உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்; தமிழக கடல்சார் வாரியம் திட்டம்

8 இடங்களில் சிறு துறைமுகங்கள்; தமிழக கடல்சார் வாரியம் திட்டம்

சென்னை : தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு கடல்சார் வாரியம் இயங்கி வருகிறது. இவற்றின் கட்டுப்பாட்டில், பல்வேறு மாவட்டங்களில், 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் சில சரியான செயல்பாடு இன்றி உள்ளன. இந்த துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். அதன் வாயிலாக, தமிழக கடல்சார் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருகும். அ.தி.மு.க., ஆட்சியில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்த முடியாமல் போனது. இந்த துறைமுகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக துறை அமைச்சர் எ.வ.வேலு, செயலர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரிய இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன்படி, 40 ஆண்டுகளுக்கு பின், கடலுார் துறைமுகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, செங்கல்பட்டு - முகையூர், பனையூர், விழுப்புரம் - மரக்காணம், கடலுார் - சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் - விழுந்தமாவடி, துாத்துக்குடி - மணப்பாடு, மயிலாடுதுறை - வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில், சிறு துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த துறைமுகங்கள், 30 முதல் 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்பட உள்ளன. இங்கு கடல் சுற்றுலா போக்குவரத்து, கப்பல் கட்டுமான தொழில், மீன் உணவு தொழில்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தத்வமசி
ஜூலை 15, 2025 12:02

வரவேற்போம். இன்று ஆண் மற்றும் பெண் இருவரிலும் பட்டதாரிகள் மிகவும் அதிகம். அதனால் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் அதிகம் தேவை. இது போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும், சுற்று வட்டாரத்தில் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் வியாபாரம் வளரும். ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதோ சாலை அமைக்க போட போராட்டம், துறைமுகம் கட்ட போராட்டம், ஏர்போர்ட் கட்ட போராட்டம், ராக்கெட் ஏவுதளம் கட்ட போராட்டம், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி கம்பெனி திறக்க வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி, சாம்சங் போன்ற கம்பெனிகளை முடக்குவதற்கு போராட்டம், இப்படியே சென்று கொண்டிருந்தால் தமிழகம் விளங்கும். உலகமே சிவப்புக் கொடிகாரனை தூக்கிப் போட்டு விட்டது. உண்டியல் குலுக்கிகளை மேற்கு வங்கமும், திரிபுராவும் மொத்தமாக துடைத்து எரிந்து விட்டன. இன்னும் தமிழகத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஏன் ?


Gurumoorthy K
ஜூலை 15, 2025 09:43

போகும் வேளையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட தயாராகி விட்டது திராவிட மாடல் அரசு


D Natarajan
ஜூலை 15, 2025 07:48

எங்கே அந்த போராளிகள், இதனால் மீனவர் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று போராட வேண்டாமா. மத்திய அரசு கொண்டு வந்த துறைமுகத்தை தாரை வார்த்து கேரளாவுக்கு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொண்டேமே . இந்த கேடுகெட்டவர்களை 10 ஆண்டு ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.


GMM
ஜூலை 15, 2025 07:12

ஒரு மாநிலம் என்பது நில பகுதி மட்டும் கொண்டது. வான்வெளி, கடல் போன்றவை அனைத்து மாநில சொத்துகள். அல்லது தேசிய சொத்து. தேசிய அளவில் மட்டும் தான் கடல் சார் வாரியம். மாநில அளவில் உள் இருக்கும் குளம், குட்டைகள், சிறு ஆறுகள், நதிகள் இணைப்பு தான் மக்களுக்கு பலன் தரும். மேலும் காடுகள் உருவாக்கலாம். தரிசை கழனி நிலமாக மாற்றலாம். எதிர் காலத்தில் பலன் தரும். திராவிடம் எப்போதும் பிரச்சனை உருவாக்கும் இயக்கம்.?


Varadarajan Nagarajan
ஜூலை 15, 2025 06:59

குஜராத்திற்கு அடுத்து நீண்ட கடற்கரையை கொண்டது தமிழ்நாடு. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது சிறிய துறைமுகங்களை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவதத்துமூலம் 27 சிறிய துறைமுகங்கள் தற்பொழுது செயல்படுகின்றது. அதனால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகம் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. அதையும்தாண்டி ஏதாவது முயற்சியெடுத்தால் உடனே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது இல்லையென்றால் ஐய்யய்யோ அதானி உள்ள வந்துருவார் என ஏதாவது ஒரு பிரச்னையை எதிர் கட்சிகள் பின்னல் இருந்து தூண்டுகின்றது. பிறகு எப்படி தமிழகம் வளரும். வாய்ப்பேயில்லை ராசா


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜூலை 15, 2025 09:33

அதானி கட்டிங் கொடுத்து விட்டால் பின் சைலண்ட் மோட்.


முக்கிய வீடியோ