உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆராய்ச்சி நிதி; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆராய்ச்சி நிதி; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் விபரம் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o1tj5gyx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* நூறு முன்னோடி உழவர்கள் நெல் உற்பத்தி திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.* தமிழகம் எங்கும் 1000 இடங்களில் முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.* வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு.* வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.* வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2,75 கோடி ஒதுக்கீடு

மக்காச்சோளம் உற்பத்தி

மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்திக்கு உகந்த, புரதம், மாவுச்சத்து நிறைந்த வீரிய ரகங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக திட்டங்கள் வகுத்து, வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், இன்று (மார்ச் 15) மக்காச்சோள உற்பத்தி மேம்படுத்த ரூ. 40 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் கூறியதாவது:மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் படி, மானாவாரியிலும் அதிக மகசூல் தந்து, உழவர்களுக்கு போதிய வருமானத்தை கிடைக்க செய்வதில் மக்காச்சோள பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் மக்காச்சோளம் 10 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.மக்காச்சோளம் சாகுபடி மூலம், உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில், மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் ஒரு லட்சத்தி 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயன் அடையும் வகையில், ரூ.40 கோடியே 27 லட்சத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
மார் 16, 2025 06:24

வேளாண்மை பல்கலையில் உள்ள குழுவுக்கு அங்கு பயிற்சி கொடுக்கலாம் - ஆனால் அதற்கான தேவை கிடையாது. ஏனென்றால் தமிழனின் நெல் சாகுபடி முறை இந்த மண் சார்ந்தது. இதில் வேறு நாட்டு சூழலுக்கு மட்டுமே பொருந்தும் தொழில் நுட்பம் இந்தியா கொன்டுவந்தால் உள்ளதும் நாசமாகிவிடும் .


Appa V
மார் 15, 2025 21:36

எம் எஸ் சுவாமிநாதன் பெயரில், வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.ஒரு டெஸ்லா காரோ BMW காரோ ஒரு கோடியில் வாங்க முடியாது ..மார்கெட்டு போன நட்சத்திரங்களே கோடிகளில் சம்பளம் வாங்கறாங்க ..


Iyer
மார் 15, 2025 14:28

பச்சை புரட்சி என்ற உலகமகா புரட்டை இந்தியாவில் பரப்பி இந்திய விவசாயிகளின் உயிரை குடித்தார்கள் - அமெரிக்கர்கள்.


अप्पावी
மார் 15, 2025 14:25

30, 40 அடில கிடைச்சிக்கிட்டிருந்த தண்ணீரை 300, 400 அடி போட்டு வுவசாயம் பார்க்கச் சொன்னாரு. இப்போ 700, 800 அடிக்கு போர்வெல்.


saravan
மார் 15, 2025 13:59

அய்யய்யோ, இது தெரியாம அறிவிச்சிட்டங்களே...தத்திக்கு தெரிஞ்சா வம்பாயிடுமே...அய்யா, சுவாமிநாதன் நம்ம வர்ணம் இல்லீங்கோ... அவா வேற ண்ணா...உடனே பேரை கலை..ர் அல்லது பெரி..ர் என மாத்தி விடியலை உறுதி படுத்துங்கள்...


Tech World
மார் 15, 2025 13:54

ஸ்வாமிநாதன் பெயரில் திட்டமா? அற்புதம்


Ramkumar Ramanathan
மார் 15, 2025 13:40

swamynathan peril thittama பேஷ் பேஷ்


sundarsvpr
மார் 15, 2025 11:30

உற்பத்தி பெருகுவதால் மக்களுக்கு வயிறார சாப்பிடுகிறார்கள். இது சாதனைதான். சத்து நிறைந்துள்ளது என்பது கேள்விக்குரியது. இயற்கை மூலம்குப்பை உரம் கிடைத்த பயிர் பொருள்கள் செயற்கை ரசாயனம் மருந்து மூலம் பெறப்பட்ட பயிர்கள் ஒப்பிட்டுப்பார்த்து வேளாண் பொருள்கள் உற்பத்தி கூடியுள்ளது என்று கூறினால் மட்டும் போதாது. உடலுக்கு எது அதிக நன்மையுள்ளது என்பதனையும் கூறவேண்டும். முதலில் கூறியது நாட்டு மருந்து. பிந்தியது அலோபதி.


Palanisamy Sekar
மார் 15, 2025 11:10

பானிபூரிக்கு எதிராக இந்திக்காரர்களை விரட்ட சோளப்பொரி பாப்கான்யை ஊக்குவிக்க நடுநிசியில் எழுந்த சாரி உதித்த ஐடியா இது என்று சொல்கின்றார்கள். உண்மையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை