உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

தொகுதிகள் சீரமைப்பை 25 ஆண்டுக்கு... தள்ளி வையுங்கள்

சென்னை : 'லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்' என, சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், 23 கட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க., தலைமை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்துள்ளது.இந்தக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது.கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் ராமாராவ், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய்குமார் தாஸ் பர்மா, அமர் பட்நாயக், பஞ்சாப் மாநிலம் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங் உள்ளிட்ட, 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பல்வேறு மாநிலங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளாமல், செய்யப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, தெளிவின்மை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம்.வளர்ச்சியடைந்த மாநிலங்களின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தை பாதுகாக்க, இந்த கூட்டு நடவடிக்கை குழுவை ஒருங்கிணைத்தமைக்காக, முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்  ஜனநாயக முறையையும், பண்பையும் மேம்படுத்தும் நோக்கிலேயே, தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அந்நடவடிக்கையை வெளிப்படையாகவும், தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், மாநில அரசுகள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து, உரையாடல் மேற்கொண்டு, அவர்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை பாதுகாப்பதும், ஊக்குவிப்பதும், தேசிய மக்கள் தொகையை நிலைப்படுத்துவதும் தான், 42, 84, 87வது அரசியலமைப்பு திருத்தங்களின் நோக்கம்.இந்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பு தள்ளிவைப்பு, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக, தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை, மத்திய அரசு செய்ய வேண்டும்  இவற்றுக்கு முரணாக, மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து, பார்லிமென்ட் நடவடிக்கைகளை, மாநிலங்களின் எம்.பி.,க்கள் குழு ஒருங்கிணைக்கும். எம்.பி.,க்கள் ஒருங்கிணைப்புக் குழு, நடந்து வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரின்போது, மேற்குறிப்பிட்ட அம்சங்களின் அடிப்படையில், பிரதமருக்கு தங்களது கருத்தைத் தெரிவிக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இப்பிரச்னையில் அந்தந்த மாநில சட்டசபைகளில் தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஒருங்கிணைந்த பொதுக்கருத்தை உருவாக்க, கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறும், அந்நடவடிக்கைகளின் விளைவுகளும் குறித்த தகவல்களை, அந்தந்த மாநில மக்களிடையே பரப்புவதற்கு கூட்டு நடவடிக்கைக் குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

ramani
மார் 24, 2025 06:58

அவன் சொல்றான் இவன் சொல்றான் என்று மத்திய அரசு 25 வருடத்திற்கு தள்ளி போட கூடாது. தமிழகத்தில் 39 தொகுதியாக உள்ளதை வேண்டுமென்றால் 25 ஆக குறைக்க வேண்டும்


A1Suresh
மார் 24, 2025 00:44

பேசாமல் தொகுதி மறுவரை , மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய அந்த திட்டத்தையே நீக்கிவிடலாமே பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டுவிடுமா ? எதிர்கட்சி பைத்தியங்கள்


krishna
மார் 23, 2025 21:51

ENGE ENGE 200 ROOVAA OOPIS VENUGOPAL OVIYA VIJAYAN GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI UDAN VANDHU KADHARAVUM.OSI QUARTER BONUS.


பேசும் தமிழன்
மார் 23, 2025 21:25

விடியல் மைண்ட் வாய்ஸ்.... ஏற்கெனவே 40 க்கு 40 வெற்றி பெற்றும்.... ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய் விட்டது.... தமிழக மக்கள் தப்பி தவறி ஓட்டு போட்டு விட்டார்கள்..... இன்னொரு முறை ஓட்டு போடுவார்களா எ‌ன்று‌ தெரியாது.... அப்படியே ஓட்டு போட்டாலும்.... மொத்தமாக போட மாட்டார்கள்..... ஒன்று.... இரண்டு..... சீட்டாவது கிடைத்தாலும்... அதை வைத்து பயனுடைய.... கான் கிராஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.... அதற்கு வாய்ப்பே இல்லை.....அதனால் இப்படி எதையாவது சொல்லி.... மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


அப்பாவி
மார் 23, 2025 21:03

இந்திராகாந்தி, வாஜ்பேயி இருவரும் தலைக்கு 25 வருஷம் ஒத்தி வெச்சாச்சு. இப்போ மோடியும் ஒத்திவெச்சா, அப்புறம் இன்னொரு 25 வருஷம் ஒத்தி வெச்சி நூற்றாண்டு விழா கொண்டாடலாம்.


Venkatesh
மார் 23, 2025 20:34

சுடாலின் மனக்குரல்.... நான் பெத்தது, அது பெத்தது என்று அடுத்த 25 சில வருடங்களுக்கு நாங்கள் ஆட்சி செய்து கொள்ளையடித்து கொள்கிறோம்.. அதன் பிறகு யாராவது ஏதாவது செய்து கொள்ளட்டும்


SUBBU,MADURAI
மார் 23, 2025 21:29

கட்டுமரக் கருணாநிதி குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து இருந்தால் மு.க.முத்து மு.க.அழகிரி என்பதோடு வாரிசுகள் நின்று இருக்கும் நமக்கும் இப்படிப்பட்ட தொல்லை இருந்திருக்காது. கட்டுப்பாடு அன்றி பெற்றுபோட்டதால் தமிழர்களாகிய நாம் இப்போது அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்த லெட்சணத்தில் அந்த பரம்பரையில் தமிழை துண்டுச் சீட்டில் எழுதி வைத்தும் ஒழுங்காக படிக்க தெரியாத தத்தி பிள்ளை ஒரு புறம், கவிதையே தெரியாத கவிதாயினி வேறு காலக் கொடுமை..


தேச பித்தன்
மார் 23, 2025 17:41

மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி சீரமைப்பு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 1971க்கு பிறகு தொகுதி சீரமைப்பு செய்யப்படவில்லை. 54 ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வளவு கூடியுள்ளது. இன்னும் 25 வருசத்துக்கு சீரமைக்க கூடாது என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் முதல்வர் பதவி ஏற்றவரா? இவர். தற்போது உள்ள மக்கள் தொகை படி கேரளா மாநிலம் ஒரு தொகுதியை இழக்கும் என்றும் தமிழ் நாட்டிற்கு ஒரு தொகுதி கூடும் என்று தெரிய வருகிறது. அப்புரம் ஏன் இந்த நாடகம் என்று தெரியவில்லை. மோடி அரசு இருக்குற தொகுதியை குறைக்கமாட்டார்கள் போல, தொகுதி கூடுதல் மட்டும் நடக்கலாம். பிற மாநில தொகுதி கூடுவது இவருக்கு ஒரு பிரச்சினையோ? அப்ப இனி வரும் எல்லா பாராளுமன்ற தேர்தலிலும் இவரே 40 அடித்து அங்கே பார்லிமென்ட்டில் நாட்டாமை செய்ய வாய்பிருக்காதுன்னு கவலை படுறாறோ? இனி மேல் இவர் கட்சி எந்த தேர்தலிலும் 10 சீட்டுக்கு மேல் வர போரதில்லை அப்புறம் ஏன் இந்த அலப்பறை. 2G கேஸ், BSNL கேஸ் மற்றும் டாஸ்மாக் கேஸோட மூடு விழா உறுதி.


கண்ணன்,மேலூர்
மார் 23, 2025 19:29

அதே போல் திமுக இனிமேல் 25 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் ஆட்சி மற்றும் பதவிக்கு வர முடியாது .


Madhavan
மார் 23, 2025 21:56

மற்ற மாநிலங்களில் ஜனத்தொகை அதிகம் எனவே அவர்களுக்கு அதிக தொகுதி கிடைக்கும் நமக்கு கிடைக்காது எனவே இந்த தொகுதி வரையரையை 25 ஆண்டுகள் தள்ளிப் போடுவது என்பது உங்கள் கடமையைத் தள்ளிப் போடுவதாகும். பின் எதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? நீங்கள் நகராட்சி தேர்தல், பஞ்சாயத்து தேர்தல்களையும் நடத்துவதில்லை. நீங்கள் அரசு அதிகாரிகளை இட மாற்றம் செய்வது போல, வேலையை விட்டுத் தூக்குவது போல உங்களை மக்களால் செய்ய முடியவில்லை. ஒன்றிய அரசுடன் ஒன்றுவதும் இல்லை விகிதாசார முறைப்படி அவர்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களை மதிக்கப் போவதும் இல்லை.பின் எதற்காகக் கூட்டம் கூட்டுகிறீர்கள்?


krishna
மார் 23, 2025 17:04

VEKKA KEDU DHINAM URUTTAL POYYUM PURATTUM.THARPERUMAI PHOTO SHOOT.INDHA NAATHAM PIDITHA DRAVIDA MODEL VIDIYAA AATCHI KEVALATHIN UCHAM


N Sasikumar Yadhav
மார் 23, 2025 16:57

அதைவிட சீரமைப்பே வேண்டாமென சொல்லுங்க . என்ன ஒரு கேவலமான சிந்தனை இந்த மானங்கெட்ட திமுக கட்சிக்கு


Jay
மார் 23, 2025 16:53

தொகுதி மறு சீரமைப்பு எப்போது செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்காது. இயல்புக்கு மேல் சாதகமாக வரவேண்டும் என்றால் வாக்காளர்கள் அப்படி வாக்களிக்க வேண்டும். காங்கிரசுக்கு 15 சீட்டு பிஜேபிக்கு 15 சீட்டு தமிழ்நாட்டில் இருக்குமானால் தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடுக்கு பாதிப்பு வராது. 39 எம்பிக்களும் இதற்காக பாராளுமன்றத்தில் எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை எடுத்தாலும் அதை காது கொடுத்து கேட்பதற்கு இந்தி கூட்டணி கட்சிகள் கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். திமுகவின் கொட்டத்தை சற்று அடக்கும் என்றால் அதைத்தான் காங்கிரஸோ அகிலேஷ் யாதவோ மற்ற இந்தி கூட்டணி கட்சியினரும் விரும்புவார்கள். திமுக தனியாக சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். தொகுதி சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது என்றால் அதை மக்கள் தான் ஓட்டின் மூலம் சாதிக்க வேண்டும் மாநில கட்சிக்கு ஓட்டு போடாமல் பிஜேபி மற்றும் காங்கிரசிற்கு போட்டால் மட்டும் தான் இதற்கு தீர்வு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை