உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரப்பளவு பிழைகளை சரி செய்ய அதிகாரம் கேட்கும் நில அளவை துறை

பரப்பளவு பிழைகளை சரி செய்ய அதிகாரம் கேட்கும் நில அளவை துறை

சென்னை : பட்டா உள்ளிட்ட ஆவணங்களில், நிலத்தின் பரப்பளவு பிழைகளை சரி செய்வது தொடர்பான கோப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, நில அளவை துறை உதவி இயக்குனர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் நிலங்களின் பட்டா, நில அளவை வரைபடம் பெறுவதில், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில், நில அளவை துறையினர் உரிய பணிகளை முடித்தாலும், சம்பந்தப்பட்ட கோப்புகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வருவாய் துறையிடமே உள்ளது. வருவாய் துறையில் மாவட்ட மற்றும் கோட்ட அளவில் உள்ள உயரதிகாரிகள், இதில் முடிவு எடுப்பதில் தாமதம் செய்கின்றனர். இதனால், பொது மக்கள் பிழையான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சொத்து விற்பனையில் நிலத்தின் உட்பிரிவு உருவாக்கம் தொடர்பான பணியிலும், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்களிடம் ஒப்புதல் பெற முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.நில அளவை துறைக்கும் தாலுகா அலுவலகம்நிலத்தை அளந்து உட்பிரிவை, நில அளவையாளர் கள் தான் உருவாக்குகின்றனர். இதை, தாலுகா அளவிலான துணை ஆய்வாளர்களே அங்கீகரிக்க அதிகாரம் வேண்டும். நில பரப்பளவு பிழைகளை சரி செய்யும் கோப்புகளை, மாவட்ட அளவில் உள்ள நில அளவை துறை உதவி இயக்குனர்களே அங்கீகரிக்க அதிகாரம் தர வேண்டும். வருவாய் துறையின் தாலுகா அலுவலகங்கள் போன்று, நில அளவை துறைக்கும் தாலுகா அளவில் தனி அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், நிலம் சார்ந்த மக்களின் பல்வேறு பிரச்னைகளில் துரிதமான முடிவுகள் எடுக்க முடியும். - வெ.மகேந்திரகுமார்மாநில தலைவர், தமிழக நில அளவை துறை அலுவலர் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

jayvee
பிப் 13, 2024 19:28

சர்வேயரை பார்த்தாலே பணம் கேட்கும் அவலம்.. இதில் பட்டாவில் தவறு என்பதும் இவர்கள் வேண்டுமென்றே செய்யும் ஒரு வேலைதான்.. அதிகம் லஞ்சம் குடும்பத்திற்கும் நாட்டுக்கும் கேடு..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை