உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருணிடம் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை: துரைமுருகன்

வருணிடம் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை: துரைமுருகன்

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க, தொழிலதிபர் ஒருவர் வாயிலாக துாது விட்டதாக, திருச்சி எஸ்.பி., வருண்குமார் தெரிவித்துள்ளதை, நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.அக்கட்சி கொள்கை பரப்பு செயலர் 'சாட்டை' துரைமுருகன் அறிக்கை:திருச்சி எஸ்.பி., வருண்குமார், சீமான் குறித்து பொய்யான தகவல்களை பொதுவெளியில் பரப்பி வருகிறார். தொழிலதிபர் வாயிலாக தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதை சொல்வாரா? செய்தி உண்மையானால், அதை ஏன் அவர் மறைக்க வேண்டும்?வருண்குமாரால் போடப்பட்ட பொய் வழக்குகளும், வழக்கின்போது பறிக்கப்பட்ட மொபைல் போன்களை வைத்து, அவர் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் போன அதே நீதிமன்றத்தில், எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்.சட்டமும், நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மற்றபடி, மன்னிப்பு என்பது எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.யார் துாது விட்டது, யார் கெஞ்சியது, யார் பத்திரிகையாளர்களை அனுப்பி பேசியது என்பதை விலாவாரியாக பேசுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

reghupathy umashankar
ஜன 02, 2025 00:53

காவல்துறை அதிகாரி வருண் குமார் ஆரம்பம் முதலே ஒரு அரசு அதிகாரி போலவே செயல்படவில்லை என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவரான சீமான் சொல்லிவருகின்றார். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட நா.த.க வின் முக்கிய நிர்வாகியின் கைபேசியிலுள்ள தகவல்கள் தி.மு.க வின் தகவல் தொழில் நுட்ப அணி மூலம் வெளியே கசியவிடப்பட்டது உண்மை என்றால்,அதற்க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை