உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி

திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : '' திமுகவுக்கு மாற்றாக தேஜ கூட்டணியை தான் மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள், '' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தொடர்ந்து முயற்சி

மதுரையில் அவர் அளித்த பேட்டி: தினகரனும், பன்னீர்செல்வமும் தேஜ கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இரண்டு பேரிடமும் பேச வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் இதனையே சொல்லி வருகிறேன். அவர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். அவர்களுக்கு என கொஞ்சம் காலம் வேண்டும். சற்று பொறுத்து இருப்போம். எங்கள் முயற்சியை தொடர்ந்து செய்வோம்.தினகரன் உடன் கூட்டணி குறித்த பிரச்னைக்கு நயினார் நாகேந்திரன் ஏற்கனவே கருத்து சொல்லிவிட்டார். அதனை மீண்டும் மீண்டும் பேசுவது அழகல்ல. பிரச்னை முடிந்துவிட்டது. தினகரன் நல்ல தலைவர். 2024 ல் கூட்டணி வைத்தார். நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர். கருத்து வேறுபாடுக்கு இடம் இருக்காது. இன்னும் எட்டு மாதம் உள்ளது. ஏன் அவசரப்பட வேண்டும்.

களத்தில்

அரசியலை 24 மணி நேரமும் செய்ய வேண்டும். அரசியல் என்பது முழு நேர வேலை. முதல்வர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் 24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும்.மக்களுக்கு மாற்றம் தரும் கட்சி என தவெக கூறுமானால், அதே வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மக்களை பார்ப்பேன். மற்ற நாட்களில் மக்களை பார்க்க மாட்டேன் என புதிய கட்சி, பொறுப்பு மிக்க தலைவர் சொன்னால், மக்கள் சோதனை செய்வார்கள். திமுகவுக்கு நாங்கள் எதிரி என தவெக பறைசாற்றினால், அந்த வேகத்தை களத்தில் காட்டும் போது தான் மக்கள் நம்புவார்கள்.

தினமும் கூட்டம்

திமுகவுக்கு மாற்று தேஜ கூட்டணி தான் என மக்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள். தேஜ தலைவர்கள் களத்தில் இருக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் எப்போதும் சந்திக்கலாம். அதிமுக பொதுச்செயலர் பிரசாரத்தில் உள்ளார். பாஜ தலைவர்கள் தினமும் கூட்டம் நடத்துகிறார்கள்.நாங்கள் தான் மாற்று. விடிவெள்ளி என தவெக சொன்னால், மாதத்தில் 30 நாட்களும், 24மணி நேரமும் களத்தில் இருந்தால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லை என்றால், அரசியலை எவ்வளவு தீவிரமாக எடுத்து கொள்வார்கள் என்ற கேள்வியை மக்கள் வைப்பார்கள்.கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பது வழக்கமாக நடப்பது தான் . பாஜவுக்கு மறுத்தனர். நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினோம். எதிர்க்கட்சிகளுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.போலீசை பொறுத்தவரை ஒரு சில இடத்தில் நியாயமான காரணம் உள்ளது. சில இடத்தில் நியாயம் இல்லாத காரணம் உள்ளது. குறை சொல்வதை விட்டுவிட்டு நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும். யார் வேண்டாம் என சொன்னது. ஒரு அதிகாரி அனுமதி மறுத்தார் என்பதற்காக, தவெகவை பார்த்து திமுக எப்போது பயப்படும் என்றால்,24 மணி நேரமும் களத்தில் இருக்கும் போது தான் வரும்.தொடர்ந்து போலீசார் மீது குற்றச்சாட்டுவைப்பது , காரணம் சொல்வதை அரசியல்வாதியாக, குடிமகனாக ரசிக்கவில்லை.ஒரு இடத்தில அனுமதி கொடுக்கவில்லை என்றால், இன்னொரு இடத்தில் அனுமதி வாங்க வேண்டும். இங்கு வரும் மக்கள், அங்கு வர மாட்டார்களா

அரசு எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு அலை நவம்பர், டிசம்பரில் தெரிய வர வேண்டும். அது தான் முக்கியம். முன்னதாகவே உச்சம் தொடக்கூடாது. ஜனவரி பிப்ரவரியில் உச்சம் தொட்டால் தான் தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும். நவம்பர், டிசம்பரில் எதிர்ப்பு அலையை பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மாநாட்டில் மக்கள் பங்கேற்க வேண்டும். அது தான் அரசியலுக்கு அறிகுறி. அதற்கு முன்னர் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை நோக்கிதான் அனைவரும் போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Durai Kuppusami
செப் 10, 2025 08:11

இவர் பிரஸ் மீட் என்ற பேர்ல தேவையில்லாமல் பேசுகிறார் வேண்டும் என்று பேசுகிறாரா தெரியாமல் பேசுகிறாரா உள் குத்து வேலை செய்கிறார் என்பது மட்டுமே தெரிகிறது மொத்தத்தில் பீஜெபிக்கும் வேட்டு வைக்கிறார் இவர் இந்த கட்சியில் இருப்பதை விட உங்கள உசுப்பி விட்ட கட்சியில் ஐக்கியமாகி விடலாம் எடப்பாடியும் வேற ரூட்ட பார்ப்பாரு.....


Tamilan
செப் 09, 2025 23:09

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்


pakalavan
செப் 09, 2025 22:56

அதிமுகா - பஜக ரென்டுபேரும் சேர்ந்து ஏதோ பெரிய கலவரம் பன்னபோறானுங்க, தமிழக மக்கள் இவனுங்களை எப்பவும் நம்ப மாட்டாங்க, அப்படி இப்படின்னு கலவரம் பன்னுனானுங்கன்னா அதுக்கு முழு பொருப்பு பாஐகா தான்


SANKAR
செப் 09, 2025 22:39

Basically a national party coming to power will be a good change.but both cong and BJP could not do it alone.koottani means second fiddle only.annamalai is a decent character but made a mistake of opposing corruption of both Dravidian parties .mgr and j are equal to demigods for edaps.so he became upset and demanded sacrifice of annamalai as precondition for koottani.bjp agreed and annamalai feels very bad and upset which is understandable.moral of the story is : one should not talk about corruption of s koottani partner.prime examples are Maharashtra and Bihar.This is Kaliyugam and such things happen


Rajah
செப் 09, 2025 22:12

ஜோசப் விஜய் என்று சொல்பவர்கள் அப்பாவு, உதயநிதி போன்ற கிறிஸ்தவர்களை ஆதரிக்கின்றார்கள்.


Rajah
செப் 09, 2025 21:47

திமுகவுக்கு மாற்று தங்கள் தலைமையிலான பாஜகதான்.


Gnana Subramani
செப் 09, 2025 21:33

அண்ணாமலையும் கூட தலைவர் பதவி பறிபோன சோகத்தில் நான் விவசாயம் பண்ணப் போகிறேன். ஆடு வளர்க்கப் போகிறேன் என்று ஒதுங்கி விட்டார்


ராஜா
செப் 09, 2025 21:24

தவெகதலைவர் சொன்ன சிங்கிள் சிங்கம் நிச்சயம் தன்னைப்பற்றி சொல்லவில்லை


திகழ்ஓவியன்
செப் 09, 2025 21:13

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தனித்து நின்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதால் தான் கூட்டணி அமைத்தோம் என்றும், திமுக வலிமையாக உள்ளது.. 40 சதவீதம் வாக்கு உள்ளது என்றும் பேசினார். என்ன சிரிப்பு போலீஸ் அடிக்கடி மாற்றம் பாவம் உன் ஏமாற்றம் புரிகிறது இல்ல, வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கேட்கிறீர்கள். எந்த அரசியல் கட்சியாவது தேர்தலில் தோல்வி அடைவோம் எனக் கூறுவார்களா? எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகள் என நிறுத்திவிட்டார். 234 என சொல்லியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் இருக்கிறது." என்பதிற்காக இப்படி அவரை நோகடிக்க சொன்ன கருத்தோ


Modisha
செப் 09, 2025 22:56

200 ஓவாவுக்கு எதற்கு இத்தனை வரிகள் உங்களுக்கு ஏதாவது பதவி உயர்வு கிடைத்துவிட்டதா


Tamilan
செப் 09, 2025 21:12

ஜோதிடரை பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம்


புதிய வீடியோ