உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி

புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்,'' என, மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். அவர் கூறியதாவது : நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் காசி தமிழ் சங்கமத்தை நடத்தி வருகிறது. காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. தமிழ் மொழி மிகப்பழமையானது. நம் கலாசாரத்தின் தொன்மையான மொழி. வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலிருந்து நிறைய ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்று கொடுத்து இருக்கிறார்கள். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம். இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை சமூகம் ஏற்று கொண்டுள்ளது. தமிழக மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Svs Yaadum oore
டிச 30, 2025 16:57

புதிய கல்வி கொள்கையில் உபி பீகார் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்று கேள்வி?? சுதந்திரத்திற்கு பிறகு நாற்பது ஆண்டுகள் இந்த மாநிலங்களை ஆண்டது இத்தாலி உத்தரபிரதேசம் ஹிந்திக்காரன் காங்கிரஸ் கட்சி....காங்கிரஸ் கட்சி விடியல் கூட்டணி கட்சி .....கேரளாவில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் ....கேரளாவில் மூன்று மொழி ...எதற்கு மூன்று மொழி இந்த கேள்வியை கேளு ...


Svs Yaadum oore
டிச 30, 2025 16:53

why you are making mandatory to learn languages to pass board exam என்று படிக்காத விடியல் திராவிட மதம் மாற்றிகள் கேள்வி கேட்கிறார்கள் ....CBSE பாட திட்டத்தில் மூன்றாவது மொழி ரெண்டு வருடம்தான் ...அதில் பெயில் அல்லது தேர்ச்சி கிடையாது என்று சொல்வதும் கிடையாது ...வெறும் அடிப்படை மட்டும் கற்று கொடுப்பார்கள் ...அதற்கும் மேல் புதிய பாட திட்டத்தின்படி மூன்றாவது மொழி ஹிந்தி என்று கிடையாது ...தேர்ந்தெடுத்த எந்த மொழி வேண்டும் என்றாலும் படிக்கலாம் ....ஆனால் இதெல்லாம் மறைத்து விடியல் திராவிடனுங்க புரளி கிளப்புவார்கள் ...


malar mannan
டிச 30, 2025 16:48

புதிய கல்விக்கொள்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றால் ,என்ன காரணத்திற்காக கல்வி நிதியை தர மறுக்கிறீர்கள் பிதற்றல் பேச்சு.


kannan
டிச 30, 2025 14:42

புதிய கல்விக் கொள்கையை அதிமுகவும் ஏற்கவில்லை, அதனிடம் ஏன் கூட்டணி வைத்தார்கள்? புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்போர் மட்டும் பாஜகவிற்க்கு ஓட்டுப்போட்டால் போதும் என்று சொல்லும் தில் உண்டா?


vivek
டிச 30, 2025 15:28

வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருப்பேன் என்று சொல்ல உனக்கு தில் உண்டு


Nathansamwi
டிச 30, 2025 15:49

விவேக் என்ன முக்கு முக்குன்னாலும் பாஜக 10 சீட்டு தேர்தலில் வாங்க போறது இல்லை ....


Svs Yaadum oore
டிச 30, 2025 14:14

இந்த விடியல் திராவிடனுங்க மூன்று மொழி மூன்று மொழி என்று கூப்பாடு போடுவது மொத்தமும் விடியல் மதம் மற்றும் கும்பல் செய்யும் சதி வேலை .....வடக்கன் ஹிந்தி சமஸ்க்ரிதம் ஆரியன் என்று கூவி எப்போதும் வடக்கன் தெக்கன் என்று பிரிவினை பேசி சதி வேலை செய்வது .... இவனுங்க சொல்லும் ஹிந்தி திணிப்பு என்பது இவனுங்க கூட்டணி கட்சி காங்கிரஸ் காலத்தில்தான் ....அப்ப எதுக்கு விடியல் மத சார்பின்மையாக அதே காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி ??......காங்கிரஸ் கட்சியை கூட்டணியை விட்டு விடியல் வெளியேற்றட்டும் ...


SUBBU,MADURAI
டிச 30, 2025 13:55

குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது அவர்களின் பதினான்கு வயதிற்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும். எனவே அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும். குழந்தைகளால் அவர்களின் 11 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழியைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். எல்லா மொழிகளும் தனக்கான ஒரு தனித்தன்மை கொண்டது என்பதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே உணர்த்துதல் நல்லது. இதோ எனது தனிப்பட்ட அனுபவம். எனக்கு என் தாய் மொழியான தமிழ், அப்றம் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் மலையாளம், மற்றும் அரபி ஆகிய மொழிகளை பேசவும் தெரியும் இவையனைத்தும் நான் சிறுவயதில் பள்ளிகளில் படிக்கும்போதே கற்றுக் கொண்ட மொழிகள்.


sri
டிச 30, 2025 14:59

pls do not burden student with three language.. if they are interested lat them learn multiple language outside curriculum...why you want to " force " them to study three language..why you are making mandatory to learn languages to pass board exam...let decide how many language they want to learn


Loganathan Kuttuva
டிச 30, 2025 15:15

Knowing more languages will help to get job in travel and tourism industry.


vivek
டிச 30, 2025 15:30

Sri, please dont spoil life of you own children's....others will take care...


Svs Yaadum oore
டிச 30, 2025 13:50

கல்வி வளர்ச்சியில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட்,, பீகார் உடன் ஒப்பிட வேண்டுமாம் .....இந்த மாநிலங்களை 40 வருடங்கள் ஆண்டது விடியல் கூட்டணி மத சார்பின்மை காங்கிரஸ் கட்சி ....அந்த டெல்லிக்காரன் உத்தரபிரதேசம் இத்தாலிக்காரனிடம் இந்த கேள்வியை கேளு ??....


Svs Yaadum oore
டிச 30, 2025 13:43

கேரளா காரன் இந்தியை படித்து தொழில் வேலை வாய்ப்பில் தமிழகத்தை விட பின்தங்கி தான் உள்ளதாம் ..அப்ப கேரளாவில் கம்யூனிஸ்ட் சேட்டன்கள் எதுக்கு மூன்று மொழி ஆதரவு ??...இந்த கேள்வியை விடியல் திராவிடனுங்க கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட்களிடம் கேளு ??...விடியல் திராவிடனுங்க ஹிந்தி கற்று கொடுத்து கல்லா கட்ட நடத்தும் CBSE பள்ளிகளில் எதுக்கு மூன்று மொழிகள்?? ...


Svs Yaadum oore
டிச 30, 2025 13:36

ரெண்டு மொழி கொள்கையில் தமிழ் நாடு முன்னேறிய மாநிலமாக மாறி விட்டதாம் ....விடியல் ஆட்சியில் மாணவர்கள் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும் , ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள் .....ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.... 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி ....இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய துப்பில்லை ....


Tiruvarur Tamil Nadu Indian
டிச 30, 2025 12:39

ஐயா தமிழ் நாடு, கல்வி , மருத்துவம் மற்றும் தொழில் துறைகளில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்று . அப்படி பார்க்கும் போது மும்மொழி கொள்கையைவிட , இருமொழி கொள்கையினால் தமிழ்நாடு நன்றாக முன்னேறி உள்ளது. பிறகு எதற்கு அதிக மொழி தேவை. ? அறிவியலை , விஞ்ஞான அறிவை , AI போன்ற நடப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப , எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யகூடிய இருமொழி கொள்கையே மாணவர்களுக்கு நன்மை பயக்க கூடியதாக இருக்கும் . நான் இருமொழி கொள்கையுடைய பள்ளியில் தான் . இப்போது எனக்கு நான்கு மொழிகள் தெரியும் . வேலைக்கு சென்றபோது கற்றுக்கொண்டேன். பல மொழிகளை தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம். எனவே பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு , அதிக பளு கொடுக்காமல் இருமொழி கொள்கையின் மூலம் , அறிவார்ந்த மாணவர்சமூகத்தை ஏற்படுத்தினால் தமிழ் நாடு போல மற்ற மாநிலங்களும் முன்னேறும் . நன்றி ஐயா.


ஆரூர் ரங்
டிச 30, 2025 13:00

இதை மும்மொழி பள்ளிகளை நடத்தும் தலீவர் மகளிடம் கூறவும். அது மட்டுமல்ல. தமிழில் பேசினால் அபராதமாமே . எல்லா திராவிஷ அமைச்சர் பினாமிகளும் CBSC பள்ளிகளைத்தான் நடத்துகின்றனர்.


Svs Yaadum oore
டிச 30, 2025 13:38

தமிழ் நாட்டில் நாற்பது சதம் மனாவர்கள் படிப்பது CBSE பள்ளிகளில் ...அவர்கள் படிப்பது மூன்று மொழி கொள்கையிலா அல்லது ரெண்டு மொழி கொள்கையிலா ??..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை