உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி அடையாளமுள்ள தெருக்களின் பெயரை மாற்றம் செய்ய பொது மக்களுக்கு அதிகாரம்

ஜாதி அடையாளமுள்ள தெருக்களின் பெயரை மாற்றம் செய்ய பொது மக்களுக்கு அதிகாரம்

சென்னை : ''ஜாதி அடையாளத்துடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, பொதுமக்களே முடிவு செய்யலாம்,'' என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கிராமப்புற மக்கள், தங்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவும், தேவைகளை கேட்டு பெறவும், ஒவ்வொரு ஆண்டும், ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள, 12,525 ஊராட்சிகளில், 10,000 ஊராட்சிகளில் நடக்கும், கிராம சபை கூட்டங்களில், முதல் முறையாக, 'டான் பி நெட்' இணையசேவை வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பேச உள்ளார். கூட்டத்தில், 16 பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்படும். அதில், குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, குப்பை சேகரிப்பு உட்பட பல்வேறு முதன்மை கோரிக்கைகளில், மூன்று தேவைகளை அந்த மக்களே முடிவு செய்வர். அதன்மீது, 'நம்ம ஊரு, நம்ம அரசு' என்ற திட்டத்தின்கீழ், உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, இழிவுபடுத்தும் பொருள் தரும், ஜாதி பெயர் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலை போன்ற பொது உள்கட்டமைப்புகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்று நடக் கும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு உட்பட பல்வேறு பெயர்களுக்கு பதிலாக, பூக்கள் பெயர் உட்பட பொதுப்பெயர்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு அரசாணையில், ஜாதியை அடிப்படையாக கொண்ட பெயர், ஒரு இடத்திற்கு இருந்து அதை மாற்ற வேண்டாம் என, கிராம மக்கள் தெரிவித்தால், அந்த பெயர் மாற்றப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பெயர் மாற்றம் வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தமிழக அரசின் ஒப்புதலுடன், பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். பாரபட்சமின்றி, இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, மக்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்கிறது. மேலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நுாறு நாள் வேலை திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர்கூறினார்.

மாத இறுதியில் வார்டு சபை கூட்டம்

''கிராம சபை கூட்டம், இன்று நடக்க உள்ள நிலையில், இம்மாத இறுதியில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள, 12,838 வார்டுகளில், 'வார்டு சபை' கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Yasararafath
அக் 11, 2025 19:30

இப்போதாவது பொதுமக்களுக்கு அதிகாரம் கிடைத்து இருக்கே.


Durai
அக் 11, 2025 18:43

GD Nayudu Bridge name has to be changed as GD Bridge, there should be uniformity in names, Telugu caste names are still given to new street, bridges.


முதல் தமிழன்
அக் 11, 2025 16:39

இட ஒதுக்கிடு பற்றி அடிப்படை அறிவில்லாமல் கருத்து பதிய வேண்டாம். ஜாதிகள் ஒழிந்தாலும், பல்லாயிரக்கானக்கான ஆண்டுகள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட இனத்திற்கு அரசு கொடுக்கும் அடிப்படை சலுகை. ஒரு சில சதவீதம் மட்டுமே முன்னேறியிருக்கிறார்கள் ஆகையால் இட ஒதுக்கிடு தொடரும். ஜாதிகள் பெயரளவில் இட ஒதிகீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதே தவிர வேறல்ல. ஜாதி பெயர்கள் இல்லையென்றாலும் எம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு தொடர்ந்து இட ஒதுக்கிடு கொடுக்கணும் வேறு பெயர்களில் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு.


ஆரூர் ரங்
அக் 11, 2025 18:52

இந்த 2000 ஆண்டு நசுக்கி பிதுக்கி கதையெல்லாம் பொய். எந்த சாதி சங்க மாநாட்டைப் பார்த்தாலும் நாங்க ஆண்ட பரம்பரை ன்னு பேனர் வைக்கிறார்கள்.


poobalan bala
அக் 12, 2025 17:25

ஜாதியை ஒழிக்கணும்னா முதலில் அரசு ஜாதி சான்று கொடுப்பதை நிறுத்த வேண்டும். படிக்க, சலுகை வாங்க, வேலை வாங்க ஜாதி வேண்டும். ஆனால் ஜாதி ஒழியனும்? எப்படி ஒழியும்?. இதே அரசு ஜாதி சார்ந்த திரைப்படம் எடுக்க கூடாதுனு சொல்லுமா?. அந்த ஜிடி நாயுடு ல நாயுடு என்ன படித்து வாங்குன பட்டமா?. தமிழர்க்கு ஒரு சட்டம், தெலுங்கர்க்கு ஒரு சட்டமா?.


அப்பாவி
அக் 11, 2025 16:13

பஞ்சாபில் சாதி உண்டா? சும்மா கேட்டேன்.


ஆரூர் ரங்
அக் 11, 2025 15:02

சென்னையில் கொலைகாரன் பேட்டை பகுதி மக்கள் எவ்வளவோ கெஞ்சியும் பலனில்லை. சொந்த விலாசத்தை கூறக் கூட வெட்கப்படும் நிலை. வழக்கம் போல கருணாநிதி பேட்டை ன்னு கூடவா மாற்றக் கூடாது?.


Ram pollachi
அக் 11, 2025 14:48

அரசியல்வாதி காரில் தொங்கிட்டு போன போதே நேர்மை செத்துப்போச்சு! அரசியல் கட்சிகளுக்கு எதற்கு தனி சின்னம், தனி கொடி, தனி கொள்கை?


Venugopal S
அக் 11, 2025 13:29

வட இந்திய பெயர்களான காந்தி, நேரு,பட்டேல், சாஸ்திரி எல்லாமே ஜாதி பெயர் தான்!


Balasubramanian
அக் 11, 2025 13:21

பாப்பிரெட்டிப்பட்டி, அய்யன் பேட்டை, உடையார்பாளையம், தேவராயர் பட்டினம், காசி செட்டி தெரு இதெல்லாம் அம்பேல் அப்படித்தானே?!


Tetra
அக் 11, 2025 16:19

காசி செட்டி தெரு எப்போதோ காசிம் அலி தெருவாக மாறி விட்டது. இந்த அரசாணை எல்லா தெருக்களையும் ஆங்கிலேய முகலாய பெயர்களை வைப்பதற்கான ஆணையே. மொத்தத்தில் சனாதன தர்மத்தை வீழ்த்தும் முயற்சியே


Rajan M K
அக் 11, 2025 13:09

முதலில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவும்.


Rajan M K
அக் 11, 2025 13:08

பகத்சிங் தெரு வை எப்படி டா மாற்ற முடியும். வேற வேலை இருந்தா பாருங்க. பள்ளியில் ஜாதி யை கேட்காதீர்கள். ஜாதி கட்சிகளை ஒழியுங்கள். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ரத்து செய்ங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை