சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
முசாபர்நகர்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 2017ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஜிதேந்திர குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முசாபர்நகர் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், ஜிதேந்திர குமாருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி மஞ்சுளா பலோசியா உத்தரவிட்டார்.அரசு வழக்கறிஞர் பிரதீப் பாலயன் ஆஜரானார்.