உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

தேசிய கல்விக்கொள்கை பற்றி சபாநாயகர் கூறியது தவறானது: கல்வியாளர்கள் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; தேசிய கல்விக் கொள்கை தமிழுக்கு எதிராக இல்லை. சபாநாயகர் அப்பாவு கூறியது முற்றிலும் தவறானது என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கம் கடந்த 30ம் தேதி, சென்னை மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''தமிழகம் கல்வியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால், 5ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உன் தந்தையார் தொழிலுக்கே செல்ல வேண்டும் என, மறைந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை, மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.நாட்டில், 10 கோடிக்கு மேல் தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சமஸ்கிருதம் பேசுவோர், 25,000 பேர் இருப்பர். அந்த மொழியை கட்டாயம் படிக்க வேண்டுமென்பது நியாயமா. எனவே, முதல்வர் சமஸ்கிருதம் தேவை இல்லை என்கிறார். தமிழகத்தில் தற்போது இருக்கின்ற முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,'' என்றார். சபாநாயகர் அப்பாவு கூறியது தவறானது என, கல்வியாளர்கள் கூறுகின்றனர்.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி: அவர் சொன்ன எதிலும் உண்மை இல்லை. புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவத்தை, தரத்தை புரியாமல் பேசியுள்ளார். அதை அவர் சரியாக படிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை தமிழுக்கு எதிராக இல்லை. தமிழ் வளர்ச்சிக்கோ, அதன் உயர்வுக்கோ எவ்வித தடையும் இருக்காது.தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழியை படிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை விட்டு வெளியில் செல்லும் போது, மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற உள்நோக்கம் மட்டுமே அதில் உள்ளது. மாணவர்கள் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாணவர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது பயன்படும்.தமிழக மாணவர்கள் முன்னேறக்கூடாது என, அவர்கள் பேசிக்கொண்டுள்ளனர். சபாநாயகருக்கு, தமிழக மாணவர்கள் மீது அக்கறையில்லை. தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை எனில், தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கற்பகம் பல்கலை வேந்தர் ராமசாமி: பிறமொழிகளை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. புதுச்சேரியில், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகள் கற்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். அதற்காகவே பிற மொழிகளை கற்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையின்றி அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது.மாணவர்கள், 18 வயது முடித்தால் தான் பிளஸ் 2 முடிக்க முடியும் நிலை உள்ளது. தற்போது ஒரு மாணவன் பட்டம், முதுகலை, பி.எச்டி., பெற கூடுதலாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மறைமுகமாக இது வேலைவாய்ப்புக்கான காலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையே.

குழம்ப கூடாது

ஐரோப்பிய நாடுகளில், இளம் வயதில் ஆராய்ச்சி படிப்புகள் முடித்து வேலை பெற்று விடுகின்றனர்.ஆனால், இந்தியாவில், முதிர்ந்த வயதில், தான் வேலையை பெறுகின்றனர். கேரளாவில் கல்வி முறைப்படுத்தப்பட்டுள்ளது.தேவையில்லாமல் ஹிந்தியை திணிப்பதாக கூறி, மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர். மாணவர்களுக்கு ஏற்றார் போல், கல்வி இருப்பது நல்லது. மும்மொழிக் கொள்கையை முறையாக புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது மொழி ஹிந்தி தான் எடுக்க வேண்டும் என, மத்திய அரசு கூறவில்லை. ஹிந்திக்கு பதிலாக பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை தமிழக அரசு வழங்கலாம். தேவையில்லாமல் குழம்ப கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Anvar
செப் 20, 2024 17:51

வெறும் பாஸ் செய்து விடுவதால் நம்பர் 1 ஆக முடியாது கல்வி தரம் டுமீல் நாட்டில் மிக மோசம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்


rameshkumar natarajan
செப் 10, 2024 16:31

Tamil Nadu is in the top in comparison with other states in education. Now these people are bringing New education policy to achieve 50% enrollment ration in 2030. whereas TN has the enrollment ration as 51% right now. This is possible because of dravidian model. Infact, we should take TN sucessful model to other states and implenet instead of preaching TN.


Sakthi
செப் 06, 2024 14:34

ரொம்ப சொம்பு தூகரீங்களே ஏன் செந்தில் தான் இன்னும் உங்க பேரா


selva
செப் 06, 2024 12:08

பள்ளிக்கூடங்களை விடுங்கள் இப்பொழுது உள்ள இன்ஜினியரிங் மெடிக்கல் போன்றவற்றை முதலில் சரி செய்யவும் குறைந்த பட்ச அளவு கூட நமது இன்ஜினியரிங் போன்றவை இல்லை நகர பிள்ளைகள் அனைவரும் பல தனிப்பட்ட கோர்ஸ் எஞ்சினீரிங் படிக்கும்போதே படித்துவிட்டு வேலை வாங்கு கிறார்கள் பல அரசாஙக இன்ஜினியரிங் கல்லூரி மானவ்ரகளுக்கு வேலை கிடைப்பது இல்லை அதை முதலில் சரி செய்யவும் இன்னமும் nit போன்ற சென்ட்ரல் government காலெஜ்ல் ரோபோடிக்ஸ் போன்ற படிப்புகள் இல்லை சென்ட்ரல் governmnet cbse பள்ளிகளில் எத்தனை தற்கால ஆசிரியர்கள் உள்ளனர் என்று கூற சொல்லுங்கள்


Senthil
செப் 04, 2024 16:58

கேனைங்களா, 3 மொழி 4 மொழினு மொழிகளையே கற்றுக்கொண்டிருந்தால் மாணவர்கள் அறிவை வளர்க்கும் லிஷயங்களை படிக்க நேரம் எங்க இருக்கும் முட்டாள்களா. அமெரிக்காகாரனும் ஜப்பான்காரனும் தாய்மொழியை மட்டும் பேசிக்கொண்டு மொழியை கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தைக் கற்றுக்கொண்டு உலகிற்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் போட்டிபோட்டு கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். இங்க மட்டும் என் மொழியை படித்தே ஆக வேண்டும்னு ஒரு குடுமி கூட்டம் அடம் பிடித்துக்கொண்டே அலைகிறது. இங்கு எந்த காலத்திலும் நடக்காது.


Vaithilingam
செப் 03, 2024 11:04

நான் ஒரு ஆசிரியன். தமிழ்நாட்டு மாணவர்களைப் பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். ஒரு வகுப்பில் ஒன்று இரண்டு மாணவர்கள் தான் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கும் திறன் படைத்தவர்கள். மற்றவர்களில் பாதி இரண்டாம்தர மாணவர்கள். மீதி மூன்றாம்தர மாணவர்கள். இதில் இந்த இரண்டுவகை மாணவர்களும் தமிழையே ஒழுங்காக படிக்க மாட்டார்கள். இதே நிலைதான் இந்தியா முழுவதிலும். எனவே எனது கருத்து இதுதான். இந்தியா முழுவதிலும் இருமொழி போதுமானது. அப்போதுதான் மன அழுத்தம் இல்லாமல் பள்ளி படிப்பை நன்கு முடிக்க முடியும். அவன் மேல்நிலைக்கு செல்ல முடியும். ஒரு அரசு அந்த நாட்டு பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்றார்போல் தான் செயல்பட வேண்டும்.அப்போதுதான் மக்களுக்கு அது பயனுடையதாக இருக்கும். நன்றி. வணக்கம்.


CHELLAKRISHNAN S
செப் 03, 2024 13:25

When i was a school student, hindi was taught in schools. But if a boy gets even zero marks, he is passed. NO compulsion. interst students studied n other students no tension. in 1967 CNA abolished even to teach in schoos. I hindi should not be taught in TN why it was allowd in private schools run by politicians. Later i was posted in MP in a central govt office, in the early stages, I struggled, They gave me very good respect because of mysincerity.


Nagarajan D
செப் 03, 2024 17:39

அய்யா நீங்க அரசு வாத்தியாரா இருக்க வாய்ப்பு அதிகம்... நீங்கள் சொல்வது சிறுது ஏற்றுக்கொள்ளலாம்... பிடிக்கமுடியவில்லை என்றால் அந்த மாணவ மாணவிகளுக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்கப்படவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.. வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் அரசு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்தால் சரியாக வாய்ப்புள்ளது.. தனியார் பள்ளிகளில் சொல்லிக்கொடுத்தால் படிக்கும் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். உங்க அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் சரியாக படிக்காமல் இருக்க காரணம் என்ன? அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் மிக குறைவு... வந்து கையெழுத்து போட்டால் சம்பளம்.... 8 வகுப்பு வரை எல்லோரும் பாஸ் பிறகு எப்படி மாணவ மாணவிகள் படிப்பார்கள்? நாங்கள் படிக்கும் காலத்தில் வாத்தியார் கையில் பிரம்பு இருந்தது அவர்களேன்களை ஒழுங்கு செய்தார்கள்... என்று ஆசிரியர்கள் கையை ஓங்கினாலே குற்றம் என்று பெற்றோர் நினைப்பதும் ஒரு முக்கிய காரணம்.. எங்கள் காலத்திலும் சேட்டை செய்யும் மாணவர்கள் இருந்தார்கள்... ஆனால் வணங்கத்தக்க ஆசான்கள் இருந்ததால் இன்று நாங்கள் வணங்கத்தக்க வாழ்க்கை வாழ்கிறோம்... இன்று 90% ஆசிரியர்கள் சம்பளம் வாங்க பணிசெய்கிறார்கள்... என்றுமே மாணவர்கள் மூன்று தரமாக தான் இருந்தார்கள்... நம் மாநிலத்தில் சமசீர் கல்வி கொண்டுவந்து கல்வியின் தரத்தை ஆட்சியாளர்கள் cbse தரத்தில் கல்வி இருப்பதாக கல்வியமைச்சர் சொல்கிறார்...அப்படி இருந்தால் ஏன் நீட் தேர்வை வைத்து அரசு ஆசிரியர்களும் விளங்காத அரசியல் வியாதிகளும் ஒப்பாரி வைக்கிறார்கள் நீட் வேண்டாம் என்று?


Muralidharan raghavan
செப் 05, 2024 15:38

ஒரு வகையில் இவர் சொல்வது சரியோ என்று தோன்றுகிறது. நான் தமிழ் வழியில் பயின்றவன். எனக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை உண்டு. ஆனால் இன்று என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு தமிழில் எழுத்து பிழைகள் செய்கிறார்கள். தமிழ் கொலையே நடக்கிறது.


panneer selvam
செப் 07, 2024 01:15

Vaithilingam Sir , it seems you need to refer modern research papers on young school kids learning ability . In Europe , nearly all the schools , kids have to study minimum three languages . Even in Middle East , three languages learning is very common. Please come out of shell and not to underestimate kids leaning ability .


Priyan
செப் 17, 2024 15:16

இவரின் கருத்தில் நானும் உடன் படுகிறேன். மூன்று மொழிகள் படிப்பதால் ஒருவரின் செயல் திறன் வளர்ந்து விடுமா? தாய் மொழியும், பயிற்சி மொழியாக ஆங்கிலமும் படித்தாலே போதுமானது. ஹிந்தி போன்ற மொழிகளை பயிற்சி மொழியாக பயன் படுத்த முடியாது. தொழில் துறை மற்றும் மருத்துவ துறைகளில் ஆங்கிலம் அளவு மற்ற மொழிகளில் பயிற்சி நூல்கள் இல்லை என்பது தான் உண்மை. இணைப்பு மொழியாக ஹிந்தியையோ அல்லது மற்ற நாட்டு மொழிகளையோ மாணவர்கள் தங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி பாட திட்டத்திற்கு வெளியில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் படித்து விடலாம். மொத்தத்தில் மூன்று மொழி கொள்கை என்பது தான் தேவை இல்லாத ஆணி.


Yaro Oruvan
செப் 03, 2024 10:43

ஐயோ பாவம் அப்பாவி சாரி அப்பாவு.. திராவிட கும்பலுக்கு பொழப்பு டுமில் மட்டுந்தான்


Senthil
செப் 04, 2024 17:02

ஆட்சியாளர்களே அவர்கள்தானே, உங்களால் என்ன செய்ய முடியும்? குடுமி கும்பல் கதறுவதைத் தவிர இங்கு வேறு எதையும் செய்ய முடியாது.


Kesavan
செப் 02, 2024 22:50

எனது இவர்கள் கல்வியாளர்களா கடைந்தெடுத்த அயோக்கியர்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படும் இவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை இந்தி தான் சிறப்பானது இந்தி படித்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றால் நீங்கள் எல்லாம் உத்தர பிரதேசம் சென்று விடுங்கள் எதற்காக இங்கே உட்கார்ந்து இருக்கிறவன் தாலிய அறுக்கிற அப்பாவு அறிவோடு தான் பேசியிருக்கிறார் தமிழ்நாட்டை நாசமாக்க வேண்டும் என்பதற்காகவே கல்வியாளர்கள் என்ற பெயரில் கழிசடைகள் கருத்துக்கள் அரங்கேற்றப்படுகிறது


kangayan dhanusu
செப் 04, 2024 04:21

நான் வட மாநிலங்களுக்கு சென்றுள்ளேன் மொழி பிரச்சனை அப்போதுதான் எனக்கே தெரியும் தமிழ் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே. இன்றைக்கு கல்வி பயின்று சுமார் 10% மாணவர்கள் அனைவரும் வடமாநிலங்களில் வேலை செய்கின்றனர் . ஆனால் மொழி பிரச்சனை அவர்களுக்கு உள்ளது. தனியார் பள்ளிகளில் மூன்றாம் பாடமாக அனைத்து மாணவர்களும் படிக்கின்றனர்.. ஆனால் அரசுப்பள்ளி அப்படி அல்ல. அடிப்படை படிப்பு மற்றும் கற்றுக்கொண்டாப் நாம் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம் அன்பரே. ஆனால் தமிழை யாராலும் அழிக்க முடியாது. மும்மொழி தேவை. கல்வியாளர்கள் கூறுகின்ற போது அதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறியுள்ளனர். பதிவு செய்கின்ற போது தவறான கொச்சைப்படுத்துகின்ற வார்த்தைகளை தயவு செய்து பதிவு செய்யாதீர்கள். ஏனென்றால் நாம் அனைவரும் மனிதர்கள்.


Senthil
செப் 04, 2024 17:01

மிகச்சரி, இவர்கள் ஓசிச்சோறு நாதாரிகள்.


panneer selvam
செப் 07, 2024 01:21

Kesavan sir , do not degrade our educationist. Here the problem is about the students studying in government and aided schools where third language is not taught . In private schools , third language is generally taught. It is only learning a language in the schools . Speaker Appavu is not an educationalist , he is only a representative of Catholic churches where all in the schools belonged to churches teach third language . So Appavu knows what harm he is doing to rural students in government schools.


Kumar Kumzi
செப் 02, 2024 22:34

பக்கா திருட்டு திராவிஷ கொத்தடிமையா இருப்பான் போலருக்கே அப்புறம் ஏன்டா விடியல் இன்னும் துண்டுசீட்டு வாசிக்க தெரியாம இருக்கா


சமூக நல விரும்பி
செப் 02, 2024 21:45

தமிழன் அதிகம் படித்து முன்னேறி விட்டால் அவனை அடிமை ஆக்குவது கடினம் என்பதால் அவனை அதிகம் படிக்க விடாமல் தடுக்கிறது நம் மாடல் அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை