உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு

விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாகராஜ் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுட்டுப்பிடிக்கப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு பணியில் காவலாளிகளாக அப்பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் பணிபுரிந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uva8pfj2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகல் நேர காவலாளி மாடசாமி, 65, நேற்று காலை, 6:45 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவிலுக்குள் இருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இன்று (நவ.,12) இரட்டை கொலையில் வடக்கு தேவதானத்தை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ்(25) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக குற்றவாளியை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, எஸ்.ஐ கோட்டியப்பசாமியை வெட்டி விட்டு குற்றவாளி தப்ப முயன்றார். உடன் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் குற்றவாளியை காலில் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த குற்றவாளியை மீட்ட போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Anantharaman Srinivasan
நவ 12, 2025 15:32

இந்து கோவில்களில் மட்டுமே கொள்ளை கொலை. சர்ச் மசூதிகளில் நடப்பதில்லையே. அதே பாதுகாப்பு முறைகளை இந்து கோவில்களில் பின்பற்றலாமே..


Ramesh Ramesh
நவ 12, 2025 15:25

என்கவுண்டர் பண்ண வேண்டும்


jayaraman
நவ 12, 2025 13:58

ரத்னா அவர்களே கேசை முடிப்பதர்காக பணம் அதிகாரம் இல்லாதவர்களை கேட்பதற்கு ஆள் இல்லாதவர்களை வழக்கில் சேர்ப்பது தான் அதிகம் நடக்கிறது. குற்றவாளி என நிரூபித்த பிறகு சுட வேண்டும்.


Raja k
நவ 12, 2025 13:23

மறைத்து வைத்திருந்த அருவாளால் வெட்ட முயன்றார், சுட்டு பிடித்தனர், தாக்கிவிட்டு தப்பியோடினர், சுட்டுபிடித்தனர், கழிவறையில் வழுக்கி விழுந்தார் மாவுகட்டு போடபட்டது, தப்பியோடினார் என்கவுண்டர் செய்தோம், எத்தனை காலத்துக்குதான், இப்படி முழம்முழமா மக்கள்காதில் பூவைசுத்தி, மீடியாவுக்கு செய்தி கொடுப்பீங்க, வேற எதாவது புதுசா யோசிச்சு புனைகதை சொல்லாலாமே,


cpv s
நவ 12, 2025 12:44

ruling government and this theft are same , both are looting money illegally from tn


s Kumar
நவ 12, 2025 11:30

How long police can tell same fake story for all encounters and leg fracture cases?


அப்பாவி
நவ 12, 2025 11:28

வழக்கு பதிஞ்சு சரித்திர பதிவேட்டில் சேர்த்து வெளியே உட்டுருவாங்க. சுபம். அடுத்த முறை பிடிபட்டால் இந்த தகவல் வெளியே வரும்.


visu
நவ 12, 2025 10:58

இந்த மாதிரி குற்றவாளிகளை அழைத்து செல்லும்போது விலங்கு போட மாட்டார்களா? இப்படி சுட்டு பிடிப்பது என்கவுண்டேர் செய்வது தொடர்கதை ஆகிவிட்டது உண்மை வெளிவருவதில்லை அதுவும் இத்தனை காவலர் சுற்றி இருக்கும்பொது சுடுவார்கள் என்று தெரியாத நீதிமன்றம் ஏன் கைதிகள் மட்டும் வழுக்கு விழுந்து எலும்பு முறிவு ஏற்படுகிறது கேள்வி கேட்டு அதன் பின் மறந்து விட்டார்கள்


Rathna
நவ 12, 2025 11:30

ஏன் திருடனை மொள்ளமாரிகளை சுட்டு பிடிப்பதை பற்றி கவலைப்படுகிறாய்?


Ganapathy Subramanian
நவ 12, 2025 13:35

ரத்னா - அவர்கள்தான் நிஜ திருடர்களா என்று தெரியாததால்தான் எல்லோரும் கவலைப்படுகின்றனர்.


Svs Yaadum oore
நவ 12, 2025 10:55

விருதுநகரில் கோவிலுக்குள் புகுந்து கொலை செய்யும் அளவுக்கு படு கேவலமான ஆட்சி நடக்குது .....ஊரெங்கும் கஞ்சா போதை கள்ள சாராயம் மெத்து டாஸ்மாக் என்று நாட்டை குட்டி சுவராக மாற்றிய விடியல் திராவிட மாடல் ....இதை விட படு கேவலமான மாடல் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது ...


Ramesh Sargam
நவ 12, 2025 10:44

சுட்டு பிடித்தார்களாம். தமிழக போலீசுக்கு இன்னும் பயிற்சி பத்தாது. உத்தரப்பிரதேசத்துக்கு சென்று ஓரிரு வருடம் பயிற்சி பெறவேண்டும், சுட்டுத்தள்ளுவதற்கு.


திகழ்ஓவியன்
நவ 12, 2025 12:19

எப்படி போலீஸ் ஸ்டேஷன் இல் 8 பேர் சுட்டு கொள்ள பட்டார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை