உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சு தோல்வி: வரும் 30ல் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேச்சு தோல்வி: வரும் 30ல் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை : 'கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின், ஆறு கோரிக்கைகள் தொடர்பான, மூன்றா-ம் கட்ட பேச்சு நேற்று நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bgmk6eke&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தரராஜன், ஆறுமுகநயினார், கமலகண்ணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில், 'ஊதிய ஒப்பந்த பேச்சு தொடர்பான கோப்புகள், நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிப்., 6ம் தேதி, அகவிலைப்படி உயர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறோம். வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது' என்று கூறப்பட்டது.அடுத்த கட்டமாக, பிப்., 7ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தலாம் என்றும் கூறப்பட்டது.இதுகுறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ''பேச்சு அமைச்சர் வராதது வருத்தம் அளிக்கிறது. காலவரைக்கு உட்பட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தயாராக இல்லை. இது எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதையொட்டி, வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kannan
ஜன 20, 2024 21:47

இந்தியா அரசாங்கம் மாநில போக்குவரத்துக்கு துறைக்கு டீசல் உற்பத்தி செய்யும் REFINERY இக்கு அனுமதி கொடுத்து மத்திய அரசு வரியை நீக்க வேண்டும் .போக்குவரத்துக்கு துரையின் கடன் குறையும்.தேர்தல் நேரத்தில் strike செய்யாமல் வேறு எந்த நேரத்தில் strike செய்ய முடியும்.


g.s,rajan
ஜன 20, 2024 19:59

இந்தியாவில் குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் அரசாங்கத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மானிய விலையில் கட்டாயம் டீசல் அளிக்கப்பட வேண்டும் ,பொதுப்போக்குவரத்தில் பயன் படுத்தும் எரிபொருளுக்கு வரிகள் எதையும் மத்திய மாநில அரசுகள் விதிக்கக் கூடாது அப்போதுதான் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்க வாய்ப்பு நிச்சயம் குறையும்.அங்கு காணப்படும் வரலாறு காணாத நஷ்டத்திற்கு ஊழலும் ஒரு முக்கியக் காரணம்,அத்தனையும் கண்டிப்பாகக் களைய வேண்டும். . .


g.s,rajan
ஜன 20, 2024 18:12

ஸ்டார்ட் தி மியூசிக் .....


D.Gunasekar
ஜன 20, 2024 16:11

தயவுகூர்ந்து எடுத்துரையுங்கள் அரசு போக்குவரத்து துறை நஷ்டத்தில் நடப்பதற்கு காரணம் அரசு தான் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டண விகிதத்தை அமைப்பது பணமதிப்பு வீழ்ச்சி உதிரிபாகங்கள் வாகனவிலை உயர்வு இதன் அடிப்படையில் உயர்த்தினால் ஏன் நஷ்டம் ஏற்படும் பொருளாதார விதி பேருந்துகளுக்கு தேவைபடும் பொருள்கள் விலை உயரும் அதன் அடிப்படையில் கட்டணம் உயர்த்தவேண்டும் இதை செய்யாமல் அரசு தன் சுயநலத்திற்காக ஓட்டு வாங்கவேண்டும் என்பதின் அடிப்படையில் உயர்த்தவில்லை கடும் நஷ்டம் என்பது போக்குவரத்து தொழிலாளர்கலோ அல்லது பேருந்துகளாலோ இல்லை


PV, முத்தூர்
ஜன 20, 2024 11:02

வேலைநிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன், முதலில் உங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


R KUMAR
ஜன 20, 2024 10:51

போக்குவரத்து கழகங்கள் என்பது சுய சார்புடைய நிறுவனங்கள் ஆகும். இவ்வாறான நிலையில் பணியாளர்களுக்கு கொடுக்கவேண்டிய நிதி பழங்கள் குறித்த கோப்புகளை ஏன் நிதித்துறை கையாளவேண்டும். '] கழகங்களின் நிதி ஆதாரங்களின் அடிப்படையில், அந்தந்த கழகங்கள் முடிவெடுக்கவேண்டுமே அல்லாது, அரசுக்கு அனுப்புவது சரியான செயல் ஆகாது. இவ்வாறு முடிவெடுக்க ஏன் கழகங்கள், அதற்க்கு தனியே நிர்வாக இயக்குனர்கள், மற்ற பணியாளர்கள் வேண்டும். அரசின் போக்குவரத்து துறையே முடிவெடுக்கலாம்.


panneer selvam
ஜன 20, 2024 15:54

Kumar ji , your statemen is correct but reality is these corporations do not act independently . Now all these transport corporations are nearly bankrupt . They can not raise or lower the ticket price without government approval. They do not get reimbursement for freebies .announced by government . You could see all these meetings are headed by transport minister not by MD of transport corporations. Dravidian parties took these transport corporations as personal fiefdom . Hence no salvation , they will bleed permanently


Balaji Gopalan
ஜன 20, 2024 16:01

கருத்து நன்றாக தான் உள்ளது. மத்திய அரசின் Provident Fund வாங்க முடியாமல் எதனை பேர் அவதி படுகின்றனர் தெரியுமா


gopalasamy N
ஜன 20, 2024 09:32

Good idea state govt not fit to rule so all govt assets must be sold


duruvasar
ஜன 20, 2024 08:24

உதயநிதி இதை நினைவில் கொள்ளுங்கள்.


தமிழ் மைந்தன்
ஜன 20, 2024 07:47

இந்த போராட்டம் தேவையற்றது. போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தில் இயங்குவதால் ஊக்கத்தொகை மிகை ஊதியம் போன்றவை தேவையில்லை...... லாபத்தில் இயக்கும்வரை ஊதியத்தையும் சற்று குறைந்து வழங்கலாம்... மீண்டும் போராட்டம் நடத்தினால் போக்குவரத்து துறையில் 50 சதவீத பேருந்துகளை தனியாருக்கு கொடுத்து அந்த பணத்தை முதுநிலை வரிசைப்படி கட்டாய ஓய்வு கொடுத்து அந்த ஊழியர்களுக்கு கொடுக்கலாம் இதனால். பொதுமக்களுக்கு கடன் சுமை குறைவதுடன் சேவையும் சிறப்பாக இருக்கும்


Premanathan S
ஜன 20, 2024 09:57

ஆளும் கட்சிக்கு கமிஷனும் கிடைக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை