உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு

திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது; துரைமுருகன் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் இளைஞர் அணி, திமுக 75 அறிவுத் திருவிழா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (நவ.8) நடந்தது. நிகழ்ச்சியை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசுகையில், உதயநிதியை வெகுவாக பாராட்டினார். அவர் பேசியதாவது;ஒரு கட்சி ஆரம்பித்தால் பல கொள்கைகளை சொல்வார்கள். அந்த கொள்கைகளை நிறைவேற்ற கட்சி வேலை செய்யும். ஆனால் சில நேரங்களில் கட்சிகளின் கொள்கைகளில் கூட சமரசம் ஏற்படுவது உண்டு. ஆனால் உயிர்க் கொள்கைகளுக்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.திமுகவை பொறுத்தவரையில், அரசியலில் சமரசங்கள் ஏற்பட்டாலும் உயிர்க் கொள்கையான ஹிந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இவைகள் எல்லாம் நாம் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது இல்லை. இந்த இயக்கத்தை ஆரம்பித்து 67ல் ஆட்சியை பிடித்து, அதை கருணாநிதி கையில் அண்ணாதுரை ஒப்படைத்துவிட்டு போனார். அவர் மிக வேகமாக, அற்புதமாக இந்த நாட்டை ஆண்டார், இயக்கத்தை கட்டிக் காத்தார்.அந்த தலைவரும் மறைகிற பொழுது, ஸ்டாலினை கூப்பிட்டு என் பாதையில் நட என்று அறிவுறுத்தி கட்சியை ஒப்படைத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் கருணாநிதியுடன் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவன். ஸ்டாலினை இளம்பிராயத்தில் இருந்து அறிந்தவன்.நானே இன்றைக்கு வியக்கிற அளவுக்கு, போற்றுகிற அளவுக்கு, சல்யூட் அடிக்கிற அளவுக்கு அவர் தமது பணியை ஆற்றுவதை பார்த்து மெத்த பெருமைப்படுகிறேன். ஏன் என்றால் கருணாநிதியிடம் பணியாற்றியவர். அவரிடம் கற்றவர்.அதே போன்று, அடுத்து இருக்கிற உதயநிதி, அந்த இடத்திற்கு நிச்சயமாக, சத்தியமாக, ஒரு காலத்திற்கு வருவார். அப்படி வருகிற பொழுது, கருணாநிதி, ஸ்டாலின் பெரும் பேரும் புகழைவிட அதிகமாக பேரும், புகழும் பெறக்கூடியவர் என் தம்பி உதயநிதி. நான் என்ன ஜோசியக்காரனா...இல்லை. இந்த வார்த்தையை ஒரு காலத்தில் கருணாநிதி என்னிடத்திலே சொன்னார். என்னையே மிஞ்சிடுவார் ஸ்டாலின் என்று சொன்னார். இது ஸ்டாலின், உதயநிதிக்கு தெரியும்... இதை நான் நீண்ட நெடுங்காலமாக சொல்லி வருகிறேன். காரணம்... இந்த இயக்கத்தை அழியாமல் காக்க வேண்டும். வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு எதிர்ப்பு கிடையாது. நமக்கு மட்டும்தான் எதிர்ப்பு. தமிழைச் சொன்னால் எதிர்ப்பு, தன்மானத்தை சொன்னால் எதிர்ப்பு, சுயமரியாதையை கேட்டால் எதிர்ப்பு, மாநில சுயாட்சியை கேட்டால் எதிர்ப்பு. ஆக எதை கேட்டாலும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி கையிலே ஆட்சியை வைத்துக் கொண்டு நடத்தி வருகிறோம்.உதயநிதியை சொல்வேன், ராஜராஜனுக்கு பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜன் மன்னனாக இருக்கிற பொழுது, அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக் கொண்டான். தாய்லாந்து வரையிலே தனது ஆட்சியை நிறுவிக்காட்டியவன். இன்றைக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... உதயநிதி ஒருநாள் அத்தகைய ராஜேந்திர சோழனாக மாறுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதை செய்தாலும் உதயநிதி சரியாக செய்கிறார். இனி இந்த இயக்கத்துக்கு அழிவில்லை. கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிற உதயநிதி, இனிமேல் கட்சியை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Raghavan
நவ 09, 2025 19:18

இந்த வயதிலேயும் இப்படி சொம்பு தூக்கித்தான் பதவியை காத்துக்கொள்ள வேண்டுமா? அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எதுவும் சரியில்லாத போது உமது காட்டில் மழை. ஆனால் அரசு அன்றுகொல்லும் தெய்வம் நின்றுதான் கொல்லும் என்று ஒரு சொலவடை உண்டு அது எவ்வளவுதூரம் உமது விஷயத்தில் நடக்கிறது என்று பார்க்கலாம்.


raja
நவ 09, 2025 18:37

இதோ வந்துட்டார்ல கட்டுமர பரம்பரைக்கு கொத்தடிமை நான் என்று அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர். .


SUBBU,MADURAI
நவ 09, 2025 13:46

என்னதான் ஐஸ் வச்சாலும் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு இந்த முறை திமுக சீட் கொடுக்காது. ஆனால் இவரிடம் உள்ள காசை கரைக்க மற்ற திமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு பண்ணுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளையிடுவார்! ஆனால் அதை செயல் படுத்துவதற்கு துரைமுருகன் என்ன செந்தில் பாலாஜியா? து.மு. நம்ம கட்டுமர கருணாநிதிக்கே தண்ணி காட்டியவர் அவருக்கெல்லாம் ஸ்டாலினும் உதயநிதியும் எம்மாத்திரம்?


xyzabc
நவ 09, 2025 10:56

போதும்


ramani
நவ 09, 2025 04:41

திமுகவின் அழிவு என்று சொல்ல வந்தார். அப்புறம் மாத்தி கட்டார். பாவம்


Palanisamy T
நவ 09, 2025 12:03

திமுகவின் அழிவென்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீர்கள். அங்கே திராவிடமுள்ளது. திமுக வெறும் அரசியல் கட்சி. திராவிடம் ஆரியம் என்பது இந்திய துணைக் கண்டத்தின் அழிக்கமுடியாத வரலாறுகள். இன்று திராவிடம் என்ற பேரில் ஒரு இயக்கம் மட்டும்தான். அதற்க்கு மேல் அங்கு எதுவுமில்லை. திராவிடம் மறைந்துவிட்டால் நாளை தமிழரென்ற அடையாளமும் மறைந்து போனாலும் போகலாம் மேலும் அறிஞர் அண்ணா காலத்தில் பல நல்லத் தலைவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின் அங்கு நல்ல தலைவர்கள் குறைந்துப் போனார்கள். இனிமேலாவது இன்று அந்த வாய்ப்புகள் மலரவேண்டும். திமுக மக்கள் இயக்கம். அது குடும்பக் கட்சி யில்லை.


raja
நவ 09, 2025 18:47

கூமுட்டைகளுக்கு தெரியாது தமிழன் திராவிடன் இல்லையென்று தமிழனை ஏமாற்ற கன்னட வெங்காயம் புகுத்தியது தான் இந்த திராவிடன் அதை தொடர்ந்தது திருடர்கள் முன்னேற்ற கழகம் தெலுங்கர்கள் ஆன பேரறிஞன் அண்ட் கட்டுமரம்.. அதை தொடர்ந்து அனைத்தையும் திருடும் திருட்டு முக மலையாளி.. அதை தேசிய முக்கு திமுக தெலுங்கு காந்த ரெட்டியார்..மக்கு திமுகா ஒரு தெலுங்கு நாயுடு...இப்படி தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் தமிழனை தமிழ் தமிழன் என்று சொல்லி கொள்ளையடிக்கும் திராவிட கூட்டம்...


Palanisamy T
நவ 09, 2025 02:22

திமுகவில் இளைஞர்களுக்கு பஞ்சமா? வேறு இளைஞர்கள் திமுகவை வழிநடத்த அக்கட்சியில் யாருமில்லையா? கருணாநிதிக் கையில் கட்சிவந்தப் பிறகு அவருக்கு பின் இன்றைய முதல்வர் இப்போது இவருக்கு பின் உதயநிதி என்கிண்றீர்கள், என்ன நடக்கின்றது? திமுக மக்கள் இயக்கமா அல்லது குடும்ப சொத்தா? கொஞ்சம் புரியும்படியாக பேசுங்கள்.


sankaranarayanan
நவ 09, 2025 02:19

திமுகவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உதயநிதிக்கு இருக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.இந்த வயதில் இப்படி தோத்திரம் செய்தால்தான் குறைந்த பட்சம் கட்சியிலாவது புள்ளயாண்டானுக்கு ஓர் இடம் கிடைக்கும் இல்லையேல் கோபாலபுர விசுவாசிக்கு மன்னுதான் கிடைக்கும்


Ramesh Sargam
நவ 09, 2025 00:01

"என் கடன் பணி செய்து கிடப்பதே" - இது பழமொழி. "என் துரைமுருகன் கடன் வாழ்நாள் முழுக்க கருணாநிதியின் குடும்பத்துக்கு பணி செய்து மடிவதே" - இது புது மொழி


Venkat esh
நவ 08, 2025 22:51

ஒரு பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது..... சூது கவ்வும்


Gp
நவ 08, 2025 22:30

Nijathil valum kattappan ivar. Illa vaeru oruvar katchiku thalaivar aaga mudiyuma? Mudiyathula idhu vanja pugaltchi madhiriyum theriyudhu


முக்கிய வீடியோ