உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழியர்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்; தி.மு.க.,வுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

ஊழியர்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்; தி.மு.க.,வுக்கு டாஸ்மாக் சம்மேளனம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின், மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் திருச்செல்வன் கூறியதாவது:பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை, 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை; ஆளும் தி.மு.க.,வும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அரசுக்கு, எங்கள் கோரிக்கைகளை பலமுறை கொண்டு சென்றும், நிறைவேற்ற மறுக்கிறது. முதல்வர் சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என, மக்களிடையே வாக்குறுதி அளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்றதும், 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம். ஆனால், அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ்மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, அரசு செய்யும் வியாபாரத்தை தனியாருக்கு மடை மாற்றும் போக்கு நடைபெறுகிறது.கணினி ரசீது முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதிலும், பல பிரச்னைகளை ஊழியர்கள் சந்திப்பதால், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது. டாஸ்மாக் கடை ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் போக்கு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவர்கள் மீது தி.மு.க., தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Palanisamy Narayanasamy
நவ 17, 2024 19:43

அய்யா, ஒரே ஒரு கையெழுத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு, மொத்தமாக வீட்டுக்கு அனுப்புங்கள்... கள்ளு கடையை திறந்து, தென்னை விவசாயிகளை வாழவையுங்கள்....


Shakthitoolroom@gmail.com
நவ 17, 2024 14:10

கட்ட பஞ்சாயத்து, ரவுடித்தனம், ஊழியர்களிடம் மாமூல் புடுங்குவது போன்ற செயல்கள் எல்லாமே கழக களவாணி களின் அடிப்படை உரிமை. தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.


Ramesh Sargam
நவ 17, 2024 12:44

Like gun lobbyists in the US, here in Tamil Nadu liquor lobbyists…


sridhar
நவ 17, 2024 10:49

The most productive department of the state financially. They need to be treated with respect and care.


ramesh
நவ 17, 2024 10:31

டாஸ்மாக்கை இழுத்து மூடுங்கப்பா நாட்டில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் உங்களை வாழ்த்தும்


S.kausalya
நவ 17, 2024 10:12

இவனுங்களுக்கு காசு கொடுத்து தானே வேலைக்கு வந்தீங்க.இப்ப ஏன் இந்த கூச்சல்


Ms Mahadevan Mahadevan
நவ 17, 2024 09:43

கட்சி காரர்கள் சம்பாதிக்கத்தான் மதுவிலக்கை கைவிட்டார்கள். கருணாநிதியால் தமிழ் நாடு மதுவுக்கு முழு அடிமையானது. வாழ்க திமுக


வைகுண்டேஸ்வரன்
நவ 17, 2024 11:37

1971 ல் கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்து, அரசாங்கமே மது விற்கலாம் என்று மசோதா நிறைவேற்றி, டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கி, நாடு முழுவதும் கடைகள் திறந்தவர் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர்.


Ms Mahadevan Mahadevan
நவ 17, 2024 09:40

வருங்காலங்களில் அரசு பணி என்பது குறைவாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். சும்மா நாற்காலியை தேய்த்து கொண்டு வரும் வேலைகளை குறைத்து விடுவார்கள். அப்பத்தான் லஞ்சம் குறையும். சங்கங்கள் அமைத்து மிரட்ட முடியாத அளவுக்கு நிலைமை AI ஐ என்பது வந்து விடும்


Bala
நவ 17, 2024 09:31

ஓரு தொடக்கமாக டாஸ்மாக் எலைட் கடைகளில் சிசிடிவி பொருத்தி இவர்கள் உரையாடல்களையும் தெளிவாக பதிவு செய்யும் படி அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் வண்டவாளம் வெளிவரும்.


Bala
நவ 17, 2024 09:27

As Tasmac is the monopoly in retail vending of IMFL, these thugs employed there that they are Lord Labukkudas & treat customers with did-respect & arrogance. These rogues should remember that they maintain their family not just by the salary, but mainly with the shameless authoritative begging that they indulge in by ging more than the MRP. First book these thugs & dismiss a few from service.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை