உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூச்சுத்திணறுது முன்பதிவு; தவிக்க வைக்குது தட்கல்

மூச்சுத்திணறுது முன்பதிவு; தவிக்க வைக்குது தட்கல்

பாதுகாப்பான பயணத்திற்கு அனைவரும் விரும்புவது ரயிலையே. ஆனால் ரயில்வேயின் இணையதளம் படுத்தும்பாடு பயணத்தின் மீது வெறுப்பையே உருவாக்குகிறது.பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தபின் ரயில்வேதுறையில் புரட்சி நடந்து வருகிறது. புதிய ரயில்கள், வழித்தடங்கள், வடிவமைப்பு என ரயில்வே சாதனை படைத்து வருகிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறை தொடர்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இணையதள பயன்பாடு அதிகரித்து வருவதால் ரயில்வே டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு அதிகரித்து வருகிறது. இதுவரை முன்பதிவுக்கான காலம் 120 நாட்கள் என இருந்ததை நவம்பர் 1 முதல் 60 நாட்களாக ரயில்வே குறைத்துள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தட்கல் முன்பதிவு முன்பை விட சிக்கலானதாக மாறிவிட்டது.பயணத்திற்கு முதல்நாள் தட்கலில் முன்பதிவு செய்யலாம். முன்பு காலை 10:00 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்குமான தட்கல் முன்பதிவு துவங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதை மாற்றி ஏ.சி. உள்ளிட்ட உயர் வகுப்புகளுக்கு காலை 10:00 மணிக்கும், படுக்கை வசதி முன்பதிவுக்கு காலை 11:00 மணி எனவும் மாற்றப்பட்டது.அதன்பின் சில நாட்கள் முன்பதிவு பிரச்னையின்றி நடந்தது. தற்போது தட்கலில் டிக்கெட் எடுப்பது இமாலய சாதனையாக மாறிவிட்டது. படுக்கை வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டால் அவர்களை பெரும் அதிர்ஷ்டசாலிகளாக கருத வேண்டியுள்ளது.

ஏன் இந்த பிரச்னை

பயணிகள் பயன்பாடு அதிகரித்த அளவிற்கு ரயில்வே இணையதளத்தின் வேகம் அதிகரிக்கவில்லை. காலை 11:00 மணிக்கு இணையதளத்திற்குள் நுழைவதே பிரம்ம பிரயத்தனமாக உள்ளது. அப்படி உள்ளே நுழைந்துவிட்டாலும் முன்பதிவுக்கு பெயர்களை பதிவு செய்துவிட்டு சப்மிட் செய்தால் இணையம் சுற்றிககொண்டே இருக்கிறது. அதன்பின் உள்ளே சென்றபின் கேப்சா கேட்கிறது. அந்த கேப்சாவை உள்ளிட்டபின் மீண்டும் சுற்றல். இடையில் கேப்சா தவறு என்று மெசேஜ் வரும். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்க வேண்டும். கேப்சாவும் சரியாக இருந்து உள்ளே சென்றால் மீண்டும் பணம் செலுத்துதலில் தாமதம்... அப்போதும் மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதையும் கடந்து பணம் செலுத்துவதற்குள் நேரம் கடந்து விடும். டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு போய் விடுகிறது.தட்கல் முன்பதிவை பொறுத்தவரை துவங்கியதில் இருந்து 2 நிமிடத்திற்குள் முன்பதிவு முடிந்தால் தான் டிக்கெட் கிடைக்கும். குறிப்பாக அதிகம் வரவேற்புள்ள தென் மாவட்டங்கள் - சென்னை ரயில்களில் ஒன்றரை நிமிடத்திற்குள் முடிய வேண்டும்.ஆனால் அண்மைக்காலமாக இது சாத்தியமில்லாததாக மாறி வருகிறது. ஆனால் ஏஜன்ட்களிடம் கொடுத்தால் டிக்கெட் கிடைத்து விடுகிறது.இதற்கு ஒரே தீர்வு ரயில்வே இணையதளத்தை வேகப்படுத்துவது மட்டுமே. இதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு, பயணிகளுக்கு இனிமையான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

கேப்சா தொல்லை

பயணிகள் எளிதில் முன்பதிவு செய்துவிட முடியாதபடி பல தொல்லைகளை ரயில்வே இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி. உருவாக்கியுள்ளது. அதில் முதலிடம் பெறுவது கேப்சா. சாதாரண நேரங்களில் வெள்ளை வண்ண பின்னணியில் கேப்சா தெரியும். தட்கல் நேரத்தில் மட்டும் கருப்பு நிற பின்னணியில் எழுத்துகள் தெரியும். அதுவும் தெளிவாக தெரியாது. பூஜ்யத்திற்கும், ஆங்கில 'ஓ' என்ற எழுத்துக்கும் வேறுபாடு இருக்காது. ஒருமுறைக்கு இருமுறை பார்த்தால் தான் புரியும். நிமிடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் போது இயல்பாகவே வரும் பதட்டத்தால் அதை சரியாக பதிவிட முடியாது.தட்கல் முன்பதிவு நிமிடத்தின் அடிப்படையிலானது. அதில் கேப்சாவை வைப்பதும், அதிலும் கருப்பு பின்னணியை கொடுத்து யாரும் எளிதில் கணிக்க முடியாதபடி செய்வதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.ஏஜன்ட்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே தனிப்பட்ட பயனாளர்களை ஐ.ஆர்.சி.டி.சி., வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

gopalasamy N
நவ 15, 2024 20:58

ரயில்வே பயணம் கஷ்டம் சரியில்லை என்பவர்கள் ,தமிழ்நாடு அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி சந்தோசமாக இருக்கலாம் . கட்டணம் மிக குறைவு, வசதிகள் அதிகம்.


சி சொர்ணரதி
நவ 15, 2024 20:36

இந்த பதிவை எழுதியவருக்கும்,வெளியிட்ட தினமலருக்கு நன்றிகள். அப்படியே எங்களின் கஷ்டத்தை வெளியிட்டு உள்ளீர்கள்.


K.n. Dhasarathan
நவ 15, 2024 20:20

தென்னக ரயில்வேயில் நிர்வாக சீர்கேடுகளால் தலை சுற்றுகிறது, யார் யோசனை சொன்னார்களோ தெரியவில்லை, 4 மாத முன்பதிவு 2 மாத மாக சுருங்கிவிட்டது, இதில் ரயில்வேக்கு நஷ்டம் என்பது ஏன் இன்னும் புரியவில்லை?, மக்களுக்காக நல்லது என்று சொல்கிறார்கள், மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஏன் இணைய வேகத்தை அதிகப்படுத்தவில்லை. ? ஏன் கான்செல் செய்யும் டிக்கட்டுக்கு அதிக/ அநியாய பணம் பிடிக்கிறார்கள் ? முதியோர் / ஊனமுற்றோர் சகாய டிக்கெட்டை ரத்து செய்தார்கள்?, வழக்கு என்று பேர் சொல்லி தப்புவது எப்படி ?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:06

ஊழலை, மோசடியை எதிர்க்க முடியல, தடுக்க முடியல ன்னா மாற்று வழி இருக்குது... அதிலேயே ஐக்கியம் ஆயிடவேண்டியது தான் .... அதனாலதான் சொல்றேன் ...... ஐ ஆர் சி டி சி பங்குகளை வாங்குங்க ..... மோடி குஷி ஆயிருவார் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:04

ரெயில்வே அமைச்சர் ஐஐடி யில் படிச்சவரு ........ அவரை யாரும் குறை சொல்லாதீங்க ......


C.SRIRAM
நவ 15, 2024 12:00

முன் பதிவு நாட்களை குறைத்தது சரியல்ல . இதனால் ரயில்வே குறுகிய கால சூழல் முறை வட்டியில்லா வசதியை குறைந்தது ஆயிரம் கோடி ரூபாய் இழந்திருக்கிறது .


panneer selvam
நவ 15, 2024 11:35

On line reservation of Railways is handled by separate agency called IRCTC a subsidiary of Govt of India but listed public limited company . As per their notification , they have upgraded their tem but amount of on line booking is rising meteorically . Again they have initiated next generation upgradation but it will take some more time . Despite of so many new trains in last 4 years to South Tamilnadu still traffic is increasing rapidly . Just count number of trains between Chennai and Madurai now comparing 12 years ago . Now electrification of nearly all the train routes in Tamilnadu is completed . Even doubling of trunk routes also nearly completed still we are in saturation point especially between Arakonam -Chennai and Villupuram -Chennai trunk routes . Traffic growth is mind boggling


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 15, 2024 11:29

இதெல்லாம் தன்னிச்சையாக நடக்கவில்லை. எல்லாமே வேண்டுமென்றே நடக்கிறது. இதைத்தான் பல நாட்களாக மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். முதலில் தேவையான ரயில்களை இயக்காமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் மக்களை நீண்ட நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வைத்து லாபம் பார்க்கிறார்கள். அப்புறம் அதை ரத்து செய்யும் பொது அதற்கும் கட்டணத்தை கொள்ளை அடிக்கலாம். அப்புறம், இந்த தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் என்று சொல்லி பணய சீட்டுக்களை பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை அடிக்கலாம். மேலும், தேவையான ரயில்களை இயக்காமல் இருக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து லம்பாக ஒரு தொகை வரும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தேவையான ரயில்களை இயங்குவதில்லை. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் போதுமான ரயில்களை இயக்கவில்லை. பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இன்றைக்கு, அரசியல்வாதிகளோ, அமைச்சர்களோ அல்லது நாட்டின் பிரதமரோ ஒருமுறை முன்பதிவற்ற பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு புரியும் மக்களின் வலி . ஆனால், அப்படி இல்லாமல் சொகுசு விமானங்களில் பறப்பதால் அவர்களுக்கு மக்களின் வேதனை புரிவதில்லை. ஏழைகளின் அரசு என்று மார்தட்டும் மோடியின் அரசில்தான் இந்த அவலம். இதற்க்கு காரணம் அதிகாரிகளா, ரயில்வே அமைச்சரா அல்லது பிரதமரா என்று தெரியவில்லை. எப்படியாயினும் பிரதமர் தான் மக்கள் படும் துன்பங்களுக்கு பொறுப்பு.


panneer selvam
நவ 15, 2024 15:22

Nakeera , South Tamilnadu trunk route Chennai - Nagercoil and Western Trunk route Chennai - Coimbatore doubling as well as electrification is completed . But , at the same time due to increased volume of goods traffic as well new additional express trains mainly to north from deep south , the trunk routes are saturated especially Arakonam - Chennai and Villupuram - Chennai routes . Additional trains are very difficult nowadays unless we establish a dedicated goods tracks .


முக்கிய வீடியோ