உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்: கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன் என விஜய் அறிக்கை

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்: கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன் என விஜய் அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். 'கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்' என சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1wocwz2y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

என் சொந்தங்களே

பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.

ரூ.20 லட்சம் நிவாரணம்

இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

உதவிகள்

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Padmasridharan
செப் 30, 2025 19:24

அவரு 1 லட்சமும் 10 லட்சமும் கொடுத்ததனால இவரும் 2, 20 லட்சமும் கொடுத்திட்டாங்க. அதற்கு பதில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவச படிப்பை கொடுக்கலாம், வீட்டு நபர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம்.


சந்திரன்
செப் 29, 2025 19:42

இதுவரை 32லட்சம் நாட்டிற்காக உயிரை விட்டவங்களுக்கு


P.sivakumar
செப் 29, 2025 12:40

உண்மையாக தருவாரா?


Anand
செப் 29, 2025 03:49

இது எதிர் கட்சிகளின் திட்ட மீட்ட சாதியாக கூட இருக்கலாம். விஜய் அரசியலில் வெற்றி பெற கூடாது என்று கொடிக்கம்பம் விழுவதும். விஜயின் மக்கள் செல்வாக்கு எங்கே மக்களின் உள்ளங்களை ஜெயித்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக கூட இருக்கலாம்.


Anantharaman Srinivasan
செப் 28, 2025 20:50

விஜய் கண்களும் மனசும் கலங்கித் தவிக்கின்றாராம் இனியும் பெரிய கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட வேண்டுமென்று நினைக்காதீங்க.


பெரிய குத்தூசி
செப் 28, 2025 18:48

இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும் இந்தியாவை , தமிழகத்தை கிறிஸ்துவ நாடக மற்ற சதிசெய்யும் கிறிஸ்துவ மிழினரிகளும் பணத்தை அள்ளி வழங்குகின்றனர்.சொந்த பணமாக இருந்தால் வலிக்கும்.எவனோ கொடுக்கிறான். பணம் எப்படி கிடைத்தாலும் வாங்க துடிக்கும் மூளையிலாத மக்கள்.


எவர்கிங்
செப் 28, 2025 17:57

கைக்கு வருமா ஊர் வாயை முடக்க வந்த வாய்க்கரிசி


Perumal Pillai
செப் 28, 2025 16:20

செய்வதை செய்துவிட்டு உயிருக்கு பயந்து இரவோடு இரவாக தப்பி ஓடினார் பாருங்க அங்கே நிற்கிறார் ஜோசப் விஜய்.


Sridhar
செப் 28, 2025 16:10

தமிழக மக்கள் எதை விரும்புவார்களா அதை செவ்வனே செய்கிறார் விஜய் பாராட்டுக்கள். நிறைய பேர்வழிகள் களத்தில் உடன் நிற்கவேண்டாமா, நேரில் வந்து ஆறுதல் சொல்லவேண்டாமா என்றெல்லாம் பினாத்துவார்கள். அப்படி செய்தவர்களுக்கெல்லாம் மக்கள் வோட்டா போட்டார்கள். நிச்சயம் விஜயின் இந்த டீவீட்டை பார்த்து உருகி அவருடைய கட்சிக்கே ஏகபோகமாக வோட்டளிக்கப்போகிறார்கள். 67 லிருந்தே மக்கள் சிந்தனைகள் மருவி எதுகை மோனை பேச்சுக்களுக்கும் மேடை அலங்கார நடைகளுக்கும் அநாகரீக பேச்சுக்களுக்கும் பழக்கமாகி அதுவே தமிழக மக்களின் வாழ்வியல் ஆகிவிட்ட நிலையில், திமுக என்ற முள்ளை இன்னொரு முள்ளால தான் அகற்றமுடியும் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த மக்களுக்கு அண்ணாமலையோ மோடியோ தேவையில்லை. சினிமா கூத்து பாட்டு டான்ஸு என்று கேளிக்கைகளுக்காக ஏங்குகின்ற ஒரு கும்பல். இவர்களுக்கிடையே நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்ய முனைந்தீர்களானால் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. இவர்களை இவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது. பட்டு திருந்துவது பலதலைமுறைக்கு செய்தி சொல்லும்.


Mariadoss E
செப் 28, 2025 14:58

செஞ்ச தப்ப ஒத்துக்க தைரியம் இல்லை, வந்த பிரச்சனையா சந்திக்க தைரியம் இல்ல. மன்னிப்பு மட்டும் இணைய தளம் மூலமா? பாழாப்போன பரப்புரையும் இணைய தளத்தில் செஞ்சிருக்கலாமே இவ்வளவு உயிர் போயிருக்காதே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை