உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு 

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு 

சென்னை; மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. இவற்றில் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் என, 23,500 பேர் பணிபுரிகின்றனர்.அனைவருக்கும் இந்தாண்டு ஏப்ரல் முதல் தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என, துறையின் அமைச்சர் ஏப்ரலில் அறிவித்தார். மொத்தம், 2,000 ரூபாயில், 1,000 ரூபாயை அனைவருக்கும் ஊதிய உயர்வாகவும், 1,000 ரூபாயை ஊழியர் செயல்பாட்டை பொறுத்து ஊக்கத் தொகையாகவும் வழங்க, அரசு முடிவு செய்தது.இதற்கு, ஊழியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், 2024 - 25ல் மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருந்த விலையை விட கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் விற்ற 197 மேற்பார்வையாளர், 234 விற்பனையாளர், 20 உதவி விற்பனையாளர் என மொத்தம், 451 ஊழியர்களுக்கு, 1,000 ரூபாயும், மற்ற அனைவருக்கும், 2,000 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கி டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.இந்த ஊதிய உயர்வு, ஏப்., முதல் இம்மாதம் வரை கணக்கிடப்பட்டு, சில தினங்களில் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 15, 2025 10:55

தினம்தோறும் குடி ஆர்வலர்களை ஊக்குவித்து ...மது வாங்க வைத்து தமிழ்நாட்டிற்கு வருவாயை அதிக படுத்தும் தியாகிகளுக்கு வெறும் 2000 ரூபாய் மட்டுமா ?


Balaa
ஜூலை 15, 2025 08:07

எவ்வளவு குடுத்தால் என்ன, திமிரா பத்து ரூபாய் வாங்கறத நிறுத்தாதுங்க. உருப்படாத ஜென்மங்கள்.


முக்கிய வீடியோ