உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயலட்சுமியுடன் உடன்பாடு செய்ய வாய்ப்பில்லை!

விஜயலட்சுமியுடன் உடன்பாடு செய்ய வாய்ப்பில்லை!

மதுரை: “கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேடில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளன,” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.நேற்று அவர் அளித்த பேட்டி: என் மீது ஆதாரமில்லாத அவதுாறான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; 15 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இவ்வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வழக்கில் உடன்பாடு செய்ய வாய்ப்புமில்லை, தேவையுமில்லை. திருமணம் செய்யக்கூடாது என்பது ஈ.வெ.ரா., கோட்பாடு. 'என்ஜாய்மென்ட் வித் அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி' என அவர் கூறினார். ஆனால், எனக்கு எதிராக ஈ.வெ.ரா., பக்தர்கள் பேசுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளன. மார்க்கிஸ்ட் கட்சி எந்த பொது பிரச்னைக்கு போராடி வருகிறது? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அக்கட்சி குரல் கொடுக்கவில்லை. பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மாநில செயலர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி எனக் கூறுகிறார். மார்க்சிஸ்ட் கட்சி ஜீவானந்தத்துடன் செத்து விட்டது. சங்கரய்யாவுடன் முடிந்து போய் விட்டது.பல தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக செயல்பட்ட நிலையில், தற்போது 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, மார்க்சிஸ்ட் கட்சி குறுகி நிற்கிறது. அக்கட்சியின் புரட்சி, போராட்டங்களை எல்லாம் வறட்சியாக்கி விட்டது. நடிகை விஜயலட்சுமி விவாகரத்தை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றத்தை நாடி உள்ளேன். தமிழகத்தில் 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி என்றால் தமிழகத்தில் ஒரு லட்சம் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகத்தானே அர்த்தம்? இவ்வாறு அவர் கூறினார்.

எல்லாம் நல்ல காதல் தான்!

வார்த்தை நாகரிகம் என பேசும் தலைவர்கள் யார்? வார்த்தை நாகரித்தை பற்றி, எங்களுக்கு கற்றுத் தரக்கூடிய அருகதையும் தகுதியும் இங்கு யாருக்கும் இல்லை. என்னை திட்டினால், ஒரு அடையாளம் கிடைக்கிறது. அதனால் சிலர் எதையாவது செய்கின்றனர். இதற்கு பதில் சொல்வதற்கு ஒரு நாள் வரும். கள்ளக் காதல், நல்ல காதல் என எதுவும் கிடையாது. எல்லாம் நல்ல காதல் தான். கள்ள உறவை, திருமணம் கடந்த உறவு என சொல்பவர்களும் இவர்கள் தான். இவர்களது தலைவரின் தத்துவம் தெருவில் சந்தி சிரிக்கிறது. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sridhar
மார் 04, 2025 14:16

சீமானின் பேச்சு கம்யூனிஸ்ட் திமுக போன்ற கட்சிகளை பொறுத்தவரை வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அசிங்கத்தை பற்றி பேச அக்கட்சிகளுக்கு தகுதி இல்லைதான். ஆனால், பொதுமக்கள் அல்லது அண்ணாமலை போன்ற தலைவர்கள் கேட்கலாமே? இவ்வளவு நாட்களாக அந்த பெண் யாரென்றே தெரியாது என்று சொல்லிவந்த சீமான், இன்று ஒன்றாக இருந்தோம் பிறகு "பிரிந்தோம் ங்கறாரு அதுதானய்யா வழக்கே ஏன் அந்த பெண்ணை பிரிந்தாய்? ஏமாற்றினாயா என்ற கேள்விகளுக்கு விடை வேண்டும் அல்லவா? அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்க்கு இழப்பீடு நிச்சயமாக உன்னிடமிருந்தான் கறக்கப்படவேண்டும். இவ்வளவு நாட்களாக அந்த பெண் கண்ணீரும் கபலயுமாக வீடியோ வெளியிட்டபோது நீயும் உன் ஆட்களும் ஏளனம் செய்துகொண்டுரிந்தீர்களே, இனி நீ பெரிய பெண்கள் காவலன்போல் பேசமுடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை