| ADDED : ஜன 25, 2024 12:48 AM
சென்னை:விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உட்பட மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு: விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும், திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மகேந்திரகுமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கும் போது, அங்குள்ள பிரச்சனைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன் முதலாக, அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதங்கள் எழுதினார். இதையடுத்து, பல்வேறு போக்குவரத்து கழக அதிகாரிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.