வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சென்னை சுபர்பன் ரயில் குறைந்த பட்ச கட்டணத்தை பத்து ரூபாய் ஆக அதிகரிக்க வேண்டும்.. தாம்பரம் மாம்பலம் இடையே வெறும் ஐந்து ரூபாய் கட்டணம் மட்டுமே..ஆனால் இதே தொலைவுக்கு மாநகர பேருந்து கட்டணம் 35 ரூபாய்..35 ரூபாய் கொடுத்தும் கூட்டம் பிதுங்கி வழிகிறது என்னும் போது ரயில் கட்டணம் மினிமம் பத்து ரூபாய் என்று வைத்தால் கூட அதுவும் மிகக்குறைவே.... சென்னை காரனால் மினிமம் பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாதா என்ன?
இது முக்கியத்துவம் வாய்ந்த செயல் உடனே செயல்படுத்த ஆவணம் செய்ய வேண்டுகிறேன்
இப்போது உள்ள 3 வது ரயில் பாதைய்ய சரியாக திட்டமிட பட வில்லை. ரயிலுக்கும் பிரிட்ஜ்ஜின் தூணுக்கும் இடை வெளி மிக குறைவாக உள்ளது. அதனால் பரனுர் ஓவர் பிரிட்ஜினால் மின்சார ரயில் 15 கிலோ மீட்டர் வேகத்தில் தான் கடந்து செல்கிறது.
பரனுர் ரோட் ஓவர் பிரிட்ஜ் தான் ப்ராபளம்
முதலில் தாம்பரம் ஸ்ட்டேஷனில் 7,8,9,10 பிளாட்பாரம் களுக்கு escalator வசதி செய்து கொடுக்கவும். தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, யோகா மருத்துவமனை என்று அங்கெல்லாம் செல்வதற்காக இருந்த ஒரு ரயில் நிலையம் காணாமல் போய் விட்டது. ரயில்வே வாரியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நில ஆர்ஜிதம் செய்யவே இருபது ஆண்டுகள் ஆகிவிடும்
வரவேற்க வேண்டிய திட்டம். இந்த நான்காவது பாதையை மிக விரைவில் தொடங்கி முடித்திடல் வேண்டும். மூன்றாவது பாதையை சரிவர பயன்படுத்துவது இல்லை. காலையில் மூன்றாம் நடைமேடையில் வரும் ரயில்கள் மாலையில் முதல் நடைமேடையில் வருகிறது. காலையில் இரண்டாம் நடைமேடையில் வரும் ரயில்கள் முதல் நடைமேடையில் வருகிறது. ஆக புதியதான முதல் நடைமேடை சரிவர பயன்படுத்துவது இல்லை என்றே சொல்லலாம். மேலும் இப்போது சில நாட்களாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மின்சார தினசரி ரயில்களை சரியான குறிப்பிட்ட நேரத்தில் இயக்குவது இல்லை. மிகவும் தாமதாமாகிறது. மறைமலை நகர் கேட் தொடர்ந்து பல நாட்கள் தொந்தரவு தான். இந்த கோலத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் பத்து ரயில் சேவையை நிறுத்தியுள்ளனர் என்று ரயிலில் தினசரி பயணிக்கும் ரயில் ஊழியர்களே பேசிக் கொள்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சில முக்கிய ரயிலை நிறுத்தி விட்டனர். அதனால் கூட்டம் வழிகிறது. காலை சரியான நேரத்தில் ரயில்கள் வந்து சேராததால் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் கூட்டம் வழிகிறது. முண்டியடித்து ஏறுவதில் சண்டையே நடைபெறுகிறது.
விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை அமைக்கும் பணி என்ன ஆச்சு என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும் ஓர வஞ்சனை செய்வது ஏன்? ஆம்னி பஸ் பிழைக்க அப்போது மாயவரத்தில் ஜெயித்த ஐயர் அகலப் பாதை இயக்கத்தை தாமதித்து பின்னர் தஞ்சாவூர் வியாபாரிகள் போராட்டம் நடத்தி துவங்கினார்கள் என்று கேள்வி...
ஊ ஊ இதனால் தலை குடும்பத்திற்கு ஆதாயம் ஒன்று மில்லை அதனால் முட்டுக்கட்டைய்ய போட படும் கங்காணிகள் ஒரு சாராய கம்பெனி முதலாளி பாலு ராஜமாணிக்கம் மற்றும் கன்னி மொழி அம்மையார் ?
மிகவும் அவசியமான திட்டம். போர்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும்