உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றும், நாளையும் 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்

இன்றும், நாளையும் 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்

சென்னை:'தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகலில் அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியசாக ஆக பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12 நகரங்களில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 12 இடங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை