உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்

 ஜாமின் நிபந்தனையில் தளர்வு கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமின் நிபந்தனையை தளர்த்தலாமா என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, அமலாக்க துறையும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். தற்போதைய தி.மு.க., அரசில் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். பின், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தின் அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜாமின் நிபந்தனையில் தளர்வு வழங்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி இடம் பெற்ற அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ''இந்த வழக்கில் அமலாக்கத்துறை இணை இயக்குநர் முன், வாரம் இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், கடந்த 12 மாதங்களில், 116 முறை தவறாமல் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார். ''அதனை கருத்தில் கொண்டு, ஜாமின் நிபந்தனையை தளர்த்த வேண்டும்,'' என்றார். அவரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி மனு தொடர்பாக, அமலாக்கத்துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத் தனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிந்தனை
நவ 15, 2025 22:19

எதுக்குங்க தலைவரே... சின்ன சின்ன கோரிக்கை வைக்கிறீங்க... கொள்ளையடிப்பது தவறு இல்லை என்று வாதாடுங்கள் நல்ல வக்கீலை வைத்துக் கொண்டு வக்கீலுக்கும் நீதிபதிகளுக்கும் பெரிய பெட்டியாக கொடுங்கள் ஜெயித்துக் காட்டுங்கள் மக்களுக்கு புத்தி வரட்டும் உங்கள் பலம் தெரியட்டும்


joe
நவ 15, 2025 19:55

கரூரில் இவரை போன்ற அரசியல் வாதிகளை உருவாக்குவது கலெக்டர் அலுவலகம் என்றால் இது உங்களுக்கே ஷாக் அடிக்கும் .ஆனால் இதுதான் உண்மை .கரூரில் ஊழல் உருவாகும் இடமே கரூர் கலெக்டர் அலுவலகமே . லஞ்சம் உருவாகும் இடமாகவே நீண்டகாலமாக கரூர் கலெக்டர் அலுவலம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது .மத்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .இல்லையென்றால் இவரைப்போன்ற ஊழல் வாதிகள் நிறைய பேர் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள் என்பதுதான் மிகவும் கவனிக்கவேண்டிய விஷயம் .


M Ramachandran
நவ 15, 2025 10:20

செ பாலாஜி என்று பெயர் மாற்றிய தகிடு தித்தம் மாற வில்லை அதன் பலன் இப்போ தூக்கம் போச்சி.


Arul
நவ 15, 2025 09:20

ஓன்று மட்டும் நிச்சயம் ..இங்கு பணம் இருந்தால் எது வேண்டும் என்றாலும் செய்யலாம்..பணம்.. பணம்..கொலை கொள்ளை ஏமாற்றுதல் கனிம வளம் திருடுதல் .... எல்லாம் ...


N S
நவ 15, 2025 08:30

நன்று. நன்று. ஜாமினில் வெளியே அலைவதே குற்றம். ஜாமீன் நிபந்தனையை ஒழுங்காக பின்பற்றியதால், தளர்வு கோரிக்கை. இன்னும் சில மாதங்கள் பின்பற்றினால், விடுதலை கோரிக்கை.


D Natarajan
நவ 15, 2025 08:00

உடனே பிணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும். பனை கொடுத்து விட்டால் அதோடு வழக்கு நின்று விடுகிறது.


Kasimani Baskaran
நவ 15, 2025 07:44

பத்து ரூபாயை வைத்து உலகை வசப்படுதலாம் என்ற கோட்பாடு மடதின் கோட்பாட்டை விட பல மடங்கு பெரியது, பிரபலமானது. அதை புரிந்து கொள்ளாமல் அமலாக்கத்துறை மட்டுமல்லாது நிதிமன்றம் கூட பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. பல எதிர் சாட்சிகள் இருக்கும் பொழுது ஏன் தண்டனை அனுபவித்துக்கொண்டே விசாரிக்க முடியாது? குற்றவாளியை வெளியே விடுவதும் கூட குற்றம்தான்.


D.Ambujavalli
நவ 15, 2025 06:33

திமுகவின் ‘பொற்களஞ்சியம்’, இவரை சுதனித்திரமாக ஜாமீன் கொடுத்து லவ விட்டதே பெருந்தவறு. தேர்தல் சமயத்தில் ஓட்டுக்களை ‘வாங்க’ இவர் முக்கியமாயிற்றே. அதுதான், நிபந்தனை தளர்த்தல் என்று கையெழுத்துப்போடுவதில் ஆரம்பித்து, தேர்தல் பிரசாரம், இலவச விநியோகம் என்று கொடிகட்டிப் பறக்க இவர் பின்னால் இருக்கும் முதல்வரும் ஆர்வம் காட்டுகிறார்கள்


kr
நவ 15, 2025 06:10

Yesterday Dinamalar news. Sub Registrar arrested for some 20000 rupees bribe. Politicians are a different class in India. Himalayan amounts are seen as certificates of merit. No use believing in courts as they will go upto Supreme Court challenging every summon. Only people have to ensure that they don’t elect such people as MLA or MPs. 200 rupees gumbal irukkum varai - no kavalai


Mani . V
நவ 15, 2025 04:20

இவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாமல் என்ன எழவு சட்டமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை