய்களை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து கொண்டாடும் வரை போலீசார், வக்கில்சார், மற்றும் "அந்த சார்" இந்த வழக்குகளை இழுத்தடித்து, நாறடித்து சரிசெய்து விடுவார்கள்.


Barakat Ali
பிப் 06, 2025 10:15

உன் திமுகவின் கைவண்ணம்தான் அடிமை ஏ ......


Svs Yaadum oore
பிப் 06, 2025 07:35

இங்குள்ள சினிமா தொலைக்காட்சி மொத்தமும் விடிய திராவிடனுங்க பிடியில் ...மொத்தமும் ஆபாசம் ....கஞ்சா போதை டாஸ்மாக் .....சாராய கம்பெனி நடத்தறவன் விடியல் மந்திரி .....ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் குத்தாட்டம் ...பள்ளி கல்வித்துறை பள்ளியில் கலைநிகழ்ச்சி என்று பள்ளி மாணவிகள் குத்தாட்டம் ...மதம் மாற்றிகள் பள்ளி பாட நூல் கழக தலைவர் என்றால் இப்படித்தான் நடக்கும் ...நான்கு வருடத்தில் நாடு சர்வ நாசம் ...


Svs Yaadum oore
பிப் 06, 2025 07:31

பெற்றோர் திருந்த வேண்டும் ..பெற்றோர் வீட்டில் குடிப்பதை நிறுத்த வேண்டும் ...இங்குள்ள திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் .......திராவிட கட்சி இங்கு பெண்களுக்கு பார் திறந்து ராமசாமி சமூக நீதி புரட்சி செய்துள்ளது ....அதன் விளைவுதான் இது ...


முக்கிய வீடியோ