உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்; பட்டியலிட்டு சொல்கிறார் அண்ணாமலை

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு பாடம் கற்பித்த நீதிமன்றம்; பட்டியலிட்டு சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்துள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், உச்சநீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oi3c3nxe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=01) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?3) கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதி விஜய் குமார், நீதிபதி ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.ஒரே நாளில், டில்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

திகழ்ஓவியன்
அக் 10, 2025 19:22

சரி இவருக்கு என்ன அச்சுறுத்தல் இருக்கு இவருக்கு Z பாதுகாப்பு மக்கள் வரி பணம் வீண் ஆகுது வேண்டாம் என்று சொல்லி வரிப்பணம் வீண் ஆவதை தடுக்கலாம்.


தமிழ்வேள்
அக் 10, 2025 20:02

திருட்டு திராவிட கும்பலின் பிறவி பழக்கம் தெரிந்தவன் இந்த கேள்வியை கேட்க மாட்டான்.. அண்ணாமலை நகர் உதயகுமார் முதல், நேற்று பரலோகம் போன நாகேந்திரன் வரையான ஆன்மாக்களுக்கு பேசும் தன்மை இருந்தால் அவை சொல்லும் திராவிடத்தின் உயிர் எடுக்கும் தொழில்நுட்பம் பற்றி..


vivek
அக் 10, 2025 20:06

திகழ் ...எவளோ கிலோ பர்னால் வேணும்....அனுப்பிவைக்கிறோம்


C.SRIRAM
அக் 10, 2025 20:06

அண்ணாமலை சொன்ன கருத்துக்கும் பொய் பெயரில் உள்ளக்கருத்துக்கும் என்ன தொடர்பு ?. உண்மையான பெயரிலே கருத்து உளறலாரை போட திராணியில்லை ?


திகழ்ஓவியன்
அக் 10, 2025 19:11

எவ்வளவு நாள் இதே ஸ்கிரிப்ட் ஓடும் .


மலை
அக் 10, 2025 21:13

திமுக முடியும் போது...


பாலாஜி
அக் 10, 2025 18:43

தமிழ்நாடு அரசு விரிவான தகவல்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.


Modisha
அக் 10, 2025 18:40

போங்க சார் , இதுக்கு மேலும் அசிங்கங்களை எல்லாம் திமுக பாத்திருக்கு . அதுக்கு பயந்தா திருட முடியுமா


எஸ் எஸ்
அக் 10, 2025 18:39

டிவி சேனல்கள் இன்று இரவு இவை பற்றி விவாதம் நடத்துமா? திரும்ப திரும்ப எடப்பாடி - அண்ணாமலை - ராமதாஸ் பற்றியே பேசுவார்கள்..


சி.முருகன்.
அக் 10, 2025 19:08

அறிவிலிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுவார்கள்


NellaiBaskar
அக் 10, 2025 18:36

ஸ்கிரிப்ட் இப்பதான் ரெடியாகிட்டு இருக்கும் . நாளைக்கு ஒன்று ஒன்றாக கூறுவார்கள்.


vimal vimal
அக் 10, 2025 18:07

மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.SC asked questions against HC. How come you say that questions were rraised to TN Govt.idiotic way of interpretation Malai


Murugesan
அக் 10, 2025 18:24

200 ஊபி, திமுக நீதிபதியை வைத்து விளையாடிய அரசு வக்கீல் எதிர் தரப்பு ஆளுங்க இல்லாத நிலையில அரசு வக்கீல் ஏன் பொய் உரைத்து தீர்ப்பை பெற்றான்கள் ,அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற ஊபி


visu
அக் 10, 2025 18:32

கேள்வி என்னமோ உயர்நீதிமன்றத்துக்குத்தான் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு மதுரையில் விசாரணையில் உள்ளது என்று தெரியப்படுத்தி இருக்க வேண்டும் அதனால் அரசுக்கும் இந்த கண்டனம் உண்டு


Modisha
அக் 10, 2025 18:43

What about the other indictments against the dmk govt. Learn to behave in public fora. Your harsh words can be redirected at you.


V Venkatachalam
அக் 10, 2025 18:44

கருத்து கந்தசாமி க்கு கண் சரியா தெரியலை. சூப்பர் கோர்ட் ஹை கோர்ட் எப்புடி விசாரிச்சுதுன்னு கேட்டிருக்கு. அது சரி தானே.. அதைதான் அண்ணாமலை சொல்லுது. கருத்து கந்தசாமி தாட் பூட் டுன்னு என்னாத்துக்கு குதிக்குது? வாடகை வாயன்களை திருட்டு தீயமுக காரனுங்க விலைக்கே வாங்கிட்டானுங்களா? நாடு வெளங்கிடும்..


G Mahalingam
அக் 10, 2025 18:03

திமுக இதற்கு 4 விஷயங்களுக்கு 4 தடவை தூக்கு மாட்டி கொண்டு இருக்க வேண்டும்.


Indian
அக் 10, 2025 17:55

நீங்க சொன்ன அதே நீதியும் , தர்மமும் 2026 சட்டசபை தேர்தலில் தி மு க வை வற்றி பெற வைக்கும் .


vivek
அக் 10, 2025 18:36

என்ன கைலாசம்.....பர்னால் வேணுமா.....எப்படி பம்மிட்டு கருத்து போடுரே


Indian
அக் 10, 2025 19:30

விவேக் , உங்க தலைவர்களிடம் சொல்லி கொஞ்சம் மத்திய அரசின் development projects , தமிழ் நாட்டுக்கும் கிடைக்க உதவி பண்ணுங்க


SJRR
அக் 10, 2025 17:55

பொறுத்திருந்தால் அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை