உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு ஜுரம்; நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியால் முதல்வருக்கு ஜுரம்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயம் வந்து விட்டது,' என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; சுங்கச்சாவடிகளில் மட்டுமல்ல டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாயை போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது. முதல்வர் தான் அரசு போக்குவரத்து கழகத்திற்கு மானியத்தை கொடுத்து, பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் முதல்வரின் வேலை. இதனால், போக்குவரத்து கழகங்கள் பாதிக்கப்படுகிறது. தமிழகம் இங்க தானே இருக்கிறது. எதுக்காக ஓரணியில் தமிழகம் பயணம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது. தோல்வி பயம் வந்து விட்டது. நேற்று அம்பாசமுத்திரம் பகுதியில் போதைப்பொருள் பயன்படுத்தி நபர் 17 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். வள்ளியூரில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். தினசரி இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. இதனை எல்லாம் மறைப்பதற்காக, ஓர் அணியில் தமிழகம் என்று சும்மா ஒரு பேனரை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வருகிறார். இதனால், தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடையாது. நிச்சயமாக 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இபி.எஸ்., பேச வேண்டிய கருத்தை தான் பேசியுள்ளார். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வைகோ எப்போதுமே அதிகமாக கோபப்படுவார். பத்திரிகையாளர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. பத்திரிகையாளர்கள் தன் கண்டனக் குரலை எழுப்ப வேண்டும். மதுரையில் நடந்த முருகன் மாநாட்டின் 6வது நாளில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். தி.மு.க., மாநாடு நடத்தினால் டாஸ்மாக்கில் தான் கூட்டம் வரும். கூட்டம் நடந்து முடிந்தவுடன் இருக்கைகளை அடுக்கி வைத்து விட்டு சென்றனர். முருகன் மாநாட்டிற்கு உலகமே பாராட்டி வருகிறது. தனியொரு மனிதன் பேசுவதற்கு நாம் பொறுப்பேற்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 10, 2025 19:57

எடப்பாடியையும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஒரு மேடையில் சேர்த்து ஏற்றிவிடுங்கள் பாப்போம் அப்புறம் பயத்தை பற்றி நினைத்து பார்க்கலாம் ... மடியிலேயே பூனை குட்டியை ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு சகுனம் பார்க்க போகும் உருப்படிகளை மக்கள் எப்படி பார்ப்பார்கள் ???


vivek
ஜூலை 10, 2025 21:43

இருநூறு சிகண்டி கொத்தடிமை


P. SRINIVASAN
ஜூலை 10, 2025 15:52

நீங்களே ஒரு டம்மி கூட்டணி


vivek
ஜூலை 10, 2025 17:28

திமுக தோல்வி கூட்டணி.... சீனு


Barakat Ali
ஜூலை 10, 2025 15:16

விடியலின் தூக்கத்தை ரொம்பத்தான் கெடுக்குறீங்க ........ அதுவும் அவரோட மந்திரிமார்களை விட .....


GMM
ஜூலை 10, 2025 14:41

அண்ணா திமுக, பிஜேபி கூட்டணி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்த செய்தி, முன்பு 3 சதவீத வாக்கு வித்தியாசம். சீமான், விஜய் தனித்து ஓட்டை பிரித்து , சிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆட்சியில் பங்கு குடைச்சல்... திமுக தன் வெற்றியை அறிய முடியாத நிலை. அறிவாலயம் வைத்தியம் பார்க்க முடியாத புது ஜுரம்?


Oviya Vijay
ஜூலை 10, 2025 14:33

நீ வேற ஏன் நைனா காமெடி பண்ணிக்கினு.. ஒரே பேஜாரா கீதுபா உன்னோட.. என் மண் என் மக்கள் அப்படீனு ஆட்டுக்குட்டி ஊர்வலம் போனப்போ இதே கேள்விய.. மண்ணும் மக்களும் இங்க தானேயா இருக்காக... அல்லாருக்கும் சொந்தம்... நீர் மட்டும் ஏன் சொந்தம் கொண்டாடிக்கினு வர்ற அப்படின்னு கேட்டிருக்கலாம்ல... பேசத் தெரியாம வாயில வந்ததெல்லாம் ஏதாவது பொலம்பிகினு... அட போ நைனா... உன்னோட பேஜாரா கீது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை