உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு வாங்குவதில் பி.எச்டி பட்டம் பெற்ற அரசியல்வாதிகள்: அண்ணாமலை பேச்சு

ஓட்டு வாங்குவதில் பி.எச்டி பட்டம் பெற்ற அரசியல்வாதிகள்: அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: '' நயமாக பேசி ஓட்டு வாங்குவதில் அரசியல்வாதிகள் பி.எச்டி., பட்டம் பெற்றுள்ளனர். அவர்களால் எந்த பயனும் இல்லை,'' என பா.ஜ.,வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், 200 ஆண்டுகள் பழமையான, வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் அண்ணாமலை பேசியதாவது: உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து எப்படி அந்த ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். இதனால் தான் ராமர் கடவுளாக இருந்து மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.மக்களாட்சியில் இருக்கும் போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம்.அநியாயம் நடந்த போது எப்படி நடந்து கொண்டார்; சட்டதிட்டத்தை எப்படி காப்பாற்றினார்;அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காத போது எப்படி நடந்து கொண்டார் என பார்க்க வேண்டும்.பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்குள் சென்றார்.பகலில் சென்றால் தடுத்து விடுவார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது.தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார்;எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்; யுத்த்தை எப்படி நடத்தினார்;சிஷ்யர்களிடம் எப்படி நடத்தினார் என்பதையும் பார்க்க வேண்டும்.ராமரின் வாழ்க்கையில் குணாதிசயங்களை குந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.ஸ்ரீராமரை போல் இருக்கவேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு ராமரின் பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்களை வர வேண்டும் என்பதற்காக..தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும்; இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்னை வந்தால் மன்னர் துடிப்பார். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள் என்றால் கிடையாது.ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும்.என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும் போது, தேர்தல் முடிந்து ஒராண்டு எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.அரசியல்வாதி ஐந்தாண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்துவிடுவார்கள். ஐந்தாவது ஆண்டில் ஊர்விழா, தெருவிழாவுக்கு வந்துவிடுவார்கள்.எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் சில அரசியல்வாதிகள் பிஎச்டி பட்டம் பெறும் அளவுக்கு அரசியல்வாதிகள் தெளிவாகி விட்டார்கள்.அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது.சிந்தித்து ஓட்டுப்போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சி்ந்திக்க வேண்டும்.நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர்.நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டுவிட்டனர்.இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது.சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Velan Iyer, Sydney
ஜூன் 28, 2025 08:16

இங்கே ராவிட சொம்புகளின் கதறல் அருமை


venugopal s
ஜூன் 28, 2025 07:02

தங்களுக்கு தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கத் துப்பில்லை என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறாரா?


திகழ்ஓவியன்
ஜூன் 27, 2025 23:45

ரொட்டித் துண்டுக்குத்தானே எல்லாப் பயலும் மதம் மாறினான்னு சொல்றே, உங்கிட்டத்தான் ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரம் இருக்குல்ல, இந்துக்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் 30 ரூபாய், சிலிண்டர் 400 ரூபாய், டோல்கேட்டில் Free, எந்த பொருளுக்கும் GSTவரி இல்லை, இந்து குழந்தைகளுக்கு NEET தேர்வு இல்லைன்னு சலுகை குடுத்து எல்லாத்தையும் இந்துவா மாத்திடலாமே, ஏன் செய்யலை?


திகழ்ஓவியன்
ஜூன் 27, 2025 23:44

அப்பா என்ன அர்த்தம் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்கிற அர்த்தம் படிச்ச IPS கு தெரியல , உங்களை சிறையில் இல் இருந்த ஒருத்தர் 130000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் , அதாவது 130000 VOTTERS உங்களுக்கு எதிரா வாக்கு , அப்போ உங்களை மக்கள் மதிக்க வில்லை


கோபாலன்
ஜூன் 27, 2025 23:19

நல்ல கருத்துக்கள். திராவிட அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப அரசியலை தோலுரித்து காட்டியுள்ளார்


அப்பாவி
ஜூன் 27, 2025 23:02

கட்டுன மனைவியை கர்ப்புணின்னு கூட பாக்காம காட்டுக்கு விரட்டினார். முன்னாடி கைகேயி பேச்சைக்.கேட்டு காட்டுக்குப் போனவர், பின்பாடி மனைவியுடன் ஏன் காட்டுக்குப் போகலை? ஒரு பக்கம் பித்ரு வாக்ய பரிபாலனமாம். இன்னொரு பக்கம் உத்தம ராஜாவாம்.


ஜெகதீசன்
ஜூன் 27, 2025 22:58

சத்திரிய தர்மத்தை காக்க வேண்டி கிரஹஸ்த ஆசிரம தர்மத்தை நழுவவிட்டது சீதையை துயரடைய செய்தது. ஆனால், ஒன்பது ஆண்டு கழித்து மன்னித்து மீண்டும் அரண்மனைக்கு வருமாறு கேட்க சீதா பிராட்டி அவர்கள் மறுத்து, பிள்ளைகளை ஒப்படைத்து உயிரை விட்டது வேதனை. ராம ராஜ்யம் திரைப்படத்தில் பார்த்தது.


J.Isaac
ஜூன் 28, 2025 07:18

ராமாயணம் , புராணமா? சரித்திரமா ?


அப்பாவி
ஜூன் 27, 2025 22:58

வாய்ப் பேச்சில் பி.ஹெச்டி எங்க அண்ணாச்சி.


Oviya Vijay
ஜூன் 27, 2025 22:48

பொதுவாக அரசியல்வாதிகள் என்று கூறினால் அது பாஜகவிற்கும் பொருந்தும் என்று இவரிடம் யாராவது சொல்லுங்களேன் பா... ஆம்... ஆம்... மத்திய மற்றும் மாநில பாஜக அரசியல்வியாதிகளால் மக்களுக்கு ஒரு பைசாவும் பிரயோஜனம் இல்லை... உண்மையை உரக்கக் கூறியதற்கு மிக்க நன்றி...


vivek
ஜூன் 28, 2025 05:53

தான் ஒரு சிறந்த திராவிட சொம்பு என்பதை ஓவிய விஜய் நிரூபித்துள்ளார்....மூளையும் பத்திரம்


Mahadevan
ஜூன் 27, 2025 22:35

வெல்சைட் அண்ணாமலை. 100% correct


சமீபத்திய செய்தி