உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோ பேக் மோடி பதிவிட்டவர் சிக்கினார்

கோ பேக் மோடி பதிவிட்டவர் சிக்கினார்

திருச்சி: சமூக வலைதளங்களில் 'கோ பேக் மோடி' என பதிவிட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடிக்கு வந்தார். அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, இரவு திருச்சி வந்து தங்கினார். நேற்று, அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த சோழ மன்னன் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் மோடி' என்று, சமூக வலைதளங்களில் திருச்சி உறையூர், சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 42, என்பவர் பதிவிட்டார். இதையடுத்து, உறையூர் போலீசார் அவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Narayanan
ஜூலை 28, 2025 09:35

அப்படியே இது வரை கடந்த பத்து ஆண்டுகளாக கோ பேக் மோடி சொன்னவர்கள் எல்லோரையும் பிடித்து உள்ளே பிடித்து போடுங்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 28, 2025 07:26

விரைவில் அவரை பாத்ரூமில் வழுக்கி விழ செய்யுங்கள் ..போலீசாரின் அன்பு கவனிப்பில் சிலபல எலும்புகள் முறைகேடாக்கப்பட்டு ...மாவுக்கட்டு போட்டு கோர்ட்டிற்கு அழைத்து செல்லுங்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை