உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''செங்கோட்டையன் குரல் கலகக்குரல் இல்லை. செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது'' என ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.செங்கோட்டையன் பேட்டி கொடுத்து இருக்கிறார். அவரது குரல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார் என்ற கேள்விக்கு தனியார் செய்தி சேனலுக்கு ஆட்டிட்டர் குருமூர்த்தி அளித்த பேட்டி: இதில் கலகம் என்ன இருக்குது. எனக்கு புரியவில்லை. எல்லோரும் ஒன்றாக வர வேண்டும் என்பதை எப்படி கலகக்குரல் என்று சொல்கிறீர்கள். அவர் இபிஎஸ்க்கு எதிராக எதும் கருத்து சொல்லி இருக்கிறாரா? இபிஎஸ் தலைவராக இருக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரா? அனைவரும் இபிஎஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டுமென சொல்வது அவருக்கு பெருமை தான். செங்கோட்டையன் மீது எந்த தவறும் கிடையாது. அவரது குரல் கலகக்குரல் அல்ல. இபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட ஒன்றாக இணைந்து அவரை ஏற்றுக்கொண்டால் கட்சிக்கு நல்லது. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை கட்சியில் சேர்த்து கொண்டு, நீங்கள் அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது கலகக்குரல். அவர் சொல்லியதில் எனக்கு ஏதும் தோன்றவில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பது இபிஎஸ்க்கு தெரியும். எல்லாரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா? என்று யோசிக்கிறார். இதுதான் எனக்கும், இபிஎஸ்க்கும் உள்ள கருத்து வேறுபாடு. இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

சிட்டுக்குருவி
செப் 05, 2025 21:43

பதவி எல்லோருக்கும் வேண்டுமென்றால் கட்சியின் தலைமை பதவிக்கு 5 வருடம் என்று கால நிர்ணயம் செய்யுங்கள் .ஒரு பொது எலெக்சன் வரை தான் தலைமை பதவிக்கு காலம் வையுங்கள் .சசிகலாவை உள்ளே கொண்டுவந்தால் கட்சிக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது என்பதை நன்கு அறியுங்கள் .


GUNA SEKARAN
செப் 05, 2025 20:52

திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பது எட்டப்படி பழனிசாமிதான். அதனால்தான் யாரையும் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்.


T.sthivinayagam
செப் 05, 2025 19:44

முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் அமைச்சர் நாகேந்திர நைனார் இன்னும் பத்து நாளில் அதிமுகவை இணைத்து விடுவாரா என தொண்டர்களின் கேள்வி


GMM
செப் 05, 2025 19:38

சசியை கட்சியில் சேர்த்தால் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விரைவில் கைப்பற்றி விடுவர். இரும்பு பெண் ஜெயாவை 24 மணிநேரம் கட்டுபாட்டில் வைத்து இருந்தவர், எடப்பாடி, செங்கோட்டையன், அண்ணா மலை போன்றோரை ஒரு நொடியில் அடக்கி விடுவார். ஸ்டாலின் போன்ற மீடியா செல்வாக்குள்ள தலைவர்களையும் முடக்கி விடும் ஆற்றல் உண்டு. தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கும்.


Svs Yaadum oore
செப் 05, 2025 19:38

எடப்பாடி தலைமையில் உள்ள அ தி மு க வில் இனி சசிகலா குரூப் தினகரன் பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் போன்றவர்களுக்கு வாய்ப்பில்லை ....இதுதான் எடப்பாடி முடிவு ....முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவர் இப்படித்தான் முடிவெடுக்கிறார் ....இதில் அவர் மாற இனி வாய்ப்பில்லை ....இதை ஏற்றுக்கொண்டவர் அ தி மு க வில் இருக்கலாம் ... குருமூர்த்தி போன்றோர் அட்வைஸ் சொல்லி கேட்கும் நிலைமையில் எடப்பாடி இல்லை என்பதும் நிதர்சனம் ....


திகழ்ஓவியன்
செப் 05, 2025 19:28

அண்ணாமலை,எடப்பாடியை புகழ்ந்தாரோ அன்றே தெரிந்து கொள்ள வேண்டாமா இந்த மாதிரி வில்லங்கம் எல்லாம் வரும் என்று


முதல் தமிழன்
செப் 05, 2025 19:20

இவரு ஒரு அறிவாளி என்று தன்னம் தானே நினைக்கிறார். அ தி மு க பிஜேபி கூட்டணி வேண்டாம். தனித்து ஒற்றுமையாக களம் கண்டாலே வெற்றிதான். விஜயுடன் முயற்சி செய்தால் வெற்றி உறுதி. ஆனால் ஒன்று பட்டு நிற்கணும். பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால், நிறைய இலவசம் அள்ளி விடலாம் அது வெற்றி கொடுக்கும் என்று. அது எடுபடாது.


Svs Yaadum oore
செப் 05, 2025 19:42

அ தி மு க பிஜேபி கூட்டணி யிலிருந்து வெளியேறி தி மு க வுடன் கூட்டணி வைத்து விட்டால் பிறகு விடியல் வெற்றி டபுள் நிச்சயமாகிவிடும் .....கர்நாடக போல முதல் ரெண்டரை வருஷம் விடியல் முதல்வர் ....அடுத்த ரெண்டரை வருஷம் எடப்பாடி முதல்வர் ...கூட்டணி அதிகார பங்கீடு இப்படி வைத்துவிடலாம் ...


Svs Yaadum oore
செப் 05, 2025 19:15

இந்த குருமூர்த்தி என்ன கருத்து சொல்கிறார் என்பது வேறு விஷயம் ...இவர் என்னமோ சோ ராமசாமி போல தன்னை நினைத்துக்கொண்டு பேச வேண்டாம் ...அரசியல் பேச விரும்பினால் இவர் நேரடியாக களத்தில் இறங்கி இவர் மக்களிடம் வோட்டு கேட்டு வரட்டும் ...இவரை நம்பி எத்தனை பேர் வோட்டு போடுவர் ......இந்த லட்சணத்தில் இவர் என்னமோ அரசியல் சாணக்கியன் போல எடப்பாடி என்ன செய்யனும் அண்ணாமலை என்ன செய்யனும் என்று அடுத்தவனுக்கு பெரிய அறிவுரை


panneer selvam
செப் 05, 2025 22:29

SVS , an advisor is only to advise but not to lead an organisation . Gurumurthy express his opinion , he never demands to comply It is up to the people to accept or reject . So you do not need to worry .


திகழ்ஓவியன்
செப் 05, 2025 18:39

இவர் வாயை திறந்தாலே வில்லங்கம் தான் , அன்று OPS க்கு அறிவுரை கொடுத்து இன்று அவர் தெருவில் நிற்கிறார் இன்று செங்கோட்டையனுக்கு நாளை அவர் நிற்க போகும் இடமும் OPS உடன்


தியாகு
செப் 05, 2025 17:40

தனிப்பட்ட திறமை என்பது வேறு மக்கள் செல்வாக்கு என்பது வேறு. அரசியலில் தனிப்பட்ட திறமை ஒரு போதும் கை கொடுக்காது, ஓட்டுக்களாகவும் மாறாது. அவர்களின் தனிப்பட்ட திறமை அவர்கள் சார்ந்த தொழிலில் சம்பாதிக்க வேண்டுமானால் உதவும். அரசியலுக்கு உதவாது. அண்ணாமலை போன்றவர்களுக்கு இருப்பது மக்கள் செல்வாக்கு. அதுதான் அரசியலுக்கு தேவை. ஆனால் கெடுவாய்ப்பாக தனிப்பட்ட திறமை கொண்டவர்கள் தங்களை தாங்களே சூப்பர் ஸ்டாராக பாவித்து கொண்டு மக்கள் செல்வாக்கு இருப்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும், தாங்கள் சொல்வதைத்தான் மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள் கேட்கவேண்டும் என்று பத்தாம் பசலித்தனமாக செயல்பட்டதின் விளைவுதான் தமிழக பாஜக கொஞ்சமும் தேறாமல் உள்ளது. இந்த அடிப்படை கூட தெரியாமல் பாஜக மேலிடமும் தனிப்பட்ட செல்வாக்கு நபர்களின் பேச்சை கேட்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இதெல்லாம் போதாதென்று சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தமிழக பாஜகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதும். தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஜாதி உள் அரசியை பார்க்கமுடியாது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம். புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி... புரியாதவன் தனிப்பட்ட திறமை கொண்டுள்ளோரை மட்டும் போற்றும் அறிவிலி. ஹி...ஹி...ஹி...


திகழ்ஓவியன்
செப் 05, 2025 18:43

10 வருடம் பிஜேபி யில் இருந்தால் தான் தலைவர் பதவி இதை மாற்றி ஒரு போலீஸ் க்கு கொடுக்க அது தன் வேலையை காட்டுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை