உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரியலூரில் ரூ.77 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை

அரியலூரில் ரூ.77 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா என விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த, பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் என்ற பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியலூரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கையில் ஒரு பேக் எடுத்து வந்த நபரை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். பையில் 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரியிடம் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqu3e5oi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயில்வே போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்பது தெரியவந்தது. பின்னர், வருமான வரித்துறை துணை இயக்குநர் ஸ்வேதா மற்றும் ரயில்வே உதவி ஆய்வாளர் மணிமேல் வைத்தியநாதன் ஆகியோர் வினோத் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அவர் எடுத்து வந்தது ஹவாலா பணமா அல்லது அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களின் பணமா என விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthik
மார் 02, 2025 14:52

உண்டியல் படமாகவும் இருக்க வாய்ப்புண்டு. தொகை பெரியது - இனி இந்த செய்தி வராது.


MARUTHU PANDIAR
மார் 01, 2025 23:57

பகுதி செயலர், பகுதி அல்லது ஒன்றிய "உதவி" பொருளாளர் அல்லது கடைக்கோடி தம்மாத்தூண்டு நிர்வாகி" இவர்களின் பீடா செலவுக்கு உள்ள பணமாக்க கூட இருக்கும் அப்படீங்கறாங்க .


ராமகிருஷ்ணன்
மார் 01, 2025 15:19

தொகையை பார்த்தால் திமுகவின் பகுதி உதவி செயலாளர் அளவில் சுருட்டப்படும் பணமாக தெரிகிறது. ஆகையால் இனி இது சம்பந்தமாக செய்திகள் கூட வராது.


Anantharaman Srinivasan
மார் 01, 2025 14:16

வினோத் குமார் எடுத்து வந்தது ஹவாலா பணமா அல்லது அரசியல்வாதிகள் அல்லது தொழிலதிபர்களின் பணமா ?? என விசாரணை நடக்கிறது. இதை கண்டுபிடித்து சொல்ல ஒருமணி நேரம் போதாதா..?


Venkataraman
மார் 01, 2025 14:02

ஹவாலா பணம் என்பது ஒரு வகையான கணக்கில் வராத கருப்பு பணம். இது பல வகைகளில் உருவாகிறது. வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும்போது, விற்கும்போது வரி, பத்திரபதிவு கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்காக பாதி பணத்தை வங்கிகள் மூலமாகவும் மீதியை ரொக்க பணமாகவும் கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. இதில் ரொக்கமாக பெறப்படும் தொகைக்கு கணக்கு காட்டப்படுவதில்லை. அதேபோல திரைப்படங்களை தயாரிப்பவர்கள் நடிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை, ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்திலும், போதைப்பொருள் கடத்தலிலும், தடை செய்யப்பட்ட, பொருட்கள் மற்றும் ஆயுத கடத்தலிலும் கூட இவ்வாறு ஹவாலா பண பரிமாற்றம் நடைபெறுகிறது.


புதிய வீடியோ