உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்

அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னையில் ஆசிரமத்தில் அரசியல், ஆளுமை தலைமைத்துவம் குறித்த பயிலரங்கில், அண்ணாமலை பேசியதாவது: நமது வாக்காளர்கள் முழுவதும் வித்தியாசமானவர்கள். 40% வாக்காளர்கள் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு தான் யாருக்கு ஓட்டளிக்க போகிறோம் என்பதை முடிவு செய்கின்றனர். சித்தாந்தத்தைப் பார்த்து கட்சிக்கு ஓட்டளிப்பதில் இருந்து வாக்காளர்கள் வெளியில் வந்து விட்டனர்.ஒரு வாக்காளர் பல விஷயத்தை பார்க்கிறார்கள். பல விஷயத்தை பார்த்து ஓட்டு போடுகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தார். என்ன மாடு எல்லாம் வாக்காளர் உரிமை கேட்கிறதா? இன்னொரு அரசியல் தலைவர் மரம் ஏறி கொண்டு இருக்கிறார். இன்றைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாத்தையும் செய்கிறார்கள். மாற்றம் வரவேண்டும் என்றால் முதலில் நீங்க சரியா இருங்க. கண்மூடித்தனமாக எந்த தலைவர்களையும் எதிர்க்காதீங்க. இன்று வருவோர், போவோர் எல்லாம் தலைவர் ஆகி விடுகின்றனர். வெள்ளை சட்டை போட்டு நான்கு ரீல்ஸ் போட்டால் தலைவர் ஆகி விடுகிறார்கள். அதிகாரத்திற்கு வந்தாலும் செல்போனை ஒட்டுக் கேட்பது, பழி வாங்குவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. பழிவாங்கும் போக்கு அரசியல்வாதிக்கு இருக்கலாம், ஆனால் ஒரு தலைவனுக்கு இருக்க கூடாது. நாம் சும்மா இருந்தாலும் நமக்கு அடைமொழி கொடுத்து போஸ்டர் அடித்து விடுகின்றனர். அரசியலில் எந்த பதவியும் ஒருநாள் இல்லாமல் போவது இயல்பு தான். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

beindian
ஜூலை 12, 2025 21:29

உங்கள மாதிரி சங்கிகள் தான் மாட்டை தெய்வம் என்கிறீர்கள்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 12, 2025 22:17

கத்தாரில் ஒட்டகம் மேய்க்க போன பயபுள்ளைக்கு எம்புட்டு அறிவு? ஏலே நாங்க பசு மாட்டை எப்பவும் தெய்வமாகத்தான் பார்ப்போம். ஒட்டகம் மேய்க்கிற வேலையை ஒழுங்காக பார்.அவங்ககிட்ட சவுக்கடி வாங்காதே...


K.n. Dhasarathan
ஜூலை 12, 2025 21:24

அண்ணாமலை அது எல்லாம் இருக்கட்டும், எங்கள் ஊர் சுற்றி பிரதமர் எங்கே ? எந்த கண்டத்தில், எந்த நாட்டில் இருக்கிறார் ? சரியாக சொல்ல முடியுமா ? பிரதமராலே சொல்ல முடியாது ? பாவம் நீங்கள் எப்படி சொல்ல முடியும் ? அமெரிக்காவிற்கு மட்டும் அனுப்பி விடாதீர்கள், ஏதாவது செயற்கை கோளில் வைத்து வின் வெளிக்கு அனுப்பி விட போகிறார்கள் ? அங்கெ ட்ரம்ப் ஒரு மாதிரி


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 12, 2025 19:04

நீங்க நடத்துகிற ரோடு ஷோ அது எதற்காம்?


Ghori Muhammad, Ex Muslim
ஜூலை 12, 2025 20:34

உண்மையான சங்கி இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டான். சங்கி என்கிற பெயரில் ஒளிந்து இருக்கும் தங்க லுங்கிதான் இப்படிப்பட்ட தத்துபித்து கேள்வியை கேட்கும்...


Mani . V
ஜூலை 12, 2025 18:04

மாடுகளை நிற்க வைத்து பேசுவதில் என்ன தவறு கண்டு பிடித்தீர்கள்?


Jack
ஜூலை 13, 2025 08:18

அடிமடியில கைய வைக்காம பேசறது நல்லது.


அசோகன்
ஜூலை 12, 2025 17:58

அண்ணாமலை சொல்வது முற்றிலும் உண்மை........நல்ல தலைவர்கள் கட்சி எல்லாம் போய்விட்டது ஆட்சிக்கு வர சில கோடிகளை இறைக்கவேண்டும்.... ஆட்சிக்கு வந்ததும் போதை பொருள், சாராயம் கனிமவளங்களை சுருட்டுவது, திட்டங்களை போட்டுவிட்டு காசை கல்லா கட்டுவது..... ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது இதுதான். மக்களும் கடைசி ரெண்டு நாள் வரும் காசை, பொருளை பெற்று ஓட்டை விற்கிறார்கள்....... இதில் காசுவாங்கும் கொத்தடிமைகள் கருத்து போட வந்துட்டாங்க..... அண்ணாமலைக்கு கூடும் கூட்டத்தை பாரு போதை தெளியும்


Natchimuthu Chithiraisamy
ஜூலை 12, 2025 17:54

நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் நீர்...


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2025 17:54

தலைவர் மாடுகளை நிற்க வைத்து???சொல்ல வந்தது என்னன்னா???பூம் பூம் என்று தலையாட்டும் மாடுகளை நிற்க வைத்து பேசினால் என்ன ஏசினால் என்ன அந்த மாடுகள் வெறுமனே தலையாட்டும் அவ்வளவே.


Bala
ஜூலை 12, 2025 17:15

இவருக்கு தன்னைத் தானே வலிக்காத சவுக்கால் நடு ரோட்டில் நின்று கொண்டு அடித்து கொண்டு பொய் மட்டுமே பேச தெரியும்


baala
ஜூலை 12, 2025 17:06

தன்னுடைய செயல்கள் எல்லாமே


Oviya Vijay
ஜூலை 12, 2025 17:05

நுணலும் தன் வாயால் கெடும் எனும் பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் நீர்... ஆனாலும் இன்னமும் அதை நீங்கள் உணரவில்லை... பேசாத பேச்சாய்யா பேசுன என்பது போல் கூட்டணி அமைவதற்கு நீங்கள் பேசிய முந்தைய பேச்சுக்கள் முட்டுக்கட்டையாக இருக்க, அதிமுகவின் நிர்பந்தத்தில் பதவியை விட்டு மேலிடத்தால் நீங்கள் தூக்கியெறியப்பட்டீர்... அதுவும் உங்களுக்கு அசிங்கமாகப் படாமல் துடைத்துக் கொண்டு போய் விட்டீர்கள்... டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்ட போது அதிமுக முறைகேடுகளையும் வெளியிடுவேன் என்று கூறிய உங்கள் திருவாய்க்கு இப்போது எது உங்களைத் தடுக்கிறது எனத் தெரியவில்லை. சொல்லியபடி அதிமுக முறைகேடு தகவல்களையும் வெளியிட்டிருக்க வேண்டியது தானே... அதனை வெளியிடாமல் மௌனம் காப்பதன் மூலமாக நீங்களும் யோக்கியன் இல்லை காரியக்கள்ளன் என்பதை தமிழக மக்களுக்குப் புரிய வைத்து விட்டீர்கள்... அண்ணா நான் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க என்று நீங்கள் கூறியபோதெல்லாம் நோட்ஸ் எடுத்து நோட்ஸ் எடுத்து நிருபர்களுக்கு பல குயர் நோட்டுக்கள் தீர்ந்தது தான் மிச்சம்... ஆனால் நீங்கள் கூறியது ஒன்று கூட நடந்ததேயில்லை... ஆனால் கட்சிக்குள்ளேயே தனித்து விடப்பட்டிருக்கும் உங்களுக்கு மட்டும் எதுவுமே அவமானமாக அசிங்கமாக தோன்றவேயில்லை... ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் சார்ந்திருக்கும் ஒரு கட்சியின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உங்களால் தமிழக அரசியலில் நீடித்து நிலைத்திருக்க முடியாது... பேச்சைக் குறைப்பீர்களேயானால் உங்களுக்கு நலம். இல்லையேல் அரசியலில் காணாமல் போவீர்...


Kumar Kumzi
ஜூலை 12, 2025 17:50

விடியலுக்கு பேஸ்மெண்ட் ரெம்ப வீக்கு இதுவே கடைசி தேர்தல் தீய சக்தி திமுகவுக்கு சின்ன தத்தி சங்கு ஊதி மூடுவிழா நடத்தி வைப்பார்


புதிய வீடியோ