உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது தெற்கு ரயில்வே சொல்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட விளக்கம்:ஒவ்வொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு என்பது, செயல்பாடுகளின் முன்னேற்றம் உள்ளிட்ட நிலைகளை பொறுத்து காலாண்டு அடிப்படையில் மாறுபடும். பணிகள் நடக்கும் வேகத்திற்கு ஏற்ப, அந்த திட்டத்திற்கு, அந்த காலாண்டில் எவ்வளவு நிதியை பயன்படுத்த முடியும் என்பதை வைத்தே நிதி பகிர்வுகள் அமையும். ஒரே நேரத்தில் பல திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் சூழலில், சில திட்டங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதியை, தேவையுள்ள திட்டங்களுக்கு மாற்றுவது வழக்கம். பொதுவாக, திட்ட அறிக்கை தயார் செய்வது, இடம் உறுதி செய்வது, மாநில அரசின் உதவியுடன் நிலம் எடுப்பது உள்ளிட்ட காரணங்களால், சில திட்டங்களில் பணிகள் தாமதமாகும். அப்போது, அந்த திட்டத்திற்கான காலாண்டு நிதியை பயன்படுத்த முடியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும். இத்தகைய விபரத்தை, தெற்கு ரயில்வே, வழக்கமான உள்துறை கடிதம் வாயிலாக ரயில்வே வாரியத்திற்கு தெரிவித்துள்ளது. ஆனால், இதை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன. ரயில்வே வாரியம் மற்றும் மண்டல ரயில்வேக்கு இடையே, நிதி ஒதுக்கீடு தானியங்கி முறையில் நடைபெறும். தேவையான சமயத்தில், தெற்கு ரயில்வேக்கு முழுமையாக நிதி கிடைக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும். இவ்வாறு விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K.n. Dhasarathan
ஜூன் 02, 2025 12:49

தெற்கு ரயில்வேயின் நிதி திருப்பி அனுப்புதல் மிக மிக மோசமான செயல். ஏராளமான புதிய திட்டங்கள் மற்றும் கொரானா பாதிப்பினால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் இப்போதும் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. பிலாட் போர்ம் சரி சேய்தல், மேற்கூரை ரிப்பேர் அல்லது புதிது போடுதல் என்று சில்லறை வேலாய்களை காரணம் காட்டி தமிழகத்திற்கு பெரும் துரோகம் செய்து வருகிறது தெற்கு ராயில்வே துறை. பட்டியல் தயார், போடட்டுமா ? நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறது என்பது முழு பொய். நிலாம் எடுப்பு தாமதமானால் வேறு வேலைகளுக்கு நிதி பயன் படுத்திவிட்டு பிறகு நிதி வந்ததும் சரி செய்யலாமே இது சிறு குழந்தைகளுக்கும் தெரியுமே ? சும்மா இல்லை, சுமார் 700 கோடி ரூபாய் திருப்பி அனுப்ப பட்டுள்ளது. இதில் சமாளிப்பு பதில் வேற, "ரயில்வே வாரியம் மற்றும் மண்டல ரயில்வேக்கு இடையே, நிதி ஒதுக்கீடு தானியங்கி முறையில் நடைபெறும். தேவையான சமயத்தில், தெற்கு ரயில்வேக்கு முழுமையாக நிதி கிடைக்கிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டப்படி நிறைவேற்றப்படும்." இனிமேல் நிறைவேற்றப்படுமாம், புதிய திட்டங்களும் அம்போ அப்போ கொரோனாவால் நிறுத்திய திட்டங்களை என்ன சேய்வது ? அதையாவது திரும்ப நடைமுறை படுத்தலாமே ? அதுவும் செய்யாமல் நிதியை திருப்பி அனுப்பியது பி ஜே பி யினர் சொல்வது போல " தேச துரோகம் " . தெற்கு ரயில்வே தமிழகத்திற்கு பெரும் துரோகம் செய்கிறது, ஏற்கனவே பாவப்பட்ட மக்களுக்கு நிதி கிடைப்பது இல்லை, கிடைத்த நிதியையும் பொது மேலாளர் திருப்பி அனுப்பி பாவம் செய்து விட்டார்.


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 15:21

திருட்டுத்தனமாக ரயிலில் வந்தவரை தலைவராக எண்ணும் ஆட்களுக்கு ரயில்வே நிதி அனாவசியம. பயன்படுத்தாமல் இருக்கும் நிதியால் வட்டி செலவு ஏறும். ஒரு கழக ஆளின் ஆக்கிரமிப்பால் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை 20 ஆண்டுகளாக முடிக்க முடியவில்லை. அதற்கான கூடுதல் செலவு பன்மடங்கு.


venugopal s
ஜூன் 02, 2025 09:50

தமிழக திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மட்டுமே ஏன் மடை மாற்றம் செய்ய வேண்டும் என்பது தான் கேள்வி!


Rajkumar
ஜூன் 02, 2025 08:06

நிறைய வருடங்களுக்குப் பிறகு நேற்று தான் ரயிலில் பயணம் செய்தேன்...ரொம்ப மோசமாக இருந்தது..குவாலிட்டி சுத்தமாக இல்லை..


VENKATASUBRAMANIAN
ஜூன் 02, 2025 07:24

ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிடுவது வாடிக்கை.