உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது

தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட, 49,429 கோரிக்கை மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 'விடுபட்டோர் எல்லாருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, துணை முதல்வர் உதயநிதி அறிவித்த, இரு தினங்களிலேயே, தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது. இப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'தகுதியற்றவர்கள்' என்ற போர்வையில், 40 சதவீத மனுக்களை நிராகரித்து, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத்தொகையா? ஏற்கனவே, ஆட்சி பொறுப்பேற்று, 28 மாதங்களுக்கு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது போதாதென்று, தங்கள் கணக்குபடி, 'தகுதியான' மகளிர் ஒவ்வொருவருக்கும், 28,000 ரூபாயை தராமல் ஏமாற்றியது போதாதென்று, பெண்களை வஞ்சிப்பது ஏன்? - நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
நவ 06, 2025 10:41

1. திமுக வின் சாயம் அவர்கள் ஆட்சிக்கு வந்தப் பின் கொஞ்சம் கொஞ்சமாக வெலுத்தது. ஆனால் உங்கள் சாயம் நீங்கள் ஆட்சியமைக்காத காலத்திலே என்றோ வெளுத்துவிட்டது. உங்கள் பாஜக வின் முரண்பட்ட மொழிக் கொள்கை வேறு தமிழர்களின் மொழிக் கொள்கை வேறு தொன்மைக் காலமாக தமிழர்கள் போற்றிவந்த சைவநெறிக் கொள்கைகள் கோட்ப்பாடுகள் பற்றி கொஞ்சமாவது உங்களால் சொல்ல முடியுமா, பேசமுடியுமா? அதை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியுமா? 2. நாளையோ நாளை மறுநாளோ தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க விரும்பினால் முதலில் தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்பு வேண்டுமானால் இங்கு அரசியல் பேசுங்கள். இங்கு உளறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 06, 2025 15:16

திமுகவின் சைவ நெறிக்கொள்கைகளைப் பற்றி சொல்லுங்களேன். அல்லது உங்கள் தளபதியை அதைப்பற்றி பேச சொல்லுங்களேன். ஏற்கனவே பொன்முடியார் பேசிவிட்டார்.


Mario
நவ 06, 2025 09:06

பிஜேபி அரசின் தேர்தல் சாயம் வெளுத்துவிட்டது