இன்று 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்
சென்னை:'தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், 3 டிகிரி செல்சியஸ் வரை, வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.அதே நேரம், பிப்., 18 வரை பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.