வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சவால்..... திரு உதயநிதி மற்றும் திரு ஸ்டாலின் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை எந்த பேப்பரை பார்க்காமல் யாருடைய உதவியும் இல்லாமல் வார்த்தை தடுமாற்றம் இன்றி ஒரே மூச்சில் பாடிவிட்டால் அவர்களுக்கு வாழ்நாள் அடிமை என்று நான் எழுதி தருகிறேன்..... ரெடியா.....
அப்படியானால் பாடல் வரிகளையே மாற்றி வைத்தது சரியா
திட்டமிட்டு இவ்வாறு செய்து விட்டு நடிப்பது என்பது தவறான போக்கு இதே போல் பதிலுக்கு பதில் என்று பிரச்சினை உருவானால் அப்பொழுது ஏற்படும் பாதிப்புகள் நேற்று செய்த தவறை நினைக்க வைக்கும் இந்த போக்கு இந்தியா க்கு நல்லதா ?
அதெப்படி திராவிடம் என்ற வார்த்தை விடுபடும் ....?? வேணும் என்று செய்தது போல் உள்ளது .
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றும் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்னவரை தங்கள் வழிகாட்டி என்று கொண்டாடுபவர்கள் தமிழை போற்றுபவர்களா.
இந்த கட்சி இன்னும் முதிர்ச்சியை அடையவில்லை. உலக நாடுகளை பார்த்து கொஞ்சம் கற்று கொள்ளலாம்.
ஒண்ணு பிரசார் பாரதி தத்திகளை தூக்கியடியுங்க. இல்லே கெவுனரை போகச் சொல்லுங்க. அப்போது தான் அடுத்ததா வர்றவங்களுக்கு தமிழ் பத்தின மரியாதை இருக்கும்.
தமிழ்த்தாய் பற்றி ஈவேரா தெரிவித்த கருத்தை இங்கு எழுத முடியாது. ஆனால் செந்தமிழ் நாடெனும் போதினிலே வெங்காயம் வந்தது காதுக்குள்ளே என்று கிண்டலடித்தது ?. மொழியை வைத்து அரசியலில் காசு பார்க்கிறது கட்டுமரம் குடும்பம்.
இது ஒன்னும் தலைபோகிற விஷயமே கிடையாது. பல சந்தர்ப்பங்களில் இதே திமுக கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகிகள் தமிழ் தாய் வாழ்த்தினை பாடுகின்ற கொடுமையை என்னென்பது. இப்போது இதே திராவிடர்கள் குறிப்பாக மேயர் பிரியா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை பாடிகாட்டட்டும் ஒழுங்காக பிழையே இல்லாமல். அதன் பிறகு நீங்கள் மன்னிப்பு கோருவது நியாயமே. இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்பது சரியல்ல.
நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார்.இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, சில வரிகளை நீக்கிவிட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. 2021-ஆம் ஆண்டு திசம்பர் 17-தேதி அன்று மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாகத் தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது. ஒரிஜினல் தமிழ் தாய் வாழ்த்து: நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே ========================== முழுப்பாடலை சிதைத்து தமிழக அரசு வெளியிட்ட தமிழ் தாய் வாழ்த்து: நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே
ஆரியப் போல்
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் ஆயுதபூஜை விழா
12-Oct-2024