உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

ரூ.150 கோடி ஓ.எஸ்.ஆர்., நிலம் கபளீகரம்; பட்டாவை ரத்து செய்ய தயங்கும் வருவாய் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அடுத்த பெருங்குடியில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட, 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்பதில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பெருங்குடி மண்டலம், வார்டு 182ல் அமைந்துள்ள சந்தோஷ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகள், 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இப்பகுதிகளில் மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது ஒதுக்கப்பட்ட, பொது பயன்பாட்டிற்கான ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, போலி பட்டா தயாரித்து, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில், சந்தோஷ் நகரில், பூங்கா, பூங்கா செல்லும் பாதை, பள்ளி இடம் என, 8 கிரவுண்டு; ஓ.எம்.ஆர்., அருகே பர்மா காலனியில், 12.5 கிரவுண்டு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இதன் தற்போதையை மதிப்பு, 150 கோடி ரூபாய். தாமதம் இதுகுறித்து, சந்தோ ஷ் நகர் மக்கள் நலச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:சந்தோஷ் நகரின் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட சர்வே எண்: 126/7, 127/25, 127/55 ஆகிய போலி பட்டாக்களை ரத்து செய்து, சந்தோஷ் நகர் தலைவர் பெயரில் நிலைநிறுத்த, தென் சென்னை கோட்டாட்சியர், சோழி ங்கநல்லுார் வட்டாட்சியருக்கு கடந்த ஜூன் 27ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆக்கிரமிப்பாளர் துவங்கிய கட்டடப்பணி, 90 சதவீதம் முடிந்து, விடுதி நடத்த தேவையான பொருட்களை இறக்கி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில், அனைத்து பணிகளும் முடிந்து, பயன்பாட்டிற்கு வந்துவிடும். எனவே, காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, பட்டா மற்றும் பத்திர பதிவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

துண்டிப்பு

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்தோஷ் நகரில், பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டடப்பணி துவங்கும் போது, பணியை நிறுத்துமாறு எச்சரித்தோம். பணி நடைபெறும் போதும், மூன்று முறை 'லாக் அண்டு சீல்' உத்தரவு நகல் கொடுத்துள்ளோம். அதையும் மீறி, சம்பந்தப்பட்ட நபர் கட்டுமான பணியை நிறுத்தாமல், தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தவிர, வருவாய்த் துறை அதிகாரிகள் பட்டாவை ரத்து செய்தால் தான், மேற்கொண்டு எங்களால் நடவடிக்கை எடுக்க இயலும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, தாசில்தாரிடம் கேட்டபோது, 'ஆவணங்களை பார்த்துவிட்டுத்தான் பேசமுடியும்' எனக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

மணிமுருகன்
நவ 15, 2025 00:06

நன்றாக தெரிகிறது அரசியல் பினாமி கட்டுமானம் என்று காசு அனைவருக்கும் போய் இருக்கும் அதான் அதிகாரிகள் மௌனம்


tpwa 117
நவ 14, 2025 13:05

மலை போல எண்ணி இந்த தொழில் செய்ய போகிறார் அண்ணா


ப்ரியன் வதன்
நவ 14, 2025 10:03

இவனுங்க தான் அடுத்தவரை ஓட்டு திருட்டு அப்டின்னு திருட்டை பற்றி வகுப்பு எடுப்பான்...என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். அப்பதான் அடுத்தவன் இம்மாதிரி தவறு செய்ய தயங்குவான்


Ramesh Sargam
நவ 14, 2025 09:43

ஆக்கிரமிப்பு என்று தெரிந்தபின்பும், ஏன் அவற்றை மீட்டெடுக்க தயக்கம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடங்களை தகர்த்தெறியவும். ஆக்கிரமிப்பாளர்களை பிடித்து சிறையில் அடைக்கவும்.


Prabu
நவ 14, 2025 09:25

எந்த பள்ளி யார் நிர்வாகி ?


mindum vasantham
நவ 14, 2025 08:45

நமது தேசத்தில் ரியல் எஸ்டேட் என்பது கள்ள சந்தையாகவே இயங்குகிறது


தியாகு
நவ 14, 2025 08:23

அதுல பாருங்க, நம்ம கட்டுமரம் பனிரெண்டு வருடங்களுக்கு முன் டுமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என்று சொல்லி ஒரு பெரிய தண்ணீர் சுட வைக்கும் அண்டா போன்ற கட்டிடத்தை கட்டிக்கொடுத்து அதற்கு நாலாயிரம் கோடிகள் ஆனதாக கணக்கு எழுதியது. ஆனால் பனிரெண்டு வருடங்கள் கழித்து இப்போது மோடிஜி அரசு அதை விட பெரிய நிலப்பரப்பில் தரமான நாடாளுமன்ற கட்டிடத்தை வெறும் ஆயிரத்து இருநூறு கோடிகளில் கட்டி கொடுத்துள்ளது. இந்த பனிரெண்டு ஆண்டுகளுக்குள்  எவ்வளவு விலை ஏற்றம் இருந்திருக்கும். இருந்தாலும் மோடிஜியின் அரசு ஊழல் ஏதும் செய்யாமல் குறைந்த விலையில் தரமான கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளது. அப்படி பார்த்தால் கட்டுமரம் அன்றைய காலகட்டத்தில் வெறும் நானூறு கோடிகளில் புதிய தலைமை செயலகத்தை கட்டிவிட்டு நாலாயிரம் கோடிகள் கணக்கு எழுதியுள்ளது. சும்மாவா சொன்னார்கள் விஞ்ஞான முறையில் ஆட்டையை போட கட்டுமரத்தை மிஞ்ச இன்னொருவன் இந்த உலகத்தில் பிறந்ததுதான் வரவேண்டும் என்று. நாமும் இதையெல்லாம் படித்து விட்டு பெரியார் மண்ணு, திராவிட பண்ணுன்னு சொல்லி சொல்லியே உருட்டுவோம். ஹி...ஹி...ஹி...


V RAMASWAMY
நவ 14, 2025 08:22

Concerned authorities and their Masters are callous due the vested interests and fear to take action due to land mafia supported by politicians. This tendency also should be another reason for a change of Government in the State.


duruvasar
நவ 14, 2025 08:01

தாசில்தாரருக்கு ஆவணத்தை பார்க்கவிடாமால் தடுப்பவர் யார். அந்த ஆவணம் அந்தமான் ஆவண பெட்டகத்தில் பூட்டிவைக்க படியிருக்கிறதா ? அந்தமான் லேபிடினென்ட் கவர்னரிடம் அனுமதி பெறவேண்டுமா ? பிராட் பசங்க


VENKATASUBRAMANIAN
நவ 14, 2025 08:00

காசு வாங்கியவர் எப்படி ரத்து செய்வார். இதில் திமுக நபர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர். முதல்வரே தலையிட மாட்டார். இதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை