உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூடு பிடிக்கிறது அரசியல் களம்; எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் உடன் சந்திப்பு

சூடு பிடிக்கிறது அரசியல் களம்; எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் உடன் சந்திப்பு

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை விஜயை அவரது வீட்டில் செங்கோட்டையன் சந்தித்தார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர். அவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.,க்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d66wcpep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார். இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இன்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் இன்று வழங்கினார்.அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயை, செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

யார் செங்கோட்டையன்?

* செங்கோட்டையன், 1977 முதல் 10 முறை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில் 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை தழுவியுள்ளார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.* முதல் தேர்தலான 1977 தேர்தலில் மட்டும் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர், அதன் பிறகு தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தான் போட்டியிட்டு வந்துள்ளார்.1991ல் ஜெயலலிதா முதல் முறை முதல்வர் ஆனபோது, செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறையில் அமைச்சர் பதவி வழங்கினார். * 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது, செங்கோட்டையனுக்கு வேளாண் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, ஜெயலலிதா இறந்து, இபிஎஸ் முதல்வர் ஆன பிறகே செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி திரும்பக் கிடைத்தது.செங்கோட்டையன் முடிவு பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்க வாசகர்களே!1.தவெகவுக்கு ஜாக்பாட்2.அதிமுகவுக்கு பின்னடைவு3.தட்டித் துாக்க தவறியது திமுக4.அவருக்கு ஒரே வழி அதுதான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

Gnana Subramani
நவ 26, 2025 22:07

இவருக்காவது ஒரு தொகுதி தருவாரா இல்லை 234 தொகுதியிலும் விஜய் மட்டும் தானா


GMM
நவ 26, 2025 21:31

செங்கோட்டையன் அரசியல் கோட்டையை விட்டு வெளியேறி கனவுலக கோட்டையில் புகுந்து விட்டார். அரசியல் கனவு பலிக்காது. விஜய் பெரிய கட்சியுடன் கூட்டணி இல்லை என்றால்,, டி . ராஜேந்தர், சரத் குமார், பாக்கிய ராஜ்.. போன்றோர் நிலை தான். பெரிய கட்சிகள் 2, 3 ம் இடம் தான் தரும். ஏற்று கட்சியை வளர்க்க வேண்டும். கோட்டை விட்ட செங்கோட்டையன்?


K9
நவ 26, 2025 21:12

Mr.Sengottainis senior leader. I am not sure, he is going to join TVK. If he accepts a cine Actor as leader for him, then better to accept as a character less guy and he lost his self respect. Very unfortunate. Then he can not be respectable guy.


ரவி
நவ 26, 2025 20:19

செங்கோட்டையன் இடம் மாறுவதன் சூத்திரதாரி தி.மு.க வாக இருக்கலாம். கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள அ.தி.மு.கவை பலவீனமாக்க வேண்டும். அதற்கு நேரடியாக தி.மு.கவில் சேர்ந்தால் எம்.எல்.ஏ சீட் , வெயிட்டான கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். வெளியில் பெரிதாக தெரியவில்லையே ஒழிய அ.தி.மு.கவில் இருந்து வந்தவர்களுக்குத்தான் இங்கு பதவி கிடைக்கிறது என தி.மு.கவில் ஏற்கெனவே புகைச்சல் ஆரம்பமாகி விட்டது. தவிர தி.மு.கவில் சேர்ந்து தி.மு.க விற்காக வாக்குகள் செங்கோட்டையன் கேட்டால் அவருக்கு ஆதரவு மன நிலை உள்ள அ.தி.மு.க காரர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . அதனால் தி.மு.க செங்கோட்டையனிடம் வேறு விதமாக டீலிங் பேசி இருக்கலாம். அவர்களுக்கு தேவை கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வாக்குகளைப் பிரித்து அ.தி.மு.கவை சென்ற முறை போல் ஜெயிக்க விடமால் செய்ய வேண்டும். செங்கோட்டையன் ஆதரவு அ.தி.மு.க வாக்குகள் பிரிந்து த.வெ.கவிற்கு சென்றால் தி.மு.க எளிதில் வென்று விடலாம்.அதனால் நேரடியாக தி.மு.கவில் இப்போதைக்கு சேர வேண்டாம் . தேர்தல் முடிந்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வேறு விதமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என உறுதியான வாக்குறுதிகள் அளிக்கப் பட்டிருக்கலாம். அ.தி.மு .க வில் இருந்து விலகியவர்கள் அல்லது நீக்கப் பட்டவர்கள் அனைவருமே இதுவரை தி.மு.கவில் சேர்ந்துள்ளனர். செங்கோட்டையன் மட்டும்தான் முதன் முதலாக த.வெ.க வில் சேர உள்ளார். நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம்.நாம் செல்லும் ஊருக்கான நேரடியாக செல்லும் பஸ் நிரம்பி விட்டதென்றால் வேறு ஊருக்கு சுற்றிப் போகும் பஸ்ஸில் ஏறி அந்த ஊருக்கு செல்வோம் இல்லையா அது போலத்தான் செங்கோட்டையன் ஏறப் போகும் பஸ்சும்


Palanisamy Sekar
நவ 26, 2025 20:16

திமுக இன்றையதினம் ஒவ்வோர் ஓட்டு வைத்திருப்பவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு அவர்களை வைத்தே பிரச்சாரத்தை துவங்கிவிட்டது. உதாரணம் கருணாஸ். இப்போது அந்த ஆளை வைத்துக்கொண்டே அதிமுகவை தொடர்ந்து விமர்சிக்கின்றது. ஆனால் எடப்பாடியோ கட்சியில் ஒவ்வோர் முன்னோடியையும் விரட்டி விடுகின்ற கோலத்தை என்னென்பது? தன்னை ஒரு எம்ஜி யார் போலவும் அம்மாவை போலவும் நினைத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு நீக்குவதை பார்க்கும்போது அவர் திமுகவின் பி டீமோ என்றுதான் தோன்றுகின்றது. கொடநாடு வழக்கு தன்மீது பாயாமல் பார்த்துக்கொண்டு ஸ்டாலினுக்கு அவர் மறைமுகமாக உதவுகின்றாரோ என்று சந்தேகம் வருகின்றது. செங்கோட்டையன் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி. அவருக்கு பாடம் கற்பிக்க விமர்சிப்போரை பார்த்தல் பாவமாக இருக்கின்ற்து.


Thiru
நவ 26, 2025 20:07

திராவிட மாப்பிள்ளையின் விளையாட்டுகள்


Palanisamy Sekar
நவ 26, 2025 19:52

செங்கோட்டையனை போன்ற களப்பணியாளர்களை ஒப்பீடு செய்திட இன்றைய சூழலில் ஒருவருமே கிடையாது என்பதுதான் உண்மை. தொகுதியில் ஒவ்வொருவரின் குடும்பத்தினரையும் நன்கு தெரிந்துவைத்திருப்பவர் செங்கோட்டையன். அம்மா ஜெ அவர்களுக்கு தொகுதி பிரச்சார சுற்றுப்பயணத்தை செங்கோட்டையன்தான் ஏற்பாடு செய்வார். அதிமுகவில் ஆரம்பகாலத்து உறுப்பினர் மட்டுமல்ல மந்திரியாக இருந்த நிலையிலும் திமுக இவரை பற்றி ஊழல்களை சொன்னது கிடையாது. திமுகவுக்கு சிம்மசொப்பனம்தான் செங்கோட்டையன். விஜய்க்கு சரியான வழிகாட்டி விஜய்க்கு அரசியல் குருவாக இருக்கப்போகிற நல்ல மனிதர். தான்தான் பெரிய ஆள். எம் ஜி யார் போன்று தன்னை எண்ணிக்கொண்டு எடப்பாடியால் கட்சியின் அழிவுக்கு செங்கோட்டையனை நீக்கினதில் வரலாற்று பிழை செய்தவர் எடப்பாடி. செங்கோட்டையன் தனக்கு பதவி வேண்டும் பணம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. தொடர்ந்து அதிமுக தோல்வியை தழுவுகின்றதே என்கிற வருத்தத்தில் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். முன்னாள் துணை முதல்வரை நீக்கி தனது இடத்தை பாதுகாத்துக்கொண்ட பழனிச்சாமியின் செயல்கள் கட்சிக்கு அழிவையே தேடி தந்துவிட்டது என்று உறுதியாக சொல்வேன். அதிமுகவுக்கு இதில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் பின்னடைவே. தாம் தூம் என்று கட்சியை சிதறிடுக்கும் பழனிச்சாமிக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவே. பாஜக கூட தேர்தலுக்கு பின்னர் வருந்தும். நொந்துகொள்ளும் பழனிச்சாமியே காரணம் என்று தெளிவுபட சொல்லும். கோவையில் பாஜகாவுக்கும் சரி அதிமுகவுக்கும் சரி சரிவைக்கொடுக்கும் என்பதிலே மாற்றுக்கருத்தே இல்லை என்பேன். அரவணைத்து அரசியல் செய்யத்தெரியாத பழனிச்சாமியின் செயல்தான் செங்கோட்டையனுக்கு செல்வாக்கினை கொடுக்கப்போகிறது. செங்கோட்டையனின் நல்ல மனதுக்கு எல்லாமே அவருக்கு புகழை கொடுக்கும் என்பதில் சந்தோசம்தான்.


Mario
நவ 26, 2025 19:45

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா?


ப.சாமி
நவ 26, 2025 19:40

அனுபவம் உள்ள சீனியர் அனுபவம் இல்லாத ஜூனியரின் கீழ் பயன்மிக்க வேண்டிய நிர்ப்பந்தம்


Siva
நவ 26, 2025 19:23

விஜய் எல்.கே.ஜி படிச்சா நேரத்தில் இவர் எம்.எல்.ஏ. அவ்வளவு ஜூனியர் விஜய் கிட்டே சரண்டர். கேவலம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ