உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.15 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன்!

ரூ.15 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் தெற்கு செட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் அளவு, உண்மையில் இருப்பதை காட்டிலும் பட்டாவில் குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுக்குமாறு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன் இடம் மனு அளித்துள்ளார்.அதன் பேரில், நிலத்தை அளவீடு செய்ய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து செல்வகணேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ஜான் டைசனுக்கு ரசாயனம் தடவிய பணத்தை, செல்வகணேஷ் கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.15,000 லஞ்சம் பெற்ற ஜான் டைசனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
மே 19, 2025 15:37

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் முகவரியை இந்த மாதிரி செய்திகளின் கீழ் கொடுக்கவும் சாமியோவ். தற்கொலையை தடுப்பதற்கு விவரங்களை கொடுப்பதுபோல். இப்படி அதிகார பிச்சை, லஞ்சம் வாங்குவது சட்டத்தை ஏமாற்றி கொலை செய்வதற்கு சமம்தான்


ManiK
மே 18, 2025 10:09

இது தமிழ்நாடே இல்லை...கடந்த 4 ஆண்டுகளில் பெரும்பாலான மாநில அரசு பதவிகளில் பொருப்பற்ற க்ருப்ட்டோ அல்லது கன்வர்டட் கும்பல்களே இருக்கிறார்கள். திமுக அரசின் நரித்தனம் மிகவும் மோசம்.


D Natarajan
மே 17, 2025 21:05

லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. பிடிபட்டவுடன் உடனே பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர் அந்த மதத்தை சார்ந்தவர். விடியா அரசு ஒன்றும் செய்யாது. வாழ்க லஞ்சம் வாழ்க தமிழ்நாடு


ganesh ganesh
மே 17, 2025 20:05

அவனுடைய மொத்த குடும்பத்தையும் தூக்க வேண்டும் . அரசாங்க வேலை அவன் குடும்பத்திற்கு மறுக்கப்பட வேண்டும். இது கனவு.நடை முறையில் சட்டம் மனிதாபிமானம் என்று பார்ப்பார்கள்.


Natarajan Ramanathan
மே 17, 2025 19:59

இருபத்து ஒன்பது வயதிலேயே முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி என்பதெல்லாம் மிகவும் இட ஒதுக்கீட்டின் கொடுமைதான். அதனால்தான் இப்படி லஞ்சம் வாங்கி கொழுக்கிறார்கள்.


Amar Akbar Antony
மே 17, 2025 16:30

இந்தவிதமான தலைமுறை தலையெடுக்கவே கூடாது. வேலையை விட்டு உடனே தூக்கவும். சஸ்பெண்ட் கூடாது. துறையை நடவடிக்கை கூடாது. இவன் போன்றவர்களை சிறையில் அடைத்து நல்ல வெயிலில் விவசாயம் செய்ய விடவும் இல்லையேல் சிரைத்துறையில் நடக்கும் கட்டிட வேலையில் சேர்க்கவும். கூலிக்கு வேலை.


Kulandai kannan
மே 17, 2025 16:25

தமிழக அரசு அலுவலகங்களில் மூச்சு முட்டுமளவு ஊழல். திராவிட மாடல்.


sundarsvpr
மே 17, 2025 16:21

லஞ்சம் பெற்றவர் கைது என்பது ஒரு செய்தியாய் கருதமுடியாது. லஞ்சம் கொடுத்துதான் அரசு துறையில் காரியம் சாதிக்கமுடியும் என்ற நிலையில் தமிழ்நாடு அரசு இருக்கிறது என்றால் யார் பொறுப்பு ஏற்கவேண்டும்? சந்தேகமின்றி அரசு மேல்மட்டங்கள் அமைச்சர்கள் உட்பட. அரசு பணிக்கு வருபவர்களிடம் அமைச்சர்களும் அரசு சம்பளம் பெறுபவர்கள் இவர்களிடம் சம்பளம் படி வேணுமா அல்லது வேறுவகையில் சம்பாதித்துக்கொள்கிறீர்களா உறுதிமொழி பெறுவது நல்லது.


veeramani hariharan
மே 17, 2025 15:50

If this fellow is corrupt at the age of 29, what will happen to the People of TN. when people like him sits on Authority Posts. Good work done by the complainter