உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

பதிவு முடிந்த பத்திரங்களை முடக்கும் சார் - பதிவாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பதிவு முடிந்த பத்திரங்களை, விதிகளுக்கு மாறாக சார் - பதிவாளர்கள் முடக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. இந்த பத்திரங்கள் பதிவு முடிந்ததும், 'ஸ்கேன்' செய்து, சில மணி நேரத்துக்குள் திருப்பி கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, இதுவே நடைமுறையாக உள்ளது. குறிப்பாக, பதிவு முடிந்ததும், சொத்து வாங்கியவரிடம் பத்திரத்தை கொடுத்து, அவரிடம் ஒப்புகை பெற்று, அதை குறிப்பேட்டில் சேர்க்க வேண்டும். இதில் கட்டட கள ஆய்வு அவசியமாக உள்ள நிகழ்வுகளில், ஒரு வாரம் வரை பத்திரத்தை திருப்பி கொடுக்க தாமதம் ஆகும். மற்ற பத்திரங்களை பொறுத்தவரை, அதை இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பதிவு முடிந்த பத்திரங்கள் திரும்ப கொடுக்கப்பட்ட விபரங்கள் தொடர்பாக, வாராந்திர மற்றும் மாதாந்திர அறிக்கையை, பதிவுத்துறை தலைவருக்கு அனுப்ப வேண்டும். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், சில இடங்களில் பதிவு முடிந்த பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் முடக்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: வீடு உள்ள சொத்துபத்திரங்களை பதிவு செய்தால், அதை திருப்பி கொடுப்பது போன்று ஒப்புகை பெறும் சார் - பதிவாளர்கள், முதலில் ஓரிரு நாளில் வாங்கிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். அதன்படி சென்றால், பத்திரத்தை தராமல் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கின்றனர். இப்படியே, 15 நாட்கள் கடந்த நிலையில், வாக்குவாதம் செய்தால், 'உங்கள் பத்திரத்தின் கட்டட மதிப்பில் வேறுபாடு உள்ளது. நீங்கள் கூடுதலாக, 61,000 ரூபாய் கட்ட வேண்டும்' என்று சார் - பதிவாளர்கள் சொல்கின்றனர். அதற்கான, 'நோட்டீஸ்' தருமாறு கேட்டால், அதற்கும் ஓரிரு நாட்கள் கழித்து வரச் சொல்கின்றனர். அப்போது, ஆவண எழுத்தர் வாயிலாக பேரம் பேசுகின்றனர். இதற்கு சம்மதிக்காவிட்டால், பத்திரம் கிடப்பில் போடப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர். இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதிவு முடிந்த நிலையில் பத்திரங்களை இருப்பு வைக்கக்கூடாது என, சார் - பதிவாளர்களுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம். இருப்பினும், சில சார் - பதிவாளர்கள் இப்படி புதிய வழியில் பத்திரங்களை முடக்குவதாக புகார் வந்துள்ளது. பதிவுத்துறை தலைவர் கவனத்துக்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Tamilnadan Maduraiyan
செப் 27, 2025 13:03

எல்லாம் சிவமயம்


Suresh Kumar
செப் 27, 2025 11:25

உண்மை உண்மை 100% சதவீதம் உண்மை அரசியல் சதுரங்க வேட்டை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடிமைகள் அதிகாரிகள் மக்கள் கழுத்தில் கதியைவைத்து பணம் வசூலிப்பதுபோல் மக்கள் எண்ணத்தோன்றுகிற.....


NSRamesh
செப் 27, 2025 07:23

இல்லை இல்லை முதலிடத்தில் காவல் துறை தான்.


Karunakaran
செப் 26, 2025 18:58

Now it is the time for EWS, ENJOY


VSMani
செப் 26, 2025 11:00

லஞ்சம் விளையாடும் துறைகளில் பத்திரப்பதிவு முதல் இடம். லஞ்சம் கொடுக்காவிட்டால் பத்திரம் கையில் கிடைக்காது. லஞ்சம் வாங்குவதற்கு பல உபாய தந்திரங்கள் வைத்துள்ளனர். லஞ்சத்தை பத்திரம் எழுதும் பத்திர எழுத்தாளர்கள் மூலமாக ஒவ்வொரு நாள் இரவில் பைசல் பண்ணிடுவார்கள். சார்பதிவாளர்களை எந்த லஞ்ச ஒழிப்புத்துறையினாலும் பிடிக்கவே முடியாது. பிடிக்கிட்டா புள்ளிகள்.


KRISHNAN R
செப் 26, 2025 10:48

எல்லா துறையும் 8 போட தெரியுமா என்று கேட்டால் அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 26, 2025 10:24

இவங்க இப்படி லஞ்சம் வாங்கி குவிக்க காரணம் இந்த லஞ்சப்பணம் கோபாலபுரம் வரை செல்வதால்தான். தேர்தலில் மக்களுக்கு பிச்சை போடுவதற்கு பல லட்சம் கோடிகளை சேர்த்துவிட்டு அப்புறம் அதை வாக்குக்கு காசு கொடுத்து மக்களின் ஓட்டை பெற்று சுகபோகமாக வாழ்கிறார்கள். இப்படி தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆள்கிற தலைமை ஒழுங்காக இருந்தால்தான் நாடு உருப்படும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கத்தவரை மக்களின் இது போன்ற கஷ்டங்கள் தொடரும்.


R.MURALIKRISHNAN
செப் 26, 2025 10:10

வாங்குபவரின் கஷ்டம் இவர்களுக்கு தெரிவதில்லை.


karthik
செப் 26, 2025 09:31

இதெல்லாம் பல பல வருஷங்களாவே நடந்து வருகிறது...தெரியாத மாதிரி இன்று தான் தெரிந்த மாதிரி செய்து போடுகிறீர்கள்.. பணம் தின்னும் கழுகுகள் அரசு பணியில் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது


Kalyanaraman
செப் 26, 2025 08:30

நமது சட்டங்களுக்கு முதுகெலும்பு இல்லை. இருந்திருந்தால் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை இருந்திருக்கும். சட்டம் தெரிந்த அரசு அதிகாரிகள் தவறு செய்தால் நான்கு- ஐந்து மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், துறை ரீதியான நடவடிக்கை என்ற பெயரில் இடம் மாற்றம் மட்டுமே நடக்கிறது. மாறிய இடத்தில் இதே வேலையை தொடர்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை