உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களுக்கு நியாயமற்ற கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: அரசு உறுதி

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களுக்கு நியாயமற்ற கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: அரசு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது' என, அரசு தெரிவித்ததை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மாநிலம் முழுதும், 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. பின், அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அமைப்புகள் அளித்த மனுக்களை, போலீசார் நிராகரித்தனர்.இதை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீசார் அனுமதி வழங்கவில்லை.காவல் துறைக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதுபோன்ற அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும் போது, பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஏதேனும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், வைப்பு தொகையை திருப்பி பெற முடியாது. இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 07:52

சிறுமான்மை வாக்குகளுக்காக அலையும் விடியலால் அவமானப்பட்டு நிற்கவேண்டுமா காவல்துறை ????


adalarasan
ஜன 06, 2024 21:40

INDHA VAZHIMURAIKAL, KATTUPAADUKAL ELLAA KATCHIKALUKKUM, NIRUVANAGALUKKUM வைக்க, வேண்டும். உச்ச நீதிமன்றம்,,,ஆர்,ஸ்,ஸ், க்கு தடைவிதிக்காத்தபோது, தமிழ்நாட்டில் மட்டும் என்ன பிரச்சினை?உயார் நீதிமன்றை தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 07, 2024 07:57

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த தடைக்கு மேல் தடை விதித்தால் சிறுபான்மையினர் மகிழ்ந்து வாக்குகளைக் குவிப்பார்கள் என்கிற திமுக அரசின் நம்பிக்கை ....... சமூக வலைத்தளங்களில் சிறுபான்மையினர் இடும் பதிவுகளை பார்த்தால் அரசின் இந்த நம்பிக்கை சரியே என்று தோன்றுகிறது .....


DVRR
ஜன 06, 2024 19:30

நியாயமற்ற முறை???திருட்டு திராவிட மாடலில்???இந்துக்களுக்கு எதிராக இருத்தல் இந்துக்கள் கோவிலை உடைத்தல் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் இருத்தல் இது நியாயமான முறை என்று டப்பா அடித்தல்


Gurumurthy Kalyanaraman
ஜன 06, 2024 12:28

Appadi podu.


duruvasar
ஜன 06, 2024 09:18

ஏவல் துறையின் இந்த அதிமேதாவி தனத்தை தான் எதையோ என சொல்லுவார்கள். இன்று தண்டனையிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஸ்டேட்மென்ட்.


Varadarajan Nagarajan
ஜன 06, 2024 07:56

அரசியல் காட்சிகள் நடத்தும் ஊர்வலங்கள், பேரணிகள், மாநாடுகள் போன்றவற்றிற்கு இதுபோல் நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஏதும் காவல்துறை வைத்துள்ளதா? தேசப்பற்று கொண்ட, அரசியல் கட்சி சார்பற்ற அமைப்பு நடத்தும் ஊர்வலத்திற்குமட்டும் ஏன் இந்த நடைமுறைகள்? உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கும்போது இந்த கட்டுப்பாடுகள் வேண்டாமா? நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் அனுமதி அளிக்காத காவல்துறைமீது நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


Duruvesan
ஜன 06, 2024 07:18

பாஸ் சங்கிஸ் இதை எல்லாம் whatsapp ல வடக்க பரப்பரானுங்க, ithu காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு. இவனுங்க ஹிந்துக்களுக்கு எதிரா எவ்வளவு பன்றானுங்களோ அவ்வளவு சீட் கூடும்


Bellie Nanja Gowder
ஜன 06, 2024 06:09

சுண்டக்கா தி மு க ஆர் எஸ் எஸ் உடன் மோதி ஜெயிக்க முடியுமா??


நரேந்திர பாரதி
ஜன 06, 2024 05:10

"ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது"...ஏன் விதிச்சுதான் பாருங்களேன்...சனாதன ஒழிப்புன்னு கழுத்துவரை முழுக்கியாச்சு....இனி வேண்டாதவைகளையும் செய்து தலை முழுகிட வேண்டியதுதான்


ராமகிருஷ்ணன்
ஜன 06, 2024 05:07

இப்படிபட்ட விதிமுறைகள் திக திமுக அதிமுக மற்றும் திமுகவின் அல்லக்கை கட்சிகளின் ஊர்வலம் நடத்தும் போது கடைபிடிக்க படுவதில்லையே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை