வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அய்யா பெருசு.. பள்ளிக்கூடத்துல மொதல்ல கேட்பதே சாதிதான்.. அத கவனிங்க
ஆகா ஏதோ இந்த ஒரு நபர் மட்டுமே ஜாதியை பிடித்து தொங்குவதாக நினைத்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எங்கு தமிழ் நாட்டில் ஜாதி இல்லை? பள்ளியில் குழந்தை சேரும் போது ஜாதி சான்றிதழ். பிறகு ஒவ்வொரு கட்டத்திலும் ஜாதி சான்றிதழ். சலுகை பெற ஜாதி சான்றிதழ். கல்லூரியில் சேர இட ஒதுக்கீடுகள் பெற ஜாதி சான்றிதழ். பணியில் சேர இட ஒதுக்கீடுகள் ஜாதி சான்றிதழ். பதவி உயர்வு பெற ஜாதி சான்றிதழ். திருமணம் செய்ய அந்தந்த ஜாதிக்கு வரன்கள். தனி திருமண தகவல் மையம். தேர்தலில் நிற்க ஜாதி சான்றிதழ். வேட்பாளர் தேர்வு அந்த தொகுதியில் அதிகம் வசிக்கும் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு. அமைச்சர்கள், அவரவர் ஜாதி கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்பு. தமிழ் நாட்டில் ஜாதிவாரியாக கட்சிகள். அதற்கு தேர்தலில் அனுமதி. இப்படி எங்கும் ஜாதி மயமான தமிழ் நாட்டில் ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதிகாரரை நிர்வாகம் செய்ய நியமனம் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தாராம். நீதிமன்றம் ஜாதியை ஏற்காது என்று தள்ளுபடி செய்து விட்டதாம். இன்னும் தமிழ் நாட்டில் ஊராட்சி தலைவராக ஜாதி காரணமாக பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது என்று நீதிமன்றம் அறியாதோ?
தனிப்பட்ட முறையில் அவரவர் தன் சொந்த ஜாதியை பின்பற்றுவதிலோ/ அடையாளமாக கொண்டிருப்பதிலோ தவரே இல்லை. ஏனெனில் அது அவரது அடையாளம், தனியுரிமை. தனிநபர் உரிமையில் தலையிடுவதை விடுத்து.. முதலில் நீதிமன்றங்களில் ஜாதியை ஒழிக்க உத்தரவிடுங்கள். பின்னர், ஜாதிவாரி கணக்கெடுப்பை தடை செய்யுங்கள். கட்டாயம், ஜாதி மத அரசியல் கட்சியை தடை செய்யுங்கள் அடுத்து, பள்ளி சேர்க்கையில் ஜாதி சான்றிதழ் கேட்கக் கூடாதென உத்தரவிடுங்கள். எக்காரணம் கொண்டும் , அரசு பணியில் ஜாதிக் கோட்டா அடிப்படையில் நியமனம் கூடாது என உத்தரவிடுங்கள். முடிந்தால் ஹிந்து மத வழிபாட்டு தலங்களில் மூக்கை நுழைப்பதை நீதிமன்றமும், அரசும், அறநிலையத்துறையும் நிறுத்தவும். அது முடியாதெனில், பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் கொடுத்து உத்தரவிடங்கள். அப்போது தெரியும் ஜாதி மதம் எங்கு எப்படியெல்லாம் உள்ளதென்று
பொருளாதார அடிப்படை மட்டுமே ஜாதியை ஒழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே பிரிவினை வாத சக்திகளை அழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே மக்களை ஒன்றிணைக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே திருட்டு அரசியல் செய்வோரை வேறறுக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே வரி ஏய்ப்பை ஒழிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே சமூகத்தில் உயர்வாக காட்டி கொள்ள துணை புரியும். பொருளாதார அடிப்படை மட்டுமே கல்வியை ஊக்குவிக்கும். பொருளாதார அடிப்படை மட்டுமே சம தர்ம சமுதாயத்தை தரும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஊழலுக்கு எதிராக போராடும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஆக்க பூர்வமாக மக்களை சிந்திக்க வைக்கும். பொருளாதார அடிப்படை மதங்களுக்கு இடையேயான வேறுபாடு களையும். பொருளாதார அடிப்படை மட்டுமே ஒழுக்கத்தை உருவாக்கும்.
குறைந்தபட்சம் நீதிமன்ற வேலை வாய்ப்புகளில் தகுதி அடிப்படையில் 50% மேலும் 50% பொருளாதார அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க உரம் உள்ளதா ? இதை செய்வதன் மூலம் ஜாதி முறையில் கட் ஆப் வைத்து அதிலும் அதிக மதிப்பெண் பெரும் நபரை ஜெனரல் கோட்டாவில் மோதவைக்கப்படும் ஜாதி வெறியை ஒழிக்கலாம்
என்று என்னுடைய வேலைக்காக கல்வி மற்றும் அந்த வேலைக்கு சார்ந்த தகுதிக்கு தகுதியிருந்தும் என் விண்ணப்பம் நான் பிறந்த சாதியை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டதோ இந்த தமிழக அரசால் அன்று வள்ளல் எம் ஜி ஆர் முதல்வர் அன்றிலிருந்து அரசு சுட்டிக்காட்டிய அந்த சாதியை என் பெயரில் அணைத்து வழிகளிலும் இணைத்திருக்கிறேன் பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்த சமயம் அது அந்த வள்ளல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் - அன்று - என்னை போல் இருந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்த திட்டத்தை எதிர்த்த எதிர் கட்சிகள் கம்மிகள் தீ மு க உட்பட இன்றுவரை நான் வாக்களிப்பதில்லை. அ இ அ தி மு க விற்கே இன்றளவும் வாக்களித்துக்கொண்டிருக்கிறேன் தற்போது குஜராத்தில் எம் ஜி ஆர் ன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது ஆதலால் பாராளுமன்றத்திற்கு பா ஜ கவிற்கே
இடஒதீக்கிடு இருக்கும் வரை ஜாதிகள் அழிய வாய்ப்பில்லை யுவர்ஆனர்?
ராமசாமி நாயக்கர் தான் ஜாதிய ஒழிதுவிட்டாரே ஜாதி பெயரால் முன்னுக்கு வந்த நீதி மான் அவர்களே
இன்றைக்கும் தமிழகத்தில் யாரும் தன் சாதியை இறக்கிவைக்க தயாராகயில்லை . சாதி பறையன் என்ற இந்த இரண்டும் நல்ல தமிழ் சொற்கள். உலக அகராதியில் தவறான விளக்கத்தில் மாசு அடைந்த நிலையில் இன்று அச்சேற்ப்பட்ட சொற்கள் . இதன் விளைவால் ஏற்ப்பட்டதுதான் தீண்டாமை. நாளை இந்தியமக்களுக்கு இது நல்லதல்ல. அவ்வளவு சுலபத்தில் இறக்கிவைக்கவும் முடியாது. இந்திய மக்கள் தாங்களாகவே முன்வந்து மாறவேண்டும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", நாம் இறைவன்முன் அனைவரும் சமமென்ற உணர்வு மேலோங்க வேண்டும் . இதுதான் நமக்கு என்றைக்கும் நல்லது.
பின் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அரசியல்வாதிகள் கூறுவதை நீதி மன்றம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கிறது. கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதை கண்டிக்கவில்லை. எந்த சமூக மக்களும் முன்னேற முயற்சிக்க ஆவண செய்ய வேண்டுமே தவிர ஒதுக்கீடு கூடாது.
நாம் எதுவும் விளங்காமல் பேசக் கூடாது. நாட்டை ஆள்வது நீதிமன்றமில்லை .