உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டிலேயே முதல் முறையாக ரயில் பாதையில் சோலார் பேனல்

நாட்டிலேயே முதல் முறையாக ரயில் பாதையில் சோலார் பேனல்

சென்னை : நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் துாரம், 'சோலார் பேனல்' நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது. ரயில்வே, தனக்கு சொந்தமான இடங்களில் சூரியசக்தி, காற்றாலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் தனியார் பங்களிப்போடு சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த கட்டமாக ரயில் பாதைகளிலும் சோலார் பேனல் நிறுவி, சூரியசக்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே, 'கோமோமோட்டிவ் ஒர்க்ஸ்' சார்பில், 70 மீட்டர் துாரத்துக்கு, 28 சோலார் பேனல் அமைக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து, 15 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. தேவைக்கேற்ப அகற்றவும், மாற்றவும் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mathangi Ramdas
ஆக 20, 2025 19:27

நடை முறை சிக்கல்களை தெரிந்து கொள்ளதான் சிறிய அளவில்தான் போடுகிறார்கள்.அது புரியாமல் திட்டி கருத்து பதியாதீர்கள். உங்கள் கருத்துக்களை கண்ணியமாக பதிவிடுங்கள்.அப்போதுதான் அரசும் காது கொடுக்கும். ஒரு புதிய முயற்சி எப்படியாவது வெற்றி அடையட்டும், எல்லோரும் பயன் பெறட்டும்.


Lourdu Xavier
ஆக 20, 2025 19:05

ரயில் பெட்டியில் மேல் புறத்தில் அமைத்தால் நன்று. சோலார் பேனல் பழுது பார்த்தல் உள்ளிட்டமற்ற எல்லாவற்றுக்கும் நல்லது.


sasikumaren
ஆக 20, 2025 10:16

ரயிலில் பயணிகள் கழிவுகள் படுமே அதை துடைத்து விடுவது யார் செய்வது என்னவோ கேனதனமான வேலைகளை சாதனை என்பது சொல்கிறார்கள்


Sampath Bala
ஆக 20, 2025 06:25

பையித்தியகார திட்டம்.ஒன்று ரெயில் பெட்டி கூறைகளில் அமைக்கலாம்,மின் கம்பங்களின் மேல் அமைக்கலாம் அதை விடுத்து தண்டவாளங்கள் இடையே அமைப்பது இரயில் போக்குவரத்தின் அதிர்வில் சோலார் பேனல்கள் விரைவில் பழுதடைந்துவிடும்.திருட படலாம், பராமரிப்பு கேள்வி குறியாகலாம் மொத்தத்தில் அறிவார்ந்த செயலாக தெரியவில்லை.


என்றும் இந்தியன்
ஆக 19, 2025 16:46

அருமையான திட்டம் ஆனால் 1 சோலார் பானெல் நிச்சயம் திருடப்படும். இதற்கு என்ன வழி இதை நிறுத்த??? 2 solar panel மீது ரெயிலிலிருந்து மனிதக்கழிவுகள் விழும் இதை சுத்தப்படுத்தவேண்டும் தினம் தினம்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 19, 2025 12:11

விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படும் செயல்.


pakalavan
ஆக 19, 2025 11:19

இது நடைமுறையில் சாத்தியமற்றது, உத்திரப்பிரதேசத்துல 3 மாசம் முன்னாடி ட்ரான்ஸ்பார்மரையே திருட்டிட்டுபோய்ட்டானுங்க, டிரான்ஸ்பார்மர் திருட்டுப்போனதையே 18 நாலுகழிச்சுதான் கண்டுபிடிச்சாங்க, இன்னும் திருடனை பிடிக்கமுடியலை,


V RAMASWAMY
ஆக 19, 2025 10:24

Instead, Railway Minister may instruct to try solar panels on train compartment tops, metro compartments inclusive. Also State Governments may try this on bus roof tops and on every street lamp post. Cinema Theatres and Malls may be compelled to instal solar panels for their electricity needs. These steps will save considerable amount of electricity. Example, if necessary guidance may be taken from Sri Sathya Sai Baba Ashtram at Puttaparthi, Andhra Pradesh where they have huge solar panel installations without buying a single unit of power from State Electricity.


Ganesh
ஆக 19, 2025 11:12

Sir, I agree your views partially.. If we fix solar panels on the roof top of the normal trains and metro trains then this panels weight will be additional load on the trains so there will not be no beneficial.. ie. Power generation will be used only to pull the additional weight of the solar panels.. However static establishments we can use solar panels for power generation... If the solar panel is succeeded then we can install proximity sensor power can be taken partially from solar power itself inbetween by which we can monitor the train movements as well as movement of man, other livings in non man crossings also and can avoid collision...


என்றும் இந்தியன்
ஆக 19, 2025 16:50

1 Due to dynamic movement of the vehicle with lot of vibrations this is not correct, there will be lot of vibrations 2 This may not give the exact power what is needed by train or bus so it is not recommended


Vasan
ஆக 19, 2025 09:41

There is a huge hazard that will invite accident in railway track. There is possibility for the solar panel maintenance person to get hit by train. Railway track shouldnt be used for other purposes.


Delivered Metoo
ஆக 19, 2025 09:15

365 நாட்கள் 6-8 மணிநேர சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் முறையை விட 24 மணி 365 நாட்கள் கிடைக்கும் சிறிய காற்றாலைகள் அமைத்து குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும். சூரிய மின்சாரம் மானியம் போல சிறிய காற்றாலைகள் அமைக்க மத்திய அரசு மானியம் வந்தாலே போதுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை