உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!

ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரங்குகளை வாடகைக்கு விடும் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையின் நடைமுறையை பயன்படுத்திக்கொண்டுள்ள திமுகவினர், அங்கு முதல்வரை வைத்து ஈ.வெ.ரா., படத்திறப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வுக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை, பல்கலை வட்டாரங்களில் விசாரித்தபோது அம்பலம் ஆகியுள்ளது.வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டதும், அப்பல்கலை பி.ஆர்.ஓ., மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். 'ஆக்ஸ்போர்டு' பல்கலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈ.வெ.ராமசாமி படத்திறப்பும் இல்லை' என தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hpu5vr9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும். அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர்.அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்னைக்காக ஆக்ஸ்போர்டு பல்கலையில் நானே அரங்கை வாடகைக்கு எடுத்து, நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளும் இதேபோல் வாடகைக்கு அரங்கை எடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த 2013ல், கருணாநிதியின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு, 'கலைஞர் 90' என்ற பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதாக செய்தி, தி.மு.க., தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. ஆஸ்திரியாவில் 3,000 ரூபாய் செலுத்தினால், யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட்டுக் கொள்ளலாம். அப்படி தான் கருணாநிதியின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த உண்மை, அடுத்த சில நாட்களிலேயே வெட்ட வெளிச்சமானது. ஆஸ்திரிய அஞ்சல் தலை கதை போல், ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ராமசாமி படத் திறப்பு கதையும் உள்ளது. இதில் துளியும் உண்மை இல்லை. தமிழக மக்கள் மத்தியில் இதுபோன்ற வேடிக்கைகளை செய்வது, திமுகவினரின் வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலிவான அரசியல்

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: ஆக்ஸ்போர்டு பல்கலையே, ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு விழாவை நடத்துகிறது என்பது போன்ற, ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருப்பது, மலிவான அரசியல். அந்த பல்கலையில், தனியார் யார் வேண்டுமானாலும், பணம் கொடுத்து, அரங்குகளை, வாடகைக்கு எடுத்து விழாக்களை நடத்திக் கொள்வது வாடிக்கையே. அதேபோன்றதுதான் ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு நிகழ்ச்சியும். இனியும், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தை, தி.மு.க., அரங்கேற்றாமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அரங்குகளை வாடகைக்கு விடும் பல்கலைஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், ஏராளமான அரங்குகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு எடுத்து தனியார் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். அதற்கும், பல்கலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.சிறு கூட்டம், பெரிய விழா, திருமண விழாக்கள், உணவு விருந்துகள், மதுவிருந்துடன் உணவு விருந்து என நடத்தும் வசதிகளை ஆக்ஸ்போர்டு பல்கலை வழங்குகிறது. நமது வசதிக்கு தகுந்தபடி, பல்கலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியக அரங்கு, பல்கலையின் மிகப்பழமையான வகுப்பறை என பல விதமான இடங்களை முன்பதிவு செய்து வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சி நடத்தலாம்.இப்படி நடக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருவாய்க்காக இப்படி ஒரு ஏற்பாட்டினை ஆக்ஸ்போர்டு பல்கலை செய்து கொள்கிறது. 'அத்தகைய ஒரு நிகழ்ச்சி தான், திமுகவினர் ஏற்பாடு செய்துள்ள ஈவெரா படத்திறப்பு. அதை ஆக்ஸ்போர்டு பல்கலையுடன் இணைத்து பொய்யான தற்பெருமை பேசித்திரிகின்றனர்' என்கின்றனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Venugopal S
ஆக 31, 2025 22:59

அந்த ஓட்டுத் திருட்டுக்கு முன் இது குற்றமாகவே ஒன்றும் தெரியவில்லை!


Venkatesh
ஆக 31, 2025 23:50

உனக்கு எதுவும் தெரியாது..... .. குற்றமாகவே தெரியாது..... வந்த வழி அப்படி


Venugopal S
ஆக 31, 2025 22:56

ஆனாலும் இது அப்படி ஒன்றும் அந்த எம் ஏ ஆல் பொவிட்டிகல் சயின்ஸ் டிகிரி சர்ட்டிபிகேட் அளவுக்கு பெரிய பித்தலாட்டமாகத் தெரியவில்லை!


theruvasagan
ஆக 31, 2025 22:36

முட்டுசந்து ஆபீஸ் கொடுத்த விருதை ஐ.நா சபையின் அங்கமான யுனெஸ்கோ கொடுத்த விருதுன்னு 50 வருஷத்துக்கு முன்னாடியே புருடாவிட்டு மக்களை முட்டாளாக்கின தில்லுமுல்லு வேலை இன்னிக்கும் ஒர்க்அவுட் ஆகும்னு நினக்கறாங்க போல.


vivek
ஆக 31, 2025 22:35

அட திராவிட கொத்தடிமை பதார்களா...இந்த பிழைப்பு தேவையா


Natarajan Ramanathan
ஆக 31, 2025 22:34

இங்கு அமெரிக்காவிலும் ஹார்வார்ட் பல்கலையில் இந்தமாதிரி அறைகள் வாடகைக்கு கிடைக்கும். யாராவது இந்தமாதிரி அறையை வாடகைக்கு எடுத்து சந்தன வீரப்பன் படத்தையோ அல்லது ஆட்டோ சங்கர் படத்தையோ திறந்துவைத்து இந்த திராவிட அரசின் அசிங்கங்களை நிறுத்த வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 31, 2025 22:22

தமிழை, தமிழனை, தமிழகத்தை விரோதியாக கருதிய ஒருவரின் படம் ஆஃஸ்போர்டில் திறக்கப்படுவது தமிழனையும், தமிழையும், தமிழகத்தையும் அவமதிக்கும் செயல்.


ramesh
ஆக 31, 2025 22:20

ஜெயலலிதா முதல் தடவையாக முதல்வராக வந்தபோது பொற்கால ஆட்சி நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு தெருவுக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட பட்டு உள்ளது என்று கலர் கலராக ரீல் விட்டவர்கள் தானே நீங்கள்...


vivek
ஆக 31, 2025 22:31

பாவம் புருடா வேகவில்லையா ரமேஷு


vivek
ஆக 31, 2025 22:34

இந்த பிழைப்பு தேவையா ரமேஷு


Natarajan Ramanathan
ஆக 31, 2025 22:36

இல்லை. இப்போதும் ஜெயலலிதா பெயர் அந்த அழகான சாலைக்கு இருக்கிறது.


Matt P
ஆக 31, 2025 23:26

மொத்தத்தில் திராவிட கட்சி திருட்டு பித்தலாட்ட கும்பல்கள். ஸ்தாலினுக்கு கூட கென்டக்கி பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். அவர் ஏனோ பெயருக்கு முன்னாள் potuvathu. ரொம்ப தான் பணிவு. அவர் அப்பாவைதான் அடிக்கொரு தரம் டாக்டர் கலைஞ்சர் என்று அழைத்து கொள்வார்கள்.


Sundar
ஆக 31, 2025 22:14

இருக்கும் போது ஒரு மயித்தையும் புடுங்கள கிஸ் ராதாகிருஷ்ணன். இப்போ உனக்கு பதவி வேணும். கேடு கேட்ட அயோக்கியன்.


Tamilan
ஆக 31, 2025 21:52

வயிறு எரிகிறதா ?. உலகமெல்லாம் உள்ள இந்துக்கோவில்களை அந்நாட்டு அரசு இனாமாக திறந்தா?. மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவுசெய்துதானே இந்து மதவாத கும்பல்கள் கொள்ளைக்கும்பல்கள் திறந்தன ?


HoneyBee
ஆக 31, 2025 22:13

இந்து மதம் தன் சொந்த காசில் வருகிறது. ஆனால் சொரியான் கூட்டம் பணம் கொடுத்தா வரும். யுனெஸ்கோ விருது ஒரு உடான்ஸ்... பணம் கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டும் கூட்டம் தான் இந்த கூட்டம்


Suppan
ஆக 31, 2025 21:46

இந்த இன்டர்நெட் சமூக ஊடக யுகத்தில் இந்த மாதிரியான பித்தலாட்டங்கள் உடனடியாக வெளிவந்துவிடும் என்று தெரிந்தும் அறிவாலய அறிவிலிகளை ஏமாற்றும் திராவிடக்கும்பல்களை என்னவென்று சொல்ல .


ramesh
ஆக 31, 2025 22:30

ஜெயலலிதா பெயர் அமெரிக்காவில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்டப்பட்டு உள்ளது என்று பத்திரிகைகளுக்கு பேட்டி குடுத்த கூட்டம் தானே நீங்கள் . 1991-96 இன்டர்நெட் யுகம் இல்லை இல்லை என்றாலும் 2 நாட்களுக்குள் இந்தஅறிவிலிகள் பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது சுப்பன் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை