சென்னை: லோக்சபா தேர்தலில் பா.ஜ., - பா.ம.க கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று(மார்ச்-19) இரு கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு கையெழுத்தாகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.https://www.youtube.com/embed/p1X6yQk8oC4கடந்த சில நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் அ.தி.மு.க.,வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பேச்சு நடத்தி வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துப் பேசினர். ஆனால், நாங்கள் பழனிசாமியை சந்திக்க செல்லவில்லை என, அந்த எம்.எல்.ஏ.,க்கள் மறுப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ம.க., எம்.எல்.ஏ., சேலம் அருள், பழனிசாமியை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது.இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முடிவெடுப்பதற்காக பா.ம.க.,வின் உயர்மட்டக் குழு நேற்று(மார்ச்18) கூடியது. லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.ம.க., நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க., மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், 'பா.ஜ.,வுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று(மார்ச்-19) காலை பா.ஜ., பா.ம.க., கட்சிகளிடையே தொகுப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இதற்காக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்து பேசினர்.