சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,29) 5 மாவட்டங்களுக்கும், நாளை (நவ.,30) 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gpnrrykb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. *சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.,க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.